Home Archive by category விமர்சனம் (Page 84)

விமர்சனம்

விமர்சனம்

நோட்டா – திரைப்பட விமர்சனம்

ஒருநாள் முதல்வர் என்று சொல்லி முதல்வன் படத்தில் அரசியலை விமர்சித்தார் இயக்குநர் ஷங்கர். இந்தப்படத்தில் பதினைந்து நாள் முதல்வர் என்று சொல்லி சமகால அரசியலை சகட்டுமேனிக்கு விளாசியிருக்கிறார் இயக்குநர் ஆனந்த்சங்கர். முதலமைச்சராக இருக்கும் முன்னாள் நடிகர் நாசர் மீது ஊழல்புகார். அதனால் அவர் பதவி
விமர்சனம்

96 – திரைப்பட விமர்சனம்

காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்; கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்; ஆதலினால்,காதல் செய்வீர்;உலகத்தீரே அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம். என்கிற பாரதியின் வரிகளுக்குத் திகட்டத் திகட்ட எழுதப்பட்டுள்ள உணர்வுரைதாம் 96. அடர்ந்த வனம், ஆழக்கடல்,பசுமை வெளி, பாலைவனம் என்று இயற்கையைத் தேடி வெறிகொண்டு அலையும் புகைப்படக்காரராக விஜய்சேதுபதி அறிமுகம் ஆகும்போதே இதுவேற படம் என்கிற
விமர்சனம்

பரியேறும் பெருமாள் – திரைப்பட விமர்சனம்

பரின்னா குதிரை அதில் ஏறிவரும் பெருமாள் என்கிற சாமியின் பெயர்தான் பரியேறும்பெருமாள். படத்தில் நாயகனின் பெயர். திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த நாயகன் கதிர், தம் சமுதாய மக்களைப் பாதுகாக்கச் சட்டம் படித்தாக வேண்டும் என்கிற ஊர்ப்பெரியவரின் விருப்பத்தை ஏற்று சட்டக்கல்லூரியில் சேர்கிறார். அங்கு என்னவெல்லாம் நடக்கிறது? என்பது
விமர்சனம்

செக்கச் சிவந்த வானம் – திரைப்பட விமர்சனம்

சென்னையின் மிகப்பெரிய தாதா பிரகாஷ்ராஜ். அவர் மனைவி ஜெயசுதா. அரவிந்த்சாமி, அருண்விஜய், சிம்பு ஆகிய மூன்று மகன்கள்.கூடவே ஒரு மகள். எதற்கு அப்படி ஒரு மகள்? கதையில் அவருடைய பங்கு என்ன? என்கிற கேள்விகளுக்கு விடையே இல்லை. சென்னையில் அரவிந்த்சாமி அப்பாவின் அடியொற்றி அடியாள் வேலை பார்த்துக்கொண்டிருக்க துபாய் ஷேக்குகளுடன் வியாபாரம் செய்து பெரிய தொழிலதிபர் ஆகும் முயற்சியில்
விமர்சனம்

சாமி இருமடங்கு – திரைப்பட விமர்சனம்

2003 ஆம் ஆண்டு வெளியான சாமி படத்தில், திருநெல்வேலியில் காவல்துறை உயரதிகாரியாக இருக்கும் ஆறுச்சாமி, அந்த மாவட்டத்தில் பெரும் அரசியல் செல்வாக்குடன் இருக்கும் பெருமாள்பிச்சையுடன் மோதி, கடைசியில் யாரும் அறியாவண்ணம் அவரைக் கொலைசெய்வார். பெருமாள்பிச்சையைக் காணவில்லை என்பது மக்கள் கருத்து. அதோடு படம் முடியும். பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் இப்போது வந்திருக்கும் சாமி இருமடங்கு
விமர்சனம்

ராஜா ரங்குஸ்கி – திரைப்பட விமர்சனம்

நாயகன் மெட்ரோசிரிஷின் பெயர் ராஜா, நாயகி சாந்தினியின் பெயர் ரங்குஸ்கி. படத்தின் தலைப்புக்கு விடை கிடைத்துவிட்டதா? அடுத்து ரங்குஸ்கி என்றால் என்ன அர்த்தம்?என்ற கேள்வி வரலாம். புகழ்பெற்ற எழுத்தாளர் சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன். அதனால் அவர் ரங்குஸ்கி என்கிற புனைபெயர் வைத்திருந்தார். இப்படத்தின் நாயகியும் தன்னை எழுத்தாளர் என்று சொல்லி ரங்குஸ்கி என்கிற புனைபெயரை
விமர்சனம்

யு டர்ன் – திரைப்பட விமர்சனம்

பத்திரிகையாளரான சமந்தா, சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் நடக்கும் விபத்துகள் குறித்து எழுத விழைகிறார். அது தொடர்பான விவரங்கள் தேடி அவர் போகப்போக திரைக்கதையும் விரிகிறது. படம் முழுக்க நிறைந்திருக்கும் சமந்தா, காதல் பாசம் பயம் ஆகிய உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறார். நடக்கும் தொடர் மரணங்களுக்கான காரணத்தைக் கண்டறிந்து அதைத் தடுத்தே தீருவேன் என திடசங்கற்பம் பூண்டிருந்தாலும்,
விமர்சனம்

சீமராஜா – திரைப்பட விமர்சனம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களில் பொறுப்பற்ற இளைஞராக ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கும் வேடத்தை சிவகார்த்திகேயனுக்குக் கொடுத்த இயக்குநர் பொன்ராம், இந்தப்படத்தில் அவரை ராஜாவாக்கியிருக்கிறார். இரட்டைக்குதிரை பூட்டிய சாரட் வண்டியில் வலம்வந்து, கும்பிடு போடுகிறவர்களுக்கெல்லாம் பணம் கொடுக்கும் வள்ளலாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். அவருடைய கணக்குப்பிள்ளையாக
விமர்சனம்

தொட்ரா – திரைப்பட விமர்சனம்

பழனி அருகே சமுத்துவபுரத்தில் வசிக்கும் நாயகன் பிருத்விராஜுக்கும் சாதிச் சங்கப் பிரமுகராக இருக்கிற எம்.எஸ்.குமாரின் தங்கை நாயகி வீணாவுக்கும் காதல். இந்தக்கதையை வைத்துக்கொண்டு சமகாலத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட ஆணவக் கொலை நிகழ்வை திரைக்கதையில் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தப்படம். நாயகன் பிருத்விராஜ், நாயகி வீணா ஆகியோரின் காதல் காட்சிகள் வழக்கம் போல் இருந்தாலும்
விமர்சனம்

சீமராஜா படத்தின் முன்னோட்டம் எப்படி?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் சீமராஜா படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. எங்க ராசா எப்படி வருவாரு தெரியுமா? என்று குரல் கேட்க இரட்டைக்குதிரை பூட்டிய சாரட் வண்டி ஆக்ரோஷமாக வருகிறது.அதைத் தொடர்ந்து கோயிலில் சிவகார்த்திகேயனுக்குப் பட்டம் கட்ட அவர் சிரித்துக் கொண்டே வணங்குகிறார். உடனே வாரேன் வாரேன் சீமராஜா பாடலில் சிவகார்த்திகேயன் தோன்றுகிறார்.