கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கிய சரவணன் இப்போது ஒரு புதிய படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. இப்போதுதான் சசிகுமார் நாயகன், படம் தொடங்கும்போது படத்தின் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் கருணாஸ்.
சினிமா
2013 ஆம் ஆண்டு வெளியான நேரம், 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் ஆகிய இரு மாபெரும் வெற்றிப் படங்களுக்குப் பிறகு ஏழாண்டுகள் கழித்து அப்படங்களின் இயக்குநர் அல்போன்ஸ்புத்திரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் கோல்டு. மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் வெளியாகவிருக்கும் இந்தப்படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர்.அஜ்மல் முக்கிய வேடமொன்றில்
நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21 கோடியே 29 இலட்சம் கடன் பெற்றிருந்தார். ஒருகட்டத்தில் அந்தக் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இது தொடர்பாக, விஷாலும் லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் கடன் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, விஜய்சேதுபதி உட்பட பலர் நடிக்கும் படம் பிசாசு 2. இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக நடந்துவருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் ஒரு பாடல் காணொலி நேற்று வெளியானது. கார்த்திக் ராஜா இசையில், நெஞ்சை கேளு என்று தொடங்கும் அந்தப்பாடலை கபிலன் எழுதியுள்ளார். நெஞ்சை கேளு அது சொல்லும் உறவென்ன வழித்துணையா கண்ணைக் கேளு அதுசொல்லும் இரவென்ன இவள்
இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், அறிவழகன் இயக்குநராக அறிமுகமான படம் ‘ஈரம்’. ஆதி, சிந்து மேனன், சரண்யா மோகன், நந்தா, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னணி இசை, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் என பார்வையாளர்களைப் படம் கட்டிப் போட்டது. இந்தப் படத்துக்குப் பிறகு ‘வல்லினம்’, ‘ஆறாது
நடிகர் விஜய்க்கு சென்னை நீலாங்கரையில் மிகப்பெரிய பங்களா இருக்கிறது. அங்குதான் குடும்பத்துடன் வசித்துவருகிறார். அதுதவிர அடையாறில் பெரிய அலுவலகம் ஒன்றும் வைத்திருக்கிறார். இப்போது அவர் புதிதாக ஒரு குடியிருப்பை வாங்கியிருக்கிறாராம்.அதுபற்றி திரையுலகில் ஆச்சரியமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். காரணம் அதன்விலை. சென்னையில் இதுவரை இல்லாத விலையாக, ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில்
விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கலாம். அதன்படி இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். பாராளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா ஜூலை 25 அன்று பதவியேற்றுக் கொண்டார். அவர் தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்
2010 ஆம் ஆண்டு வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமானவர் சுதாகொங்கரா. அப்படம் ஓடாததால் அடுத்த படம் எடுக்கப் பெரும் இடைவெளி. 2016 ஆம் ஆண்டு அவருடைய அடுத்த படமான இறுதிச்சுற்று வெளியானது. பெரும் வெற்றியைப் பெற்றது. அடுத்து அந்தப்படத்தையே இந்தியில் எடுத்தார். அவற்றிற்குப்பின் அவருடைய தாய்மொழியான தெலுங்கில் ஒரு படம் இயக்கினார்.அது 2017 இல்
2012 ஆம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி திரைப்படம் இயக்குநர் பா.இரஞ்சித்தின் முதல் படம்.அதுதான் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் முதல்படம்.அப்படம் பெரிய வெற்றி பெற்று இருவருக்கும் நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. அதன்பின், பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய 5 படங்களுக்கும் இசை சந்தோஷ் நாராயணன்தான். இப்படங்களிலும் பல வெற்றிப்பாடல்களைக் கொடுத்து
கிஷோர், சூரி, விஜய்சேதுபதி மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார்.அவர் இப்படத்திற்கான பாடல்கள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார். இப்படத்தின் வேலைகள் தொடங்கி இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.




















