‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீராக் காதல்’. நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோருடன்,
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியிருக்கிறார். ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.
2022 செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது பொன்னியின் செல்வன் முதல்பாகம். அப்படம் இதுவரை தமிழ்த்திரைப்படங்கள் தமிழ்நாடு திரையரங்குகளில் வசூலித்த தொகைகளைப் புறந்தள்ளி முதலிடம் பிடித்தது. ஒரு படம் வசூலிக்கும் மொத்தத் தொகையில் எல்லாப் பகிர்வுகளும் போக தயாரிப்பாளருக்குக் கிடைக்கும் தொகையை வைத்தே இந்தக் கணக்கு சொல்லப்படுகிறது. அந்த வகையில், பொன்னியின் செல்வன் முதல்பாகத்தில் சுமார்
நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21 கோடியே 29 இலட்சம் கடன் பெற்றிருந்தார். ஒருகட்டத்தில் அந்தக் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இது தொடர்பாக, விஷாலும் லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் கடன் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை
இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் ‘அச்சம் என்பது இல்லையே’ – மிஷன் சாப்டர் 1. இந்தப்படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் ஆகியோர் நாயகிகளாகவும் இவர்களூடன் அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின்,கதை மற்றும் திரைக்கதை எழுதியிருப்பவர் ஏ.மகாதேவ்.
தமிழ்த்திரையுலகத்தின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2’, ‘இந்தியன் 2’, ‘லால் சலாம்’, ‘ரஜினி 170’ ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதியபடம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்விவரம்… ‘அதே கண்கள்’,
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப்படத்தைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியிருந்தார். அதன்படி ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தைத் தொடர்ந்து
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் தற்போதைய தலைவர் முரளி இராமசாமி தலைமையிலான அணி அப்படியே போட்டியிடவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த அணியில் புதிதாக ஒரு பிரபலம் இணையவிருக்கிறாராம். அவர்? லைகா நிறுவனத்தின் தலைமை அதிகாரி தமிழ்க்குமரன். இவர்
விஜய்சேதுபதி அடுத்து சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தில் சந்தானம் இன்னொரு கதாநாயகன் போல் நடிக்கவிருக்கிறார். சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம்ரவி ஆர்யா உட்பட பலர் நடிப்பில் சங்கமித்ரா என்கிற படம் உருவாகும் என்று சொல்லப்பட்டது. இந்தப்படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்த தேனாண்டாள் நிறுவனம் பொருளாதாரச் சிக்கலில் சிக்கியதால் அது நடக்கவில்லை. இப்போது
ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்போது இயக்குநர் ஷங்கர் அப்படத்தின் திரைக்கதையிலும் சில மாற்றங்களைச் செய்திருக்கிறாராம். அதன்படி ஒரு புதிய கதாபாத்திரம் படத்தில் இடம்பெறவிருக்கிறதாம். முதல்பாகத்தில் இடம்பெற்ற நெடுமுடி வேணு கதாபாத்திரத்திற்கு மேலான காவல்துறை உயரதிகாரி வேடம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.





















