எதிர்பாராத வகையில் ஒரு மர்ம மரணம்.படத்தின் நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் மரணமடைகிறார்.அவர் இறப்பதற்கு முந்தைய நாள் வரை அவரை யாரென்றே தெரியாத நாயகன் அருள்நிதி, தன் மீது கொலைப் பழி வந்துவிடுமோ? என அஞ்சி நடுங்குகிறார். அந்த மரணம் எப்படி நடந்தது? அருள்நிதிக்கு என்னவாயிற்று? என்பதைச் சொல்வதுதான் படம்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியின் தலைவராக இருக்கும் தோனி ரசிகர்களால் செல்லமாக தல என அழைக்கப்பட்டு வருகிறார். சென்னையில் நடக்கும் ஒவ்வொருப் போட்டியிலும் ரசிகர்களின் ’தல தல’ எனும் முழக்கம் விண்ணைப் பிளக்கிறது. அந்த அளவுக்கு சென்னை ரசிகர்கள் மனதில் நெருக்கமான இடத்தை தோனி பெற்றுள்ளார். அண்மையில் ரசிகர்கள் தல என்று அழைப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
ஹரஹர மகாதேவி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்ந் ஆகிய படங்களின் வணிக ரீதியான வெற்றியைத் தொடர்ந்து சன்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார். இது டிடெக்டிவ் திரில்லர் படம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை மே 2 ஆம் தேதி சென்னை பிரசாத்லேப்பில் நடைபெற்றது. பூஜையில் படத்தின் அரவிந்த்சாமி, இயக்குநர் சன்தோஷ்
தனுஷ் இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் அசுரன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் தனுஷுடன் மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், யோகிபாபு உட்பட பலர் நடிக்கிறார்கள். கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப்படத்தில் சிறப்புத்தோற்றத்தில் விஜயசேதுபதி நடிக்கிறார் என்று செய்திகள் வந்தன. அதில் எந்த உண்மையும் இல்லை என்று
ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்த ‘பூமராங்’ படத்தைத் தொடர்ந்து அடுத்த பட அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆர்.கண்ணன் இயக்கும் அந்தப்படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். ‘தில்லுக்கு துட்டு 2’ வெற்றிக்குப் பின் சந்தானம் நடிக்கும் படம் என்பதால் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு. இயக்குநர் ஆர்.கண்ணனின் முதல் படமான ‘ஜெயம் கொண்டான் படத்திலிருந்து அவருடன் பயணித்து வருகிறார்
விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஆஷிமா, சீதா, நாசர், சத்யன், குருசோமசுந்தரம், மயில்சாமி, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ள படம் கொலைகாரன். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார். த்ரில், சஸ்பென்ஸ் வகைப் படமான ‘கொலைகாரன்’ வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி ஏப்ரல் 29 அன்று அறிவிக்கவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.ஆனால் சொன்னபடி
தமிழ்த் திரையுலகில் 25 வருடங்களுக்கு மேலாக தனக்கென ஒரு தனி இடத்தையும், ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவர் அஜித். விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இவருடைய பலம். ஒவ்வொரு முறை வீழும் போதும் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வந்து முன்பு இருந்ததை விட பெரிய வெற்றி கொடுப்பார். நடிப்பைத் தாண்டி விளையாட்டு, தொழில்நுட்பம் என அனைத்து துறையிலும் முத்திரை பதித்தவர் அஜித். அவருக்கு இன்று 49-வது
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. 3 மாதங்கள் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்துகின்றனர். ரஜினிகாந்துடன் நயன்தாரா, யோகிபாபு ஆகியோரும் இணைந்து நடித்து வருகிறார்கள். அந்தப் படப்பிடிப்பு காட்சிகளை கைபேசியில் படம்பிடித்து இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். ரஜினிகாந்த், யோகிபாபு கிரிக்கெட் விளையாடுவது,
வங்கியில் பெற்ற கடனை அடைக்க முடியவில்லை.பெற்ற பிள்ளைகளும் கை கொடுக்கவில்லை என்கிற சூழலில் பரிதவிக்கும் விவசாயி. எந்த வறுமை வந்தாலும் விவசாயத்தை விட்டுக் கொடுக்காமல் படித்த இளைஞர்களை முன்னிறுத்தி வலிமையான விவசாயத்தை கொடுக்கும் வீர விவசாயியாக மாறுபவரின் கதையை மையமாகக் கொண்டு தயாராகியிருக்கும் படம் ஐ ஆர் எட்டு. கதை திரைக்கதை வசனம் இயக்குகிறார் என்.பி. இஸ்மாயில்.சிங்கமுகம்,
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என் ஜி கே படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா ஏப்ரல் 29 அன்று சென்னை தாஜ்கோரமண்டல் நட்சத்திர விடுதியில் நடந்தது. அந்நிகழ்வில், பாடலாசிரியர் உமாதேவி பேசும்போது….. இந்தக் குழுவில் முதன்முதலாகப் பாடல்கள் எழுதியிருப்பது மகிழ்ச்சி. செல்வா படைக்கும் பெண் பாத்திரம், விதிக்கப்பட்ட வாழ்க்கையை புறந்தள்ளும்






















