விஷால் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் இரும்புத்திரை, சண்டக்கோழி 2 ஆகிய இரண்டு படங்களையும் அவரே தயாரித்துக் கொண்டிருக்கிறார். அவற்றில் இரும்புத்திரை படம் முழுமையாகத் தயாராகிவிட்டதாம். வேலைநிறுத்தம் இல்லாமலிருந்தால் மார்ச் 29 அன்று வெளியாகியிருக்கும். அப்படம் வெளியாக வேண்டுமானால் அப்படம்
சினிமா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மெர்க்குரி படத்தில் பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வசனங்களே இல்லாத இந்தப் படம், ஒரு சைலண்ட் த்ரில்லராக உருவாகி இருக்கிறது. பின்னணி இசையின் மூலமே நகரும் இந்தப் படத்தில் பிரபுதேவா எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
நரகாசூரன் பட வெளியீடு தொடர்பாக இயக்குநர் கார்த்திக் நரேனுக்கும், அந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் இயக்குநர் கவுதம் மேனனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், தமிழ்த் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.அது சற்று ஓய்ந்திருந்தது. இந்நிலையில், ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அவரது டுவிட்டர் பக்கத்தில் கவுதம்மேனன் மீது குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக
மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன், இவரது மனைவி மீனாட்சி. இவர்கள் நடிகர் தனுஷ் தங்களது மூத்த மகன் என உரிமை கோரி வருகின்றனர். இவர்கள் நடிகர் தனுஷிடம் மாதம் ரூ.65 ஆயிரம் பராமரிப்பு செலவு கோரி மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதையேற்று மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன்
டிஜிட்டல் சேவைக் கட்டண உயர்வுக்கெதிராக தென்னிந்தியத் திரையுலகம் தொடங்கிய வேலைநிறுத்தம் மற்ற எல்லா மாநிலங்களில் முடிவுக்கு வந்துவிட்டாலும் தமிழ்த் திரையுலகம் இன்னும் வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்ளவில்லை. அதேசமயம் திரையரங்குகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் பிற மொழிப்படங்கள் தமிழகத்தில் திரையிடப் படுகின்றன. மார்ச் 30 ஆம் தேதி சிரஞ்சீவி மகன் ராம்சரண், சமந்தா ஆகியோர்
இயக்குநர் கார்த்திக்சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் முதல்பிரதி அடிப்படையில் தயாரித்திருக்கும் படம் மெர்க்குரி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வசனங்களே இல்லாத இந்தப் படம், ஒரு சைலண்ட் த்ரில்லராக உருவாகி
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் நயன்தாரா. அவர் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படமும் அப்படித்தான். இந்தப் படத்தை புதுமுகம் நெல்சன் இயக்குகிறார். சிம்பு நடிப்பில் தொடங்கப்பட்டு நின்று போன வேட்டை மன்னன் படத்தை இயக்கியது இவர்தான். அந்தப்படம் வராததால் இன்னும் புதுமுகமாகவே இருக்கிறார். இந்தப் படத்தில் நயன்தாராவின் பெயர்
மார்ச் 1,2018 முதல் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் ஒரு மாதமாகத் தொடர்கிறது. ஆனால் இன்னும் முடிவை நோக்கி ஒருபடி முன்னேற்றம் கூட ஏற்படவில்லை என்கிறார்கள். இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக கமல், ரஜினி போன்ற முன்னனி நடிகர்கள் நிறைவாக இல்லை. வேலைநிறுத்தத்தில் எனக்கு உடன்பாடில்லை என்று ரஜினி வெளிப்படையாக அறிவித்தார். அவர் நடித்த காலா பட
புதிய திரைப்படங்களைத் திரையிடும் டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து, மார்ச் 1-ந்தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி உள்ளனர்.மார்ச் 16-ந்தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளையும் இரத்து செய்து விட்டனர். இதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் முடங்கிக்கிடக்கிறது. இதுதொடர்பாக, டிஜிட்டல் சேவை அமைப்பினருடனும், திரையரங்கு உரிமையாளர்களுடனும் நடந்த
பிரிட்டன் நான்காவது தேசிய திரைப்பட விழாவில் ‘மெர்சல்’ படத்துக்கு, சிறந்த படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழா 2018க்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், சிறந்த வெளிநாட்டுப் படம் பிரிவில், விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில், விஜய்



















