த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, முரளி ஷர்மா, ஜெயராம், தபு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள தெலுங்குப் படம் ‘அலா வைகுந்தபுரம்லோ’. தமன் இசையமைத்துள்ளார். சனவரி 12 ஆம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு.அதோடு
சினிமா
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துவரும் இந்தியன்-2 படப்பிடிப்பில் பிப்ரவரி 19 ஆம் தேதியன்று இரவு கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் உதவி இயக்குநர் உட்பட மூவர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். துணை ஆணையர் நாகஜோதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. மார்ச் 2 ஆம் தேதியோடு ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ‘மாஸ்டர்’ வாய்ப்பு தொடர்பாகவும், படப்பிடிப்பு நிறைவடைந்தது தொடர்பாகவும்
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் துப்பறிவாளன் 2 படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது.இந்தப்படத்தின் தயாரிப்பாளரும் விஷால்தான். இலண்டனில் படப்பிடிப்பு முடிந்து சில வாரங்கள் ஆகியும் அப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு குறித்து எந்தச் செய்தியும் இல்லை. விஷால் சக்ரா படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் என்பதால் இந்தப்படத்தின் வேலைகள் நடக்கவில்லை என்று
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் விஷால் தலைவரானார்.அவர் செயல்களில் அதிருப்தி அடைந்த எதிரணியினர் சங்க அலுவலகத்தைப் பூட்டிப் போராட்டம் நடத்தினர். அதனால் தமிழக அரசு, தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தனி அதிகாரியையும், பாரதிராஜா தலைமையில் 8 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவையும்
இன்று (மார்ச் 1,2020)மாலை 4 மணிக்கு சூர்யா 39 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி,சூர்யா 39 ஆவது படத்தை ஹரி இயக்குகிறார். அந்தப்படத்துக்கு அருவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு இசை டி.இமான். முதன்முறையாக அவர் சூர்யா படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு
சூர்யா நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப்படத்தின் வேலைகள் முடிவடைந்துவிட்டன. இது சூர்யாவின் 38 ஆவது படம். அடுத்து, 39 ஆவது படத்தில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் சூர்யா 40 படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. அதன்படி வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா
இந்தியன் 2 படம் தொடங்கியதிலிருந்து பல்வேறு சிக்கல்கள். அவற்றை ஒவ்வொன்றாகக் கடந்து படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருந்தது. திடீரென படப்பிடிப்புத் தளத்தில் பிப்ரவரி 19 அன்று நடந்த விபத்து காரணமாக மீண்டும் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் இருக்கும் அரங்கில் இன்னும் நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறதாம். அதன்பின் பெரம்பூர் பின்னிமில்லில்
நேற்று இயக்குநர் ஆர் சுந்தரராஜன் இறந்து விட்டதாக வதந்தி பரவியது. மிக வேகமாக சமூகவலைதளங்களில் இச்செய்தி பரவியது. அந்நேரம் பலர் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனுக்குத் தொலைபேசியில் அழைத்திருக்கின்றனர். அவர் எந்த அழைப்பையும் எடுக்கவில்லை. இதனால் இச்செய்தி உண்மையா? எனப்பலரும் வினவத் தொடங்கினர். இந்த வதந்தி எதனால் என்பதற்கும் அவர் ஏன் கைபேசியை எடுக்கவில்லை என்பதற்கும் விடை
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை லலித் குமார் தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெற்று வருகிறது. இதில் ஸ்ரீநிதி ஷெட்டி,கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிகுமார், மிருணாளினி உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்துள்ளனர். ‘கோப்ரா’ என்று





















