2023 தமிழர் திருநாளையொட்டி வெளியாகவிருக்கும் வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கிடையேயான போட்டிதான் இப்போதைய சூடான செய்தி. தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலக அளவிலும் இந்தப் போட்டி கடுமையாக இருக்கிறதாம். வாரிசு படத்தின் வெளிநாட்டு உரிமை 32 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. துணிவு
களவாணி,வாகைசூடவா, நய்யாண்டி, மஞ்சப்பை,சண்டிவீரன்,களவாணி 2 ஆகிய படங்களை இயக்கிய சற்குணம், தற்போது இயக்கியிருக்கும் படம் பட்டத்து அரசன். ராஜ்கிரண், அதர்வா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்தில் நடிகை ஆஷிகா ரங்கநாத் நாயகியாக நடிக்கிறார்.கன்னடத்தில் புகழ்பெற்றிருக்கும் அவர் இந்தப்படம் தமிழில் அறிமுகமாகிறார்.இவர்களோடு ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ், ராஜ்
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கடுத்து அந்நிறுவனத்தின் தயாரிப்பிலேயே இன்னொரு படம் நடித்துத் தருவதாகச் சொல்லிப் பெரும் தொகை பெற்றுள்ளார் கமல்ஹாசன். தலைவன் இருக்கிறான் என்று அப்படத்திற்குப் பெயர் வைத்திருப்பதாக அறிவிப்பெல்லாம் செய்தார்கள். ஆனால்,
அதர்வா இப்போது ஒத்தைக்கு ஒத்த உள்ளிட்ட சில படங்களில் நடித்துவருகிறார்.இந்நிலையில், அவருடைய வாய்த்துடுக்கால் ஒரு பெரியபடத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார் என்று திரையுலகில் பேசப்பட்டுவருகிறது. அதன்விவரம், நவம்பர் ஐந்தாம் தேதியன்று அறிவிக்கப்பட்ட படம் லால்சலாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் விக்ராந்த் ஆகியோரோடு ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் என
தமிழ்த்திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் அனிருத். கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜீத் ஆகிய முன்னணி நடிகர்கள் உட்பட தமிழின் முக்கியமான கதாநாயகர்கள் படங்களுக்கெல்லாம் இசையமைத்திருக்கிறார். இப்போது, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான்
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய் உட்பட பலர் நடிப்பில் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின்செல்வன் 1 பெரும் வெற்றி பெற்றுள்ளது.அதனால் படத்தில் பணியாற்றிய அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதனால், அப்படக்குழுவினர் தொடர்ந்து விருந்துகள் வைத்துக் கொண்டாடி வருகின்றனர். படத்தில் நடித்த நடிகர் நடிகையர்கள் உள்ளிட்ட
மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மம்முட்டி உட்பட பலர் நடித்த தளபதி படம் 1991 ஆம் ஆண்டு வெளியானது.அந்தப்படம் பெரும் வரவேற்பையும் ரஜினிகாந்தின் புதிய கவுரவத்தையும் கொடுத்தது. அதற்குப் பின் முப்பதாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் சம்பந்தப்பட்ட வேலைகள் நடந்துவருகின்றன. இந்தப்படத்துக்கான திரைக்கதை உருவாக்கும் பணிகளில் இயக்குநர்
ரஜினி இப்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இதற்கடுத்து டான் பட இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படமும் அவருடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. டான் இயக்குநருக்குத் தனியாக அலுவலகம் போட்டுக் கொடுத்து வேலைகளைத் தொடங்கச் சொல்லியிருக்கிறார்களாம். ஆனால், ஐஸ்வர்யா இயக்கும் படம் குறித்து இதுவரை எவ்வித
பல்வேறு சிக்கல்களைத் தாண்டி கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.தற்போது திருப்பதி அருகே படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. இப்போது இயக்குநர் ஷங்கர் திரைக்கதையிலும் சில மாற்றங்களைச் செய்திருக்கிறாராம். அதன்படி ஒரு புதிய கதாபாத்திரம் படத்தில் இடம்பெறவிருக்கிறதாம். முதல்பாகத்தில் இடம்பெற்ற நெடுமுடி வேணு கதாபாத்திரத்திற்கு மேலான காவல்துறை
அஜீத் அண்மையில் இலண்டன் சென்றிருந்தார். அவர் விடுமுறையைக் கழிப்பதற்காகவும் அவருக்கு விருப்பமான துள்ளுந்து ஓட்டுவதற்காகவும் அங்கே சென்றார் என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால்,அஜீத் அங்கே சென்றதற்கு இன்னொரு காரணமும் இருந்திருக்கிறது. அஜீத் அங்கே ஒரு வீடு வாங்கியிருக்கிறாராம். அதன் பத்திரப்பதிவுக்காகவே அங்கே சென்றதாகச் சொல்கிறார்கள். பல வசதிகள் கொண்ட ஒரு நவீன வீட்டை அஜீத்





















