சினிமா செய்திகள்

நடிகையின் தகிடுதத்தம் சிக்கலில் சந்தானம் படம்

சந்தானம் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 21 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது.அதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.

2015 இல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தியா பாகிஸ்தான் படத்தை இயக்கிய என்.ஆனந்த், சந்தானம் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

இயக்குநர் ஆனந்த்தின் தம்பி ஓம் இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.இந்தப்படத்துக்கு டி.இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். முதன்முறையாக சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு இமான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்தின் படப்பிடிப்புதான் அக்டோபர் 21 இல் தொடங்குவதாக இருந்தது.

படத்தில் நாயகியாக நடிக்க பல்வேறு நடிகைகளப் பரிசீலித்து கடைசியில் தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கும் பாயல் எனும் நடிகையை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

கதை மற்றும் படப்பிடிப்பு தேதிகளை உறுதிசெய்த பின்பு, நல்ல சம்பளம் பேசி குறிப்பிடத்தக்க அளவில் முன்பண்மும் கொடுத்து ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

முன்பணம் வாங்கும்வரை படக்குழு சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நடிகை, ஒப்பந்தம் கையெழுத்தாகி முன்பணமும் வாங்கிய பிறகு, நீங்கள் சொன்ன தேதிகளில் நான் ரவிதேஜா படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும். அதனால் உங்கள் படப்பிடிப்பு தேதிகளை மாற்றி வையுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

இதைக்கேட்டு படக்குழு அதிர்ச்சியாகியிருக்கிறது. அவரிடமும் கேட்டுவிட்டுத்தான் படப்பிடிப்பு தேதிகளை முடிவு செய்தோம். அப்போது ஒப்புக்கொண்டவர் இப்போது மாற்றிப் பேசுகிறாரே? என அதிர்ச்சியடைந்திருக்கிறார்களாம்.

இப்போது அவர் மீது தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்யவிருக்கிறார்களாம். அதோடு இந்தப்படத்துக்கு அவர் வேண்டாம், வேறு நாயகி தேடுவோம் என முடிவு செய்து தேடல் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

Related Posts