Home Archive by category விமர்சனம் (Page 85)

விமர்சனம்

விமர்சனம்

60 வயது மாநிறம் – திரைப்பட விமர்சனம்

நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமையாகி, பணம் ,பதவி, மற்றும் ஆடம்பர வாழ்வை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் உறவுகளின் மேன்மையை எடுத்துச் சொல்கிற படம் அறுபது வயது மாநிறம். அல்சைமர் எனும் நினைவிழத்தல் குறைபாட்டில் சிக்கிய அப்பாவைத் தொலைத்துவிட்டுத் தேடுகிற அமெரிக்கக் கனவு காணும் மகனை
விமர்சனம்

ஆருத்ரா – திரைப்பட விமர்சனம்

சமுதாயத்தில் புகழ் பெற்றிருக்கும் சில மனிதர்கள் திடீரென கடத்தப்படுகிறார்கள்.. மர்மமாகக் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களைக் கடத்துவது யார்? எதற்காக அந்தக் கொலைகள் நடக்கின்றன என்பதை விவரிக்கும் படம்தான் ஆருத்ரா. வெறுமனே கடத்தப்பட்டுக் கொலை செய்யப்படுகிறார்கள் என்றால் சுவாரசியமாக இருக்காது என்று நினைத்து புராணக்காலம் போல் ஒவ்வொரு கொலைக்கும் ஒவ்வொரு பெயர் வைத்துக்
விமர்சனம்

இமைக்கா நொடிகள் – திரைப்பட விமர்சனம்

பெங்களூரு நகரத்தில் வரிசையாகக் கொலைகள் நடக்கின்றன. அதை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் அதிகாரி அஞ்சலி விசாரிக்கிறார். அவர் குற்றவாளியைக் கண்டுபிடிக்க எடுக்கும் நடவடிக்கைகள்தாம் படம். சிபிஐ அதிகாரியாக நடித்திருக்கும் நயன்தாரா, தொடக்கத்திலிருந்து அந்த வேடத்துக்குரிய மிடுக்குடன் வலம்வருகிறார். ஆனால், வரிசையாகச் சொல்லியடிக்கிற கொலைகாரனை நெருங்க முடியாமல் திணறுகிறார். இது
விமர்சனம்

மேற்குத் தொடர்ச்சி மலை – திரைப்பட விமர்சனம்

அதிகாலை நான்கு மணிக்கு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கிராமத்தில் கண் விழிக்கும் நாயகன் ரங்கசாமியின் (நடிகர் ஆண்டனி) நிழல் போல, அல்ல அல்ல உடல் போலவே தேனி ஈஸ்வரின் ஒளிப்படக் கருவி பயணிக்கிறது. கண்களுக்கு விருந்து என்று வியக்கும் மலைகளின் உடல் வழியே நரம்புகள் போல அமைந்த ஒற்றையடிப் பாதையில் நம்பிக்கையும் அன்பும் கலந்து மொழியும் மனிதர்களை நமக்குக் காட்டியபடியே
விமர்சனம்

கோலமாவு கோகிலா – திரைப்பட விமர்சனம்

வயதான அப்பா,நோயாளி அம்மா, தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கை இப்படி உள்ள குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழியே இல்லாமல் தவறான வழியில் பணம் சம்பாதிக்கப் போவார் நாயகன். போன இடத்தில் அவருக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்து உடனிருப்பவர்களே சிக்கலில் மாட்டிவிடுவார்கள். அதிலிருந்து வெற்றிகரமாக மீள்வதோடு குடும்பத்தையும் நல்ல நிலைக்கு உயர்த்துவார் நாயகன். அரதப்பழசான இந்தக்கதையை
விமர்சனம்

ஓடு ராஜா ஓடு – திரைப்பட விமர்சனம்

மனைவி சம்பாதித்த பணத்தில் செட்டாப் பாக்ஸ் வாங்கச் செல்லும் எழுத்தாளர், போதை மருந்து விற்ற பணத்தை மொத்தவியாபாரியிடம் கொடுக்க முடியாத சிறுவியாபாரி, திருட்டு வழக்கில் சிறை சென்று வந்து கடைசியாகப் பெரிதாக ஒரு சம்பவம் செய்து பெரும் பணம் சம்பாதிக்கத் திட்டமிடும் ஒருவன், இவர்களோடு தாதாயிசத்தை விட்டுவிட வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு மறைந்துவிட்ட அப்பாவின் சொல்லை மதிக்க
விமர்சனம்

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன – திரைப்பட விமர்சனம்

இரவு பனிரெண்டு மணிக்கு அல்ல பகல் பனிரெண்டு மணிக்கே பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாத பேரவலத்தைச் சுட்டிக்காட்டும் படம் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன. தனியாக நடந்துசெல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் நபர்களிடமிருந்து நகை பறிக்கிறார் நாயகன் துருவா. அடடே என்று நிமிர்ந்து உட்காருவதற்குள் அந்த நகை பறிக்கும் கூட்டத்திலேயே சேர்ந்துவிடுகிறார். அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து
விமர்சனம்

பியார் பிரேமா காதல் – திரைப்பட விமர்சனம்

நடுத்தர வர்க்க இளைஞன் ஹரீஷ்கல்யாணுக்கு உடன்பணியாற்றும் உயர் நடுத்தர வர்க்கப் பெண் ரைசா மீது அளவு கடந்த காதல். ரைசாவுக்குக் காதல், கல்யாணம் ஆகியனவற்றின் மீது மாறுபட்ட கருத்து உள்ளது. அதில் பிடிவாதமாகவும் இருக்கிறார். இதனால் என்னவாகிறது என்பதுதான் படம். வீட்டுக்கு அடங்கி படிப்பு, வேலை, வேலை முடிந்தால் வீடு என்றிருக்கும் ஹரீஷ்,பக்கத்துக்குக் கட்டிடத்தில் வேலை செய்யும்
விமர்சனம்

விஸ்வரூபம் 2 – திரைப்பட விமர்சனம்

இந்திய ஒன்றிய அரசின் அதியுச்ச அதிகாரம் மற்றும் செல்வாக்கு கொண்ட உளவு அமைப்பான ரிசர்ச் அண்ட் அனலைசஸ் விங் கில் பணிபுரியும் கமல், சந்திக்கும் சவால்களும் எதிர்கொள்ளும் ஆபத்துகளும்தான் படம். ஒரு வழக்கை எடுத்துக்கொண்ட அதுபற்றி விசாரிக்கிறார் என்றில்லாமல், ஒரு பேராபத்திலிருந்து இங்கிலாந்தைக் காப்பாற்றிவிட்டு அப்படியே இன்னொரு பேராபத்திலிருந்து இந்தியாவைக் காப்பாற்றுகிறார். இது
விமர்சனம்

மணியார் குடும்பம் – திரைப்பட விமர்சனம்

ஊரில் பெரிய மணியகாரர் குடும்பம், ஊருக்கே சோறு போட்ட அக்குடும்பத்துக்கு தற்போது, வீட்டின் கதவு, சன்னல்களை விற்றுச் சாப்பிட வேண்டிய நிலை. இதற்கு என்ன காரணம்? இப்படி ஆகாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? இதிலிருந்து மீள்வது எப்படி? ஆகியனவற்றுக்கான விடைதான் இப்படம். மகன் உமாபதியை கதாநாயகனாக்க வேண்டும் என்பதற்காக அப்பா தம்பிராமையா எழுதி இயக்கியுள்ள இந்தப்படம், நகைச்சுவை, காதல்,