ஒரு படத்தில் நாயகனுக்கு விநோதமான ஒரு நோய் இருப்பதாகச் சொல்லிவிட்டாலே இஷ்டத்துக்குக் கதை விடும் வாய்ப்பு கிடைத்துவிடும். ஆனால் இந்தப்படத்தில் அப்படி ஒரு நோயை வைத்துக்கொண்டே வித்தியாசமான திரைக்கதை அமைத்து படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் ஆஷிப் குரைசி. படத்தின் நாயகன்
விமர்சனம்
உலக அளவில் புகழ்பெற்ற கூகுள் தலைமை அதிகாரி சுந்தர்பிச்சையை பிரதியெடுத்த மாதிரி சுந்தர் ராமசாமி என்கிற வேடத்தில் விஜய். அமெரிக்காவிலிருந்து இந்தியா வருகிற அவரால் இங்குள்ள பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆபத்து என்கிற அளவுக்கு நாயகனின் பெருமை பேசி. அறிமுகம் செய்கிறார்கள். அவரோ ஓட்டுப்போட வருகிறார். அவருடைய ஓட்டை யாரோ போட்டுவிட, கோபமடையும் அவர் தன் ஓட்டுரிமைக்காகப்
ஒரு சிறிய கிராமத்தில் கட்டிடம் கட்டும் கொத்தனார் வேலை செய்யும் நாயகன். அவருக்கு ஒரு முறைப்பெண். பெற்றோர் எதிர்ப்பை மீறி நாயகனைத் திருமணம் செய்யப் போராடுகிறார். நாயகன் கட்டிடம் கட்டப் போன இடத்தில் அவருடைய நற்குணங்களைப் பார்த்து அவர் மீது காதல் கொள்கிறார் ஒரு பெண். அதன்விளைவாக ஏற்படும் சிக்கலில் அப்பெண் மனநலம் பாதிக்கப்படுகிறது. அவரைப் பாதுகாக்கும் பொறுப்பு நாயகனிடம் வந்து
பொழுதுபோக்கு வணிகம் ஆகியனவற்றைத் தாண்டி அதன்மூலம் வெகுமக்களுக்கு தமக்குத் தெரிந்த நல்லனவற்றைச் சொல்லிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் இயக்குநர் சுசீந்திரன் எடுத்திருக்கும் படம்தான் ஜீனியஸ். காலை எழுந்தவுடன் படிப்பு என்பது மாறி காலை எழுந்தவுடன் அவசர அவசரமாகப் பள்ளிக்குக் கிளம்பிப் போவதுதான் இன்றைய நிலை. மாலை முழுவதும் விளையாட்டு என்பது சுத்தமாக மாறி மாலையில் படிப்பு
ஏழு ஊர் சேர்ந்து நடத்தும் வேட்டைக் கருப்பசாமி கோயில் திருவிழா ஏழாண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது. ஏழு நாட்கள் நடக்கும் அந்தத் திருவிழாவில் ஒருத்தரைக் கொன்றே தீருவோம் என்கிற வரலட்சுமியின் சபதத்தைச் செயல்படுத்த ஒரு கூட்டம் தீவிரமாக இருக்கிறது. ஊர்த்தலைவர் ராஜ்கிரணோ வரலட்சுமியின் எண்ணத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்து திருவிழாவையும் நல்லபடியாக நடத்துவேன் என்று உறுதியேற்கிறார்.
ஒரு கொலையில் படம் தொடங்குகிறது. செத்தவர் யார்? எதற்காக அவரைக் கொன்றார்கள்? என்கிற கதையை திரைக்குப் பின்னே இருந்து ஒரு குரல் சொல்லிக்கொண்டேயிருக்க அதற்கேற்ப காட்சிகள் வருகின்றன. நாயகன் தனுஷ், நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, பவன், ஆடுகளம் கிஷோர்,டேனியல் பாலாஜி,தினா, மட்டுமின்றி ஏராளமான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி மூச்சுத் திணற வைக்கிறார்கள்.
நிஜ வாழ்வில் நடக்கவே நடக்காத சாகசங்களைக் கதாநாயகர்கள் திரையில் நிகழ்த்தும்போது பார்த்து கைதட்டி ரசிக்கிறோம். இந்தப்படத்தில் அனைவரும் செய்யக்கூடிய செய்யவேண்டிய நல்ல விசயத்தை நயம்படச் சொல்லியிருக்கிறார்கள். பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கீர்த்திகா, தீபிகா ஆகிய ஆறு சிறியோர்தான் இப்படத்தின் நாயகர்கள். அறுவரும் பள்ளியில் படித்துக்கொண்டே தற்காப்புக்கலைகளிலும் ஆர்வமாக
வட சென்னை – சுட சுட – வாசிங்டன்னில் இருந்து முதலில் மிகப் பெரும் ஆச்சர்யத்தை சொல்லி விடுகிறேன். செவ்வாய் மாலை 8.00 முதல் காட்சி – அரங்கம் முழுக்க நிரம்பி வழிந்தது! என்னால் நம்பவே முடியவில்லை – அமெரிக்காவில் வேலை நாட்களில், அதுவும் செவ்வாய் அன்று! இயக்குநர் வெற்றி மாறன், வட சென்னை களம் என்ற காரணத்தாலும், சிலர் தனஷுக்காக வந்து இருப்பார்கள் போலும்!
மயிலாடுதுறை அருகேயுள்ள “திருநாள் கொண்டச்சேரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 100 வயது முதியவர் செல்லமுத்து சனவரி 3–2016 ஆம் தேதி மரணமடைந்தார். மழை காரணமாக, தலித் மக்களின் சுடுகாட்டுக்கு செல்லும் வழக்கமான பாதை சரியில்லாததால், பொதுப்பாதை வழியாக, உடலை எடுத்துச்செல்ல கோரிக்கை விடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மனுவை கடந்த 4–ம் தேதி விசாரித்த நீதிபதி
கணவன் வேலைக்குப் போய்ப் பொருளீட்டிவர, மனைவி வீட்டுவேலைகள் செய்து குடும்பம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது நம் சமுதாயத்தின் எழுதப்படாத சட்டம். அதைத் தூக்கிப் போட்டுடைத்து நான் ஹவுஸ்ஹஸ்பண்ட் என்று பெருமையாகச் சொல்லும் சமுத்திரக்கனியின் கதாபாத்திரத்தைப் படைத்தமைக்காகவே இயக்குநர் தாமிராவுக்கு ஒரு பூங்கொத்து. மனைவி டேப்லெட்டில் மேய்ந்துகொண்டிருக்க காய்கறி நறுக்கிக்கொண்டே





















