2020-22 ஆம் ஆண்டிற்கான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நவம்பர் 22,2020 அன்று நடைபெற்றது. அப்போது, தயாரிப்பாளர் சங்கத்தில் மொத்தம் 1,303 வாக்குகள் இருந்தன. அவற்றில் 1,050 வாக்குகள் பதிவாகின. அத்தேர்தலில் முரளி இராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு
சினிமா
வினோத்குமார் எனும் புதியவர் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஷால்.இது அவருடைய 32 ஆவது படம். இப்படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். இதற்கடுத்து விஷால் நடிக்கும் படம் மார்க் ஆண்டனி.விஷாலின் 33 ஆவது படமான அப்படத்தை இயக்குவது ஆதிக்ரவிச்சந்திரன். எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத் தயாரிக்கிறார்.
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் தலைவி. அப்படத்தைத் தொடர்ந்து அடுத்து அவர் இயக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு இலண்டனில் தொடங்கியுள்ளது. இந்தப்படத்தில் அருண்விஜய் கதாநாயகனாகவும் எமிஜாக்சன் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.ஒரு குழந்தைக்குத் தாயாக எமிஜாக்சன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் இலண்டனிலேயே
விஜய்சேதுபதி,சூரி,கிஷோர் மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் விடுதலை. இப்படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். எல்ரெட்குமாரின் ஆர்.எஸ் இன்ஃபோடெய்ட்மெண்ட் நிறுவனம் தயாரித்துவருகிறது. ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார்.அவர் இப்படத்திற்கான பாடல்கள் அனைத்தையும் முடித்துக்
மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் மலையாளம் மற்றும் தமிழ்ப்படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்தப்படத்துக்கு அடுத்து ஒரு புதியப்டத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அந்தப்படத்தை பாலாஜிமோகன் இயக்கவிருக்கிறாராம். டாக்டர் முரளிமனோகர் தயாரிக்கும் அந்தப்படத்தின் மொத்தப்படப்பிடிப்பும்
கமல்ஹாசன், ரவீனாடண்டன், மனீஷாகொய்ராலா உள்ளிட்ட பலர் நடிப்பில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ஆளவந்தான். கமல்ஹாசனே திரைக்கதை அமைத்திருந்த அந்தப்படம் வெளியாகும் நேரத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளியான அந்தப்படம் அவ்வளவு எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கி பெரும் தோல்வியைச் சந்தித்தது. கலைப்புலிதாணு,அப்போதே சுமார்
சூர்யா இப்போது சிறுத்தைசிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டோ அல்லது அதற்கு இடையிலேயோ, பாலா இயக்கும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்டது. இவ்விரண்டு படங்களையும் முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் சொல்லப்பட்டது. இப்போது
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த அமலாபால், 2014 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய்யைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். 2016 ஆம் ஆண்டில் நடிகை அமலாபாலுக்கு, இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சுந்தர்ஜித்சிங்கின் மகன் பவ்நிந்தர்சிங்
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு படம் 2023 பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துக்கொண்டிருக்கும் படமும் அதே 2023 பொங்கலன்று திரைக்கு வரவிருக்கிறது என்றொரு செய்தி உலவிக்கொண்டிருகிறது. அதற்குக் காரணம், அண்மையில் அந்தப்படத்தின் தமிழக திரையரங்கு வெளீயீட்டு உரிமையை ரெட்ஜெயண்ட் நிறுவனம்
கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கிய சரவணன் இப்போது ஒரு புதிய படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. இப்போதுதான் சசிகுமார் நாயகன், படம் தொடங்கும்போது படத்தின் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் கருணாஸ். அவரை வைத்துச் சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன்பின்,






















