எளிய மனிதர்களின் வாழ்வில் வலியவர்கள் எப்படி விளையாடுகிறார்கள்? என்பதற்கும், ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிட்டால் ஓர் நொடிக்குள் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் போய் ஒப்பப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ என்கிற பாரதிதாசன் வரிகளுக்கும் விஜய்மில்டன் கொடுத்திருக்கும் காட்சி வடிவம்தான் கோலிசோடா 2.
விமர்சனம்
மும்பையில் தமிழர்கள் பெருமளவு வசிக்கும் தாராவி பகுதியை தூய்மை இந்தியா திட்டம் என்ற பெயரில் அபகரித்து தம் அதிகாரத்தை நிலைநிறுத்த நினைக்கும் அதிகார வர்க்கத்துக்கும், நிலத்தை வாழ்வாகக் கருதும் உழைக்கும் வர்க்கத்துக்குமான போராட்டம் தான் காலா. உழைக்கும் மக்களுக்குத் தலைவராக விளங்கும் ரஜினியின் பெயர் காலா என்கிற கரிகாலன் என்பதால் படத்தின் பெயர் காலா. சூப்பர்ஸ்டார் என்கிற
டிஜிட்டல் யுகம் என்கிற பெயரில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தப் பழகியதாலும் குறிப்பாக நம் கையில் இருக்கும் நவீன கைபேசி எவ்வளவு ஆபத்துகளை நமக்குக் கொண்டுவருகின்றன என்பதையும் விளக்கிச் சொல்லும் படம்தான் எக்ஸ் வீடியோஸ். ஆபாச இணையதளங்களைப் பற்றி ஆராய்ந்து கட்டுரை எழுதும் பத்திரிகையாளரின் பார்வையில் விரிகிறது படம். நாயகி ஆகிருதிசிங்கின் அரைநிர்வாணக் காட்சிகள் கிளுகிளுப்பை
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு – திருக்குறள் பிறன் மனைவியை விரும்பி ஒழுகாத ஒழுக்கம், நிறைந்த பேராண்மையுடைய சான்றோர்க்கு அறம். அறம் மட்டுமன்று. ஒழுக்கமும் கூட. – திருக்குறள் விளக்கம் பிறர் மனைவியை விரும்பக்கூடாது என்று திருவள்ளுவர் சொல்லியிருந்தார். காலம் மாறிவிட்டது. கணவனைத் தவிர பிற ஆண்களை நோக்கக்கூடாது என்பதை இந்தப்படத்தில்
வெளிநாட்டில் புகழ்பெற்ற மருத்துவராக இருக்கும் விஜய்ஆண்டனி, தன் பெற்றோரைத் தேடி தமிழகம் வருகிறார். வந்த இடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்கிற ஒற்றை வரிக் கதையை சுவாரசியமான திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையில் ஆக்கப்பட்டிருக்கும் படம்தான் காளி. மருத்துவராக மட்டுமின்றி திருடன், கல்லூரி மாணவன், அருட்தந்தை ஆகிய வேடங்களிலும் வருகிறார் விஜய்ஆண்டனி. கதாநாயகனுக்கு நான்கு தோற்றங்கள்
டீமாண்டிசேஷன் என்கிற பணமதிப்பிழப்புக்குப் பின் கேஷ்லெஸ் இந்தியா என்கிற முழக்கம் பெரிதாகக் கேட்டது அல்லவா? பணப் பரிவர்த்தனை இல்லாமல் இருந்தால் எல்லாமே கணக்கில் இருக்கும் இதனால் கறுப்புப்பணம் ஒழியும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்களே, அது எவ்வளவு ஆபத்தானது, சாமானிய மக்களை எப்படியெல்லாம் கொள்ளையடிக்கும் என்பதை எடுத்துக்காட்டும் படம்தான் இரும்புத்திரை. இராணுவ அதிகாரி
பொறுப்புள்ள, வாடகைக்கார் ஓட்டி வாழ்க்கை நடத்தும் நடுத்தர வர்க்க இளைஞனுக்கு நடக்கும் எதிர்பாரா நிகழ்வுகளும் அவற்றை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதையும் மிக எதார்த்தமாகப் பதிவு செய்திருக்கும் படம் இரவுக்கு ஆயிரம் கண்கள். வாடகைக்கார் ஓட்டும் அமைதியான இளைஞன் பாத்திரத்துக்கு அருள்நிதி மிகவும் பொருந்திப்போகிறார். நிம்மதியான வாழ்க்கை, அதை மேலும் அழகாக்க அன்பான காதலி என்று
1936 ஆம் ஆண்டு பிறந்து தன்னுடைய 16 ஆவது நடிக்கத் தொடங்கி பல ஆண்டுகள் புகழின் உச்சியில் இருந்தவர் நடிகை சாவித்திரி. நடிப்பதோடு நில்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகிய அவதரங்களை எடுத்ததால் பெரும் நட்டம், காதல் கணவருடன் கருத்து வேறுபாடு, நம்பியவர்கள் செய்த துரோகம் ஆகியனவற்றால் மனமுடைந்து மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி 45 வயதிலேயே மறைந்து போனவர் சாவித்திரி. அவருடைய இந்த
நாயகன் சச்சின் மணி வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றிவருபவர். தமிழ் சினிமா வழக்கப்படி அவருக்கும் காதல் வருகிறது. வேலைக்குப் போனால்தான் கல்யாணம் என்று காதலி கறாராகச் சொல்லிவிடுகிறார். இதனால், ஒரு தந்திரம் செய்து வேலைக்குப் போகிறார். அது அவருக்குப் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமாகிறது. திருமணம் நடக்கிற நாளில் என்ன நடக்கிறது?
பலவிதமான பேய்ப்படங்களைப் பார்த்துவிட்டீர்கள், இதோ புதிதாக ஒரு பேய். பேய்ப்படங்களைப் பார்த்தால் பயப்படுவோம் அல்லது சிரிப்போம், ஆனால் இந்தப் பேய்ப் படத்தைப் பார்த்தால் கோபம் வரும். விஜய்யின் இயக்கம், சாய்பல்லவியின் தமிழ் அறிமுகம், நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு, நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் சாம் சி.எஸ் இன் இசை, அஜயன்பாலாவின் வசனங்கள் ஆகிய நல்ல அம்சங்கள் பல இருந்தும்





















