கதை என்கிற ஒன்றைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி தன் ரசிகர்களைத் திருப்திப்படுத்தினால் போதும் என்கிற எண்ணத்தில் தனுஷ் எடுத்திருக்கும் படம்தான் மாரி 2. தனுஷின் தோற்றம் மற்றும் நடவடிக்கைகளில் அவர் சென்னையில் பெரிய ரவுடி என்று சொல்கிறார்கள். அவரும் அதற்கேற்ப நடித்துத்தள்ளியிருக்கிறார். அவர் கூடவே
விமர்சனம்
காவல்துறையின் மந்திரச் சொல் ஒபே தி ஆர்டர். அதாவது சொன்னதைச் செய் அல்லது சொன்னதை மட்டும் செய். அந்த உத்தரவுக்குக் கட்டுப்படாமல் அடங்கமறுக்கிறார் நாயகன். அதன்விளைவும் அதன் பின்விளைவையும் தெறிக்கத் தெறிக்கச் சொல்லும் படம். இளமைத்துடிப்புடனும் கடமை உணர்ச்சியுடனும் காவல்துறையில் சேர்ந்து சமுதாயத்தைச் சீரமைக்க நினைக்கும் இளைஞர்கள் எல்லோரையும் காயடிக்கும் அந்தத் துறை இந்தப்பட
ஒரு ஏழை விவசாயி மகள் பெரும்பணக்கார விளையாட்டான மட்டைப்பந்தாட்ட வீராங்கனையாக உருவெடுத்து இந்திய மகளிர் மட்டைப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்து வெற்றி பெற எண்ணுகிறார் அது நடந்ததா? இல்லையா? என்கிற ஒற்றைக் கேள்விக்கான விடைக்குள் ஓராயிரம் உணர்ச்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது கனா. சொந்த அப்பா இறந்த துக்கத்திலும் கூட தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்குமளவுக்கு தீவிர
நாடகங்களின் அழிவுக்குத் திரைப்படங்களின் வளர்ச்சி காரணம் என்கிற குற்றச்சாட்டு உண்டு, ஆனால் இந்தத் திரைப்படம் நாடகங்களின் வளர்ச்சிக்குத் துணையாக அமைந்திருக்கிறது. மூத்த நாடக நடிகர் ஆதிமூலம் என்கிற அய்யா வேடத்தில் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். இளவயதில் ஒரு நாடகக் காட்சி, நடுத்தர வயதில் ஒரு நாடகக் காட்சி, முதிர்ந்த வயதில் ஒரு காட்சி ஆகிய மூன்று தோற்றங்களில் வருகிறார்
ஒரு கதாநாயகன் அவருக்கு நான்கு நண்பர்கள். ஐவரும் இணைந்து பாதி சட்டம் மீதி விரோதமாக ஒரு தொழில் செய்கிறார்கள். அந்தத் தொழிலால் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அதன் விளைவாக ஒவ்வொருவராக மர்ம மரணம் அடைகிறார்கள். எப்படி? எதற்காக? என்பதைச் சொல்வதுதான் படம். ஐவரில் ஒருவராக இருக்கும் பிரசாந்துக்கு இது வித்தியாசமான வேடம். எந்த உணர்ச்சியையும் காட்டாமல் எல்லாச் சிக்கல்களையும் எதிர்கொள்கிறார்.
படத்தின் பெயர் துப்பாக்கிமுனை, படத்தில் நாயகன் விகரம்பிரபுவுக்குக், குற்றவாளிகளை விசாரணையின்றிச் சுட்டுக்கொன்று தீர்க்கும் காவல் அதிகாரி வேடம் என்றதும் படம் முழுக்க ரத்தம் தெறிக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு வருவது இயற்கை. அந்த எதிர்பார்ப்புடன் சென்றால், நாம் நினைத்ததைக் கொஞ்சம் கொடுத்துவிட்டு நினைக்காததை நிறையக் கொடுத்திருக்கிறார்கள். மும்பையில் காவலதிகாரியாக இருக்கும்
கணவனை இழந்து கருவாடு விற்று மகனைக் கல்லூரியில் படிக்க வைக்கும் அம்மா. அம்மாவின் கஷ்டங்களைக் கொஞ்சம்கூடப் புரிந்துகொள்ளாத மகன், நண்பர்க்ளோடு சேர்ந்து ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறான். அவனுக்குக் காதல் வருகிறது. அதுவும் ஊர் மணியக்காரர் வீட்டுப் பெண் மேல். அப்புறமென்ன, மோதல் அடிதடி வெட்டுக்குத்து என்றுதானே போகும். அப்படித்தான் போகிறது. ஆனால் யாருமே எதிரபாராத க்ளைமாக்ஸ் பதற
இந்த உலகத்தில் மனிதர்களைவிட பறவைகள் அதிகம் பறவைகளை விட பூச்சிகள் அதிகம். மனிதர்கள் செய்யும் தவறு காரணமாக பறவைகள் அழிகின்றன, இப்படியே போனால் பூச்சிகள் மனித இன அழிவுக்குக் காரணமாகிவிடும் என்கிற ஆழமான கருத்தைச் சொல்ல சுமார் அறுநூறு கோடி செலவில் வாணவேடிக்கை நடத்தியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். சென்னை மாநகரில் எல்லோருடைய கைபேசிகளும் பறந்து சென்றுவிடுகின்றன. அவை
ஊரை ஏமாற்றிக் கொண்டு சும்மா சுற்றித் திரியும் கதாநாயகன் நகுல். சும்மா சுற்றினாலும் திரைப்பட நட்சத்திரமாக வேண்டும் என்கிற ஆசை கொண்டவர். நாயகி ஆஞ்சல்முஞ்சல் திரைப்பட இயக்குநராக ஆசைப்படுபவர். அப்புறமென்ன இருவரையும் ஒரு சுபயோக சுபதினத்தில் காதலிக்க வைத்துவிடுகிறார்கள். இந்தக் காதல்கதை மட்டும் போதாது என்பதால், நாயகி சொற்படி நாயகன் வேலைக்குப் போகிறார். வேலைக்குப் போன இடத்தில்
நோய் நாடி நோய் முதல் நாடி என்கிற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப ஒரு காவல்துறை அதிகாரி நடந்துகொள்வதுதான் திமிருபுடிச்சவன். காவல்துறை அதிகாரி வேடத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார் விஜய் ஆண்டனி. எல்லா நேரங்களிலும் ஒரே மதிரி நடிக்கிறார் என்று வேறு யாரும் சொல்லவேண்டியதில்லை. படத்தின் நாயகி நிவேதா பெத்துராஜே, தம்பி செத்துட்டான்ங்கிற சோகத்துலயும் உன்ன லவ் பண்ணிருவனோன்னு





















