சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அப்படம் தீபாவளி நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மாவீரன்.அந்தப்படத்தை மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின்
சினிமா
இப்போது நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் வாரிசு. இது விஜய்யின் 66 ஆவது படம். இப்படம் ஏப்ரல் 6 அன்று தொடங்கியது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, தேசிய விருது பெற்ற இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். இப்படத்துக்குக் கதை,திரைக்கதையை வம்சி பைடிப்பள்ளி – ஹரி – அஹிஷோர் சாலமன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
விஷால் இப்போது, வினோத்குமார் எனும் புதியவர் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். விஷாலின் 32 ஆவது படமான இதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து விஷால் நடிக்கும் படம் மார்க் ஆண்டனி.விஷாலின் 33 ஆவது படமான அப்படத்தை
நடிகர் சந்தானம் நடிப்பில் அண்மையில் குலுகுலு படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கடுத்து அவர் நடித்துள்ள ஏஜெண்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட சில படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. இவற்றிற்கடுத்து அவர் நடிக்கும் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. அதேசமயம், அவர் நடிக்கும் அடுத்த படத்துக்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கிறதாம். பிரபல
சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் பத்துதல. இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படத்தைத்தான் பத்துதல என்கிற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வந்தார்.அதன்பின்,
ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில், ராஜமௌலி இயக்கத்தில், டிவிவி தானய்யா தயாரித்த படம் ‘ஆர்ஆர்ஆர்.மார்ச் 25 ஆம் தேதி இப்படம் வெளியானது.ஆந்திரா மட்டுமின்றி தமிழ்நாடு மற்றும் வடமாநிலங்கள் உட்பட எல்லா இடங்களிலும் பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்றது இப்படம். இப்படத்தின் இணைய வெளியீட்டு உரிமையை ஜீ நிறுவனம் பெற்றிருந்தது.மே 20 ஆம் தேதி முதல் ஜீ நிறுவனத்தில் எல்லா
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் நானே வருவேன்.இந்தப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ஓம்பிரகாஷும் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவும் பணிபுரிகின்றனர். இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக விஜய் முருகன்,படத்தொகுப்பாளராக பிரசன்னா ஜி.கே ஆகியோர் பணிபுரிகின்றனர். இப்படத்தில் நாயகன் வில்லன் ஆகிய இரண்டு பாத்திரங்களையும் தனுஷ்
சூர்யா இப்போது பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால்,இயக்குநர் வெற்றிமாறன் வாடிவாசல் படப்பிடிப்புக்குத் தயாராகததால் வணங்கான் படம் முடிவடைந்ததும் சிறுத்தைசிவா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொள்ளவிருக்கிறார்
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ ஆகிய படங்களைக் கொடுத்த அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கிவருகிறார். சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல்
இந்திய திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் விருதுகளில் மிகவும் மதிப்பு மிகுந்த விருதுகள் என்றால் அது, தேசிய திரைப்பட விருதுகள். ஆண்டுதோறும் சிறந்த நடிகர்கள், நடிகைகள், திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.




















