தெலுங்கில் வெற்றி பெற்ற படத்தைத் தமிழில் எடுத்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் கதை இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் பார்த்த கதை. கதைப்படி இலட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கு வாரிசு என்பதால் படத்தின் பெயருக்கேற்ப ராஜாவாகவே வாழ்ந்திருக்கிறார் சிம்பு. அறிமுகக் காட்சியிலேயே அவருடைய
விமர்சனம்
நாயகி நிக்கிகல்ராணியைப் பார்த்ததும் காதலில் விழுகிறார் பிரபுதேவா. அவரிடம் காதலைச் சொல்வதிலேயே குழப்பம். அதைத்தாண்டி அவரிடம் காதலை வெளிப்படுத்தி திருமணம் வரை செல்கிறார் பிரபுதேவா. அந்தத் திருமணத்துக்கு முந்தைய நாள் பிரபுதேவா செய்யும் ஒரு தவறால் பெரும் குழப்பம் ஏற்பட்டு திருமணமே நின்றுவிடும் ஆபத்து. அதை எப்படி பிரபுதேவா சமாளிக்கிறார் என்பதுதான் படம். பிரபுதேவாவைப் பற்றி
அரிசி ஆலை வைத்துக்கொண்டு வசதியாக இருக்கும் அஜீத்துக்கு ஊரில் நிறைய சொந்தங்கள். அவர்களுக்கெல்லாம் அவர்தான் தலைவர். அவர் நின்றால் பொதுக்கூட்டம் நடந்தால் ஊர்வலம் என்று ஊரில் அதகளம் செய்துகொண்டிருக்கிறார். அந்த ஊருக்கு மருத்துவ முகாம் அமைக்க வரும் நயன்தாராவுக்கு அவர் மேல் காதல் அதன்பின் திருமணம் அழகான பெண் குழந்தை. இப்படியே போனால் சுவாரசியமாக இருக்காதே, அதனால் கணவன்
2.ஓ படம் வெளியாகி 42 ஆவது நாளில் வெளியாகியிருக்கும் ரஜினியின் அடுத்த படம் பேட்ட. கல்லூரி விடுதிக்காப்பாளராக அறிமுகமாகிற ரஜினிக்கு ஒரு முன்கதை ஒரு பின்கதை ஆகியனவற்றை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் கார்த்திக்சுப்புராஜ். அடாவடியாக வேலை பெறுவதும் தான் சாப்பிடப்போகும் வேர்க்கடலையின் தோலை வேறொருவரை உரித்து வை என்று சொல்வதும் ரஜினி ஸ்டைல் என்று சொல்லியிருக்கிறார்கள்.
2019 ஆம் ஆண்டில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது மாணிக். நாயகனாக நடித்திருக்கும் மா.கா.ப.ஆனந்த்தின் கதாபாத்திரம் மிகவும் சுவாரசியமானது. அதற்கேற்ப நடித்திருக்கிறார். எல்லாவித பாவங்களையும் வெளிப்படுத்த முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார். நாயகியாக சுஸாகுமார். நன்றாக இருக்கிறார்.நன்றாக நடனம் ஆடுகிறார். நல்ல திரைக்கதைகள் அமைந்தால் நல்ல
நான்கு பாடல்கள் அவற்றில் ஒன்றில் வேறொரு நாயகி ஆடவேண்டும், இரண்டு சண்டைக்காட்சிகள், படம் நெடுக நகைச்சுவை ஆகியனவற்றைச் சரிவிகிதத்தில் கலந்துகொடுத்தால் நிச்சயம் மக்களுக்குப் பிடிக்கும் என்று நம்பி இந்தப்படத்தை எடுத்திருக்கிறார்கள். அரசியல்வாதிகள் அமைச்சர்களுடன் தொடர்புடைய பெரிய ரவுடி ரவிஷங்கர். காவல்துறை ஆணையருக்கே தண்ணி காட்டும் அவர் சாதாரண காவலரான நாயகன் விஷ்ணுவிஷாலிடம்
கதை என்கிற ஒன்றைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி தன் ரசிகர்களைத் திருப்திப்படுத்தினால் போதும் என்கிற எண்ணத்தில் தனுஷ் எடுத்திருக்கும் படம்தான் மாரி 2. தனுஷின் தோற்றம் மற்றும் நடவடிக்கைகளில் அவர் சென்னையில் பெரிய ரவுடி என்று சொல்கிறார்கள். அவரும் அதற்கேற்ப நடித்துத்தள்ளியிருக்கிறார். அவர் கூடவே எப்போதும் இருக்கும் ரோபோசங்கர் மற்றும் வினோத் வருகிற காட்சிகள் ஆறுதல். அவர்கள்
காவல்துறையின் மந்திரச் சொல் ஒபே தி ஆர்டர். அதாவது சொன்னதைச் செய் அல்லது சொன்னதை மட்டும் செய். அந்த உத்தரவுக்குக் கட்டுப்படாமல் அடங்கமறுக்கிறார் நாயகன். அதன்விளைவும் அதன் பின்விளைவையும் தெறிக்கத் தெறிக்கச் சொல்லும் படம். இளமைத்துடிப்புடனும் கடமை உணர்ச்சியுடனும் காவல்துறையில் சேர்ந்து சமுதாயத்தைச் சீரமைக்க நினைக்கும் இளைஞர்கள் எல்லோரையும் காயடிக்கும் அந்தத் துறை இந்தப்பட
ஒரு ஏழை விவசாயி மகள் பெரும்பணக்கார விளையாட்டான மட்டைப்பந்தாட்ட வீராங்கனையாக உருவெடுத்து இந்திய மகளிர் மட்டைப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்து வெற்றி பெற எண்ணுகிறார் அது நடந்ததா? இல்லையா? என்கிற ஒற்றைக் கேள்விக்கான விடைக்குள் ஓராயிரம் உணர்ச்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது கனா. சொந்த அப்பா இறந்த துக்கத்திலும் கூட தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்குமளவுக்கு தீவிர
நாடகங்களின் அழிவுக்குத் திரைப்படங்களின் வளர்ச்சி காரணம் என்கிற குற்றச்சாட்டு உண்டு, ஆனால் இந்தத் திரைப்படம் நாடகங்களின் வளர்ச்சிக்குத் துணையாக அமைந்திருக்கிறது. மூத்த நாடக நடிகர் ஆதிமூலம் என்கிற அய்யா வேடத்தில் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். இளவயதில் ஒரு நாடகக் காட்சி, நடுத்தர வயதில் ஒரு நாடகக் காட்சி, முதிர்ந்த வயதில் ஒரு காட்சி ஆகிய மூன்று தோற்றங்களில் வருகிறார்























