வயதான அப்பா,நோயாளி அம்மா, தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கை இப்படி உள்ள குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழியே இல்லாமல் தவறான வழியில் பணம் சம்பாதிக்கப் போவார் நாயகன். போன இடத்தில் அவருக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்து உடனிருப்பவர்களே சிக்கலில் மாட்டிவிடுவார்கள். அதிலிருந்து வெற்றிகரமாக
விமர்சனம்
மனைவி சம்பாதித்த பணத்தில் செட்டாப் பாக்ஸ் வாங்கச் செல்லும் எழுத்தாளர், போதை மருந்து விற்ற பணத்தை மொத்தவியாபாரியிடம் கொடுக்க முடியாத சிறுவியாபாரி, திருட்டு வழக்கில் சிறை சென்று வந்து கடைசியாகப் பெரிதாக ஒரு சம்பவம் செய்து பெரும் பணம் சம்பாதிக்கத் திட்டமிடும் ஒருவன், இவர்களோடு தாதாயிசத்தை விட்டுவிட வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு மறைந்துவிட்ட அப்பாவின் சொல்லை மதிக்க
இரவு பனிரெண்டு மணிக்கு அல்ல பகல் பனிரெண்டு மணிக்கே பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாத பேரவலத்தைச் சுட்டிக்காட்டும் படம் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன. தனியாக நடந்துசெல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் நபர்களிடமிருந்து நகை பறிக்கிறார் நாயகன் துருவா. அடடே என்று நிமிர்ந்து உட்காருவதற்குள் அந்த நகை பறிக்கும் கூட்டத்திலேயே சேர்ந்துவிடுகிறார். அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து
நடுத்தர வர்க்க இளைஞன் ஹரீஷ்கல்யாணுக்கு உடன்பணியாற்றும் உயர் நடுத்தர வர்க்கப் பெண் ரைசா மீது அளவு கடந்த காதல். ரைசாவுக்குக் காதல், கல்யாணம் ஆகியனவற்றின் மீது மாறுபட்ட கருத்து உள்ளது. அதில் பிடிவாதமாகவும் இருக்கிறார். இதனால் என்னவாகிறது என்பதுதான் படம். வீட்டுக்கு அடங்கி படிப்பு, வேலை, வேலை முடிந்தால் வீடு என்றிருக்கும் ஹரீஷ்,பக்கத்துக்குக் கட்டிடத்தில் வேலை செய்யும்
இந்திய ஒன்றிய அரசின் அதியுச்ச அதிகாரம் மற்றும் செல்வாக்கு கொண்ட உளவு அமைப்பான ரிசர்ச் அண்ட் அனலைசஸ் விங் கில் பணிபுரியும் கமல், சந்திக்கும் சவால்களும் எதிர்கொள்ளும் ஆபத்துகளும்தான் படம். ஒரு வழக்கை எடுத்துக்கொண்ட அதுபற்றி விசாரிக்கிறார் என்றில்லாமல், ஒரு பேராபத்திலிருந்து இங்கிலாந்தைக் காப்பாற்றிவிட்டு அப்படியே இன்னொரு பேராபத்திலிருந்து இந்தியாவைக் காப்பாற்றுகிறார். இது
ஊரில் பெரிய மணியகாரர் குடும்பம், ஊருக்கே சோறு போட்ட அக்குடும்பத்துக்கு தற்போது, வீட்டின் கதவு, சன்னல்களை விற்றுச் சாப்பிட வேண்டிய நிலை. இதற்கு என்ன காரணம்? இப்படி ஆகாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? இதிலிருந்து மீள்வது எப்படி? ஆகியனவற்றுக்கான விடைதான் இப்படம். மகன் உமாபதியை கதாநாயகனாக்க வேண்டும் என்பதற்காக அப்பா தம்பிராமையா எழுதி இயக்கியுள்ள இந்தப்படம், நகைச்சுவை, காதல்,
சென்னை மாநகரில், நடுத்தர வர்க்கத்தினர் வாடகைக்கு விடு பிடிப்பது எவ்வளவு கொடுமையானது என்பதை விளக்கமாகக் காட்சிப்படுத்தியிருக்கும் படம். நள்ளிரவில் திடீரென வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம், வீட்டுச் சொந்தக்காரர் வெளியில் தூக்கிப் போட்டுவிட, அவறையெல்லாம் வாடகை வண்டியில் ஏற்றி வைத்துக் கொண்டு அதிலேயே போய் வீடு தேடுகிறது கிஷோர், லதாராவ் மற்றும் மூண்ரு குழந்தைகள் கொண்ட குடும்பம்.
தமிழகத்தின் பொருளாதாரம் தமிழரல்லாதவர்கள் கைகளில் சிக்கியிருப்பதால் தமிழ் மக்கள் எவ்வளவு பாதிப்புகளுக்காளாகிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லும் படம் காட்டுப்பய சார் இந்தக் காளி. கந்துவட்டி தொடங்கி கார்ப்பரேட் வட்டி வரை அனைத்தையும் சகட்டுமேனிக்கு வெளுத்துக்கட்டுகிறார் இயக்குநர் யுரேகா. ஒரு மார்வாரி ஃபைனான்சியரிடம் பணியாற்றும் ஊழியர்களின் வாகனங்கள் திடீரென் தீப்பற்றி எரிகின்றன.
இந்தியா மீது 17 முறை படையெடுத்தவர் கஜினிமுகமுது. விடாமுயற்சிக்கு உதாரணமாக அவரைச் சொல்வார்கள். ஏ.ஆர்.முருகதாஸ், மறதிக்காரரை மையமாகக் கொண்ட கதைக்கு கஜினி என்று பெயர் வைத்தவுடன், கஜினி என்றால் மறதிக்காரர் என்ற அடையாளம் வந்துவிட்டது. கஜினிகாந்த் அதை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது. தர்மத்தின்தலைவன் பட ரஜினி போல் ஞாபக மறதிக்காரர் ஆர்யா. ஒரே நேரத்தில் அழகான பெண்ணின்
தாத்தா லிங்காவும் அப்பா ரங்காவும் பெயர் பெற்ற தாதாவாக இருந்தும் பரம்பரை சொத்தை இழந்துவிடுகிறார்கள். அதை ஜுங்கா எப்படி மீட்டெடுக்கிறார் என்பதை நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். டான் டாவடிக்கக் கூடாது என்கிறார் விஜய்சேதுபதி. அவர் சொல்லாமல் விட்டது டான் படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாது என்பது. பொள்ளாச்சியிலிருந்து சென்னை வந்து 2457 கோடிக்குச்























