2003 ஆம் ஆண்டு வெளியான சாமி படத்தில், திருநெல்வேலியில் காவல்துறை உயரதிகாரியாக இருக்கும் ஆறுச்சாமி, அந்த மாவட்டத்தில் பெரும் அரசியல் செல்வாக்குடன் இருக்கும் பெருமாள்பிச்சையுடன் மோதி, கடைசியில் யாரும் அறியாவண்ணம் அவரைக் கொலைசெய்வார். பெருமாள்பிச்சையைக் காணவில்லை என்பது மக்கள் கருத்து. அதோடு படம்
விமர்சனம்
நாயகன் மெட்ரோசிரிஷின் பெயர் ராஜா, நாயகி சாந்தினியின் பெயர் ரங்குஸ்கி. படத்தின் தலைப்புக்கு விடை கிடைத்துவிட்டதா? அடுத்து ரங்குஸ்கி என்றால் என்ன அர்த்தம்?என்ற கேள்வி வரலாம். புகழ்பெற்ற எழுத்தாளர் சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன். அதனால் அவர் ரங்குஸ்கி என்கிற புனைபெயர் வைத்திருந்தார். இப்படத்தின் நாயகியும் தன்னை எழுத்தாளர் என்று சொல்லி ரங்குஸ்கி என்கிற புனைபெயரை
பத்திரிகையாளரான சமந்தா, சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் நடக்கும் விபத்துகள் குறித்து எழுத விழைகிறார். அது தொடர்பான விவரங்கள் தேடி அவர் போகப்போக திரைக்கதையும் விரிகிறது. படம் முழுக்க நிறைந்திருக்கும் சமந்தா, காதல் பாசம் பயம் ஆகிய உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறார். நடக்கும் தொடர் மரணங்களுக்கான காரணத்தைக் கண்டறிந்து அதைத் தடுத்தே தீருவேன் என திடசங்கற்பம் பூண்டிருந்தாலும்,
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களில் பொறுப்பற்ற இளைஞராக ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கும் வேடத்தை சிவகார்த்திகேயனுக்குக் கொடுத்த இயக்குநர் பொன்ராம், இந்தப்படத்தில் அவரை ராஜாவாக்கியிருக்கிறார். இரட்டைக்குதிரை பூட்டிய சாரட் வண்டியில் வலம்வந்து, கும்பிடு போடுகிறவர்களுக்கெல்லாம் பணம் கொடுக்கும் வள்ளலாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். அவருடைய கணக்குப்பிள்ளையாக
பழனி அருகே சமுத்துவபுரத்தில் வசிக்கும் நாயகன் பிருத்விராஜுக்கும் சாதிச் சங்கப் பிரமுகராக இருக்கிற எம்.எஸ்.குமாரின் தங்கை நாயகி வீணாவுக்கும் காதல். இந்தக்கதையை வைத்துக்கொண்டு சமகாலத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட ஆணவக் கொலை நிகழ்வை திரைக்கதையில் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தப்படம். நாயகன் பிருத்விராஜ், நாயகி வீணா ஆகியோரின் காதல் காட்சிகள் வழக்கம் போல் இருந்தாலும்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் சீமராஜா படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. எங்க ராசா எப்படி வருவாரு தெரியுமா? என்று குரல் கேட்க இரட்டைக்குதிரை பூட்டிய சாரட் வண்டி ஆக்ரோஷமாக வருகிறது.அதைத் தொடர்ந்து கோயிலில் சிவகார்த்திகேயனுக்குப் பட்டம் கட்ட அவர் சிரித்துக் கொண்டே வணங்குகிறார். உடனே வாரேன் வாரேன் சீமராஜா பாடலில் சிவகார்த்திகேயன் தோன்றுகிறார்.
நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமையாகி, பணம் ,பதவி, மற்றும் ஆடம்பர வாழ்வை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் உறவுகளின் மேன்மையை எடுத்துச் சொல்கிற படம் அறுபது வயது மாநிறம். அல்சைமர் எனும் நினைவிழத்தல் குறைபாட்டில் சிக்கிய அப்பாவைத் தொலைத்துவிட்டுத் தேடுகிற அமெரிக்கக் கனவு காணும் மகனை வைத்துக் கொண்டு கதை சொல்கிறார்கள். நினைவிழத்தல் குறைபாட்டால் பாதிக்கப்படும் அப்பாவாக
சமுதாயத்தில் புகழ் பெற்றிருக்கும் சில மனிதர்கள் திடீரென கடத்தப்படுகிறார்கள்.. மர்மமாகக் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களைக் கடத்துவது யார்? எதற்காக அந்தக் கொலைகள் நடக்கின்றன என்பதை விவரிக்கும் படம்தான் ஆருத்ரா. வெறுமனே கடத்தப்பட்டுக் கொலை செய்யப்படுகிறார்கள் என்றால் சுவாரசியமாக இருக்காது என்று நினைத்து புராணக்காலம் போல் ஒவ்வொரு கொலைக்கும் ஒவ்வொரு பெயர் வைத்துக்
பெங்களூரு நகரத்தில் வரிசையாகக் கொலைகள் நடக்கின்றன. அதை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் அதிகாரி அஞ்சலி விசாரிக்கிறார். அவர் குற்றவாளியைக் கண்டுபிடிக்க எடுக்கும் நடவடிக்கைகள்தாம் படம். சிபிஐ அதிகாரியாக நடித்திருக்கும் நயன்தாரா, தொடக்கத்திலிருந்து அந்த வேடத்துக்குரிய மிடுக்குடன் வலம்வருகிறார். ஆனால், வரிசையாகச் சொல்லியடிக்கிற கொலைகாரனை நெருங்க முடியாமல் திணறுகிறார். இது
அதிகாலை நான்கு மணிக்கு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கிராமத்தில் கண் விழிக்கும் நாயகன் ரங்கசாமியின் (நடிகர் ஆண்டனி) நிழல் போல, அல்ல அல்ல உடல் போலவே தேனி ஈஸ்வரின் ஒளிப்படக் கருவி பயணிக்கிறது. கண்களுக்கு விருந்து என்று வியக்கும் மலைகளின் உடல் வழியே நரம்புகள் போல அமைந்த ஒற்றையடிப் பாதையில் நம்பிக்கையும் அன்பும் கலந்து மொழியும் மனிதர்களை நமக்குக் காட்டியபடியே























