நாளை (ஜூன் 7,2018) ரஜினி நடித்த காலா படம் வெளியாகவிருக்கிறது. கர்நாடகாவில் இப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக சென்னை போயஸ் கார்டனில் இன்று காலை 8.30 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த்.அப்போது அவர் கூறியதாவது… காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று
செய்திகள்
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் 22ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதனையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். அவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `துருவ நட்சத்திரம்’. இதில் விக்ரம் நாயகனாகவும், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். ஒண்ராகா
‘காளி’படத்தைத் தொடர்ந்து ‘திமிரு புடிச்சவன்’ என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்துக் கொண்டிருக்கிறார். இதனை கணேஷா என்பவர் இயக்குகிறார். எஸ்.ஏ சந்திர சேகரன் நடிக்கும் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இவற்றைத் தொடர்ந்து ஆண்டருலூயிஸ் இயக்கத்தில் ‘கொலைகாரன்’ எனும் படத்திலும் நடிக்கிறார்.இப்படத்தில்
ரஜினி நடித்திருக்கும் காலா படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ் தயாரித்திருக்கிறார். மருமகனின் தயாரிப்பில் ரஜினி நடிக்கிறார் என்றதுமே, இது மகளுக்கான சீதனம் என்று எல்லோரும் பேசத் தொடங்கினார்கள். ஆனால், உண்மை அப்படி இல்லையாம். இந்தப்படத்தில் நடிக்க எனக்கு இவ்வளவு சம்பளம் என்று ரஜினி கேட்டு வாங்கிக் கொண்டதாகச் சொல்கிறார்கள். படத்தில் நடிக்க ஐம்பது கோடி சம்பளம் பேசியிருக்கிறாராம்
வித்யா பாலன் நடிப்பில், இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் “தும்ஹாரி சுலு”. திருமணமான பெண் ஒருவருக்கு வானொலியில் வேலை கிடைப்பதால் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றி இத்திரைப்படம் கூறுகிறது. இந்தப் படத்தில் வித்யா பாலனின் கணவராக மானவ் கவுல் நடித்திருப்பார். நல்ல வரவேற்பினைப் பெற்ற இத்திரைப்படத்தை தமிழில் காற்றின் மொழி என்கிற பெயரில்
இந்தியில் புகழ் பெற்ற இயக்குநர் மகேஷ்பாபு மஞ்ரேக்கர் கேங்ஸ்டரை மையமாக கொண்ட புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் ஸ்ருதிஹாசன் மாறுபட்ட கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அதிகார பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வித்யுத் ஜமால் நாயகனாக நடிக்கிறார். பீரியட் ஃபிலிமாக உருவாகி வரும் இந்தப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு
2010 ஆம் ஆண்டு வெளியான பாணாகாத்தாடி படம் மூலம் அறிமுகமான அதர்வாவுக்கு எட்டுப்படங்கள் நடித்திருந்தாலும், இதுவரை ஒரு பெரிய வெற்றியை அடையவில்லை. ஆனாலும் அவருக்குப் படங்களுக்குக் குறைவில்லை. அதர்வா நடிப்பில் தற்போது ‘செம போத ஆகாத’, ‘பூமராங்’, ‘100’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் செம போத ஆகாத திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. ‘100’
நார்வே நாட்டில் ரஜினி நடித்த காலா படத்தைத் திரையிடப் போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு…. எமது அன்பான நோர்வே வாழ் தமிழர்கள், நடிகர் .ரஜனிகாந்த் ரசிகர்கள், மற்றும் அவருடைய நலன் விரும்பிகள் அனைவருக்கும், வணக்கம்! எமது தாயகத்தில் இருந்து ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து ஐந்து தசாப்தங்கள் கடந்து விட்டது.
காலா பட விவகாரம் தொடர்பாக ரஜினிக்கு ஆதரவாக நடிகர் விஷால் பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது…. ரஜினி சார் நடிச்த காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடக் கூடாது தடை செய்ய வேண்டும் என சில அமைப்புகள் கூறுகிறார்கள். கர்நாடகா பிலிம் சேம்பர் அவர்களிடம் பேசியுள்ளோம்.இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடந்தது நாளை காலை முடிவு எடுக்கப்படும் என கூறியிருக்கிறார்கள். சினிமா வேறு அரசியல்





















