சென்னை போய் இருபது வருசமாச்சு என்ன சாதிச்சே? என்று கேட்டதற்கு சென்னையில் இருபது வருசமா இருப்பதே சாதனைதான் என்று சொன்னார் ஒருவர். அந்தச்சாதனைகளில் ஒன்று இருப்பிடம். சாமானியர்கள் அதற்காக எவ்வளவு போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் செழியன். தெளிந்த
விமர்சனம்
பிறக்கும்போதே அம்மாவை இழந்து அப்பா வளர்ப்பில் வளரும் கார்த்தி, பணம் மட்டும்வாழ்க்கையில்லை பயணங்களிலிருக்கிறது வாழ்க்கை என்று உற்சாகமாக நண்பர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. சிறுவயதில் அப்பாவிட்டுவிட்டுப் போய்விட கஷ்டப்பட்டு அம்மா வளர்த்த பெண் ரகுல்பிரீத்சிங். அமெரிக்காவில் பெரும்தொழிலதிபராக இருக்கிறார். ஆண்கள் மேல் வெறுப்பாக இருக்கிறார். இவ்விருவருக்குமான காதல்
ஒரு குடியிருப்பில் வசிக்கும் எல்லோருக்கும் தொந்தரவாக இருக்கிறார்கள் நாயகன் சந்தானமும் அவரது மாமா நான்கடவுள் ராஜேந்திரனும். மதுக்குடித்துவிட்டு அவர்கள் செய்யும் அட்டகாசங்கள் சகிக்க முடியாமல் அக்குடியிருப்பு வாசிகள் எடுக்கும் முடிவால் சந்தானமும் நான்கடவுள் ராஜேந்திரனும் சந்திக்கும் சிக்கல்களைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார்கள். தாடி மீசையுடன் புதிய தோற்றத்தில் படம்
மிருதங்கம் செய்வதில் கைதேர்ந்த குமரவேல் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். கும்ரவேலின் மகன் ஜி.வி.பிரகாஷ். கல்லூரி மாணவரான அவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்.. விஜய் படம் வெளியாகும் நாளில் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, டிரம்ஸ் வாசித்து கொண்டாடும் அளவுக்குத் தீவிர ரசிகர்.. ஒருமுறை நெடுமுடி வேணு மிருதங்கம் வாசிப்பதைக் கேட்டு அதில் ஈடுபாடு கொள்ளும் ஜிவி.பிரகாஷ்,,
தெலுங்கில் வெற்றி பெற்ற படத்தைத் தமிழில் எடுத்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் கதை இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் பார்த்த கதை. கதைப்படி இலட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கு வாரிசு என்பதால் படத்தின் பெயருக்கேற்ப ராஜாவாகவே வாழ்ந்திருக்கிறார் சிம்பு. அறிமுகக் காட்சியிலேயே அவருடைய அதிரடி தொடங்குகிறது படமெங்கும் அது தொடர்கிறது. கடைசிக்காட்சியில் உருக்கமாகப் பேசி
நாயகி நிக்கிகல்ராணியைப் பார்த்ததும் காதலில் விழுகிறார் பிரபுதேவா. அவரிடம் காதலைச் சொல்வதிலேயே குழப்பம். அதைத்தாண்டி அவரிடம் காதலை வெளிப்படுத்தி திருமணம் வரை செல்கிறார் பிரபுதேவா. அந்தத் திருமணத்துக்கு முந்தைய நாள் பிரபுதேவா செய்யும் ஒரு தவறால் பெரும் குழப்பம் ஏற்பட்டு திருமணமே நின்றுவிடும் ஆபத்து. அதை எப்படி பிரபுதேவா சமாளிக்கிறார் என்பதுதான் படம். பிரபுதேவாவைப் பற்றி
அரிசி ஆலை வைத்துக்கொண்டு வசதியாக இருக்கும் அஜீத்துக்கு ஊரில் நிறைய சொந்தங்கள். அவர்களுக்கெல்லாம் அவர்தான் தலைவர். அவர் நின்றால் பொதுக்கூட்டம் நடந்தால் ஊர்வலம் என்று ஊரில் அதகளம் செய்துகொண்டிருக்கிறார். அந்த ஊருக்கு மருத்துவ முகாம் அமைக்க வரும் நயன்தாராவுக்கு அவர் மேல் காதல் அதன்பின் திருமணம் அழகான பெண் குழந்தை. இப்படியே போனால் சுவாரசியமாக இருக்காதே, அதனால் கணவன்
2.ஓ படம் வெளியாகி 42 ஆவது நாளில் வெளியாகியிருக்கும் ரஜினியின் அடுத்த படம் பேட்ட. கல்லூரி விடுதிக்காப்பாளராக அறிமுகமாகிற ரஜினிக்கு ஒரு முன்கதை ஒரு பின்கதை ஆகியனவற்றை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் கார்த்திக்சுப்புராஜ். அடாவடியாக வேலை பெறுவதும் தான் சாப்பிடப்போகும் வேர்க்கடலையின் தோலை வேறொருவரை உரித்து வை என்று சொல்வதும் ரஜினி ஸ்டைல் என்று சொல்லியிருக்கிறார்கள்.
2019 ஆம் ஆண்டில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது மாணிக். நாயகனாக நடித்திருக்கும் மா.கா.ப.ஆனந்த்தின் கதாபாத்திரம் மிகவும் சுவாரசியமானது. அதற்கேற்ப நடித்திருக்கிறார். எல்லாவித பாவங்களையும் வெளிப்படுத்த முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார். நாயகியாக சுஸாகுமார். நன்றாக இருக்கிறார்.நன்றாக நடனம் ஆடுகிறார். நல்ல திரைக்கதைகள் அமைந்தால் நல்ல
நான்கு பாடல்கள் அவற்றில் ஒன்றில் வேறொரு நாயகி ஆடவேண்டும், இரண்டு சண்டைக்காட்சிகள், படம் நெடுக நகைச்சுவை ஆகியனவற்றைச் சரிவிகிதத்தில் கலந்துகொடுத்தால் நிச்சயம் மக்களுக்குப் பிடிக்கும் என்று நம்பி இந்தப்படத்தை எடுத்திருக்கிறார்கள். அரசியல்வாதிகள் அமைச்சர்களுடன் தொடர்புடைய பெரிய ரவுடி ரவிஷங்கர். காவல்துறை ஆணையருக்கே தண்ணி காட்டும் அவர் சாதாரண காவலரான நாயகன் விஷ்ணுவிஷாலிடம்





















