ஒரு தப்பான காவல்துறை அதிகாரி மனம் மாறி நல்லது செய்ய முடிவெடுத்தால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதுதான் அயோக்யா. ஃபிட்டான உடல், ஸ்டைலான நடை, அலட்சிய உடல்மொழி என்று கேடுகெட்ட காவல்துறை அதிகாரி வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார் விஷால். நானும் எவ்வளவு நாளைக்குத்தான் நல்லவனாவே நடிக்கிறது? என்று
விமர்சனம்
எதிர்பாராத வகையில் ஒரு மர்ம மரணம்.படத்தின் நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் மரணமடைகிறார்.அவர் இறப்பதற்கு முந்தைய நாள் வரை அவரை யாரென்றே தெரியாத நாயகன் அருள்நிதி, தன் மீது கொலைப் பழி வந்துவிடுமோ? என அஞ்சி நடுங்குகிறார். அந்த மரணம் எப்படி நடந்தது? அருள்நிதிக்கு என்னவாயிற்று? என்பதைச் சொல்வதுதான் படம். திரைப்படத்தை சிறந்த கலையாக மட்டுமே பார்க்கக்கூடிய உதவி இயக்குநராக
பயமுறுத்தும் பேய்களுக்கு மத்தியில் சிரிக்க வைக்கும் பேய்களைக் காட்டி குழந்தைகளைக் கவர்ந்த ராகவா லாரன்ஸ், காஞ்சனா 3 படத்திலும் அதே பாணியைக் கையாண்டிருக்கிறார். பேய்க்கு பயப்படும் லாரன்ஸ் உடலிலேயே பேய் புகுந்துகொண்டால் எப்படி இருக்கும்? என்பதுதான் இந்தப்படமும். லாரன்சின் நிஜ வாழ்க்கை போலவே இப்படக்கதையிலும்,ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரை ஆதரித்து பாதுகாக்கிறார்.
சென்னையில் திறம்படச் செயலாற்றும் காவல்துறை அதிகாரி விவேக். ஓய்வுக்காக அமெரிக்காவிலுள்ள மகன் வீட்டுக்குச் செல்கிறார். ஓய்வுக்காகச் சென்றிருந்தாலும் அங்கு நடக்கும் குற்றச்செயல்கள் அவருடைய காவல்துறை புத்தியை உசுப்புகிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படம். திரையில் வந்தவுடன் சிரிக்க வைக்கும் விவேக், இந்தப்படத்தில் எடுத்தவுடனே கத்தியோடு வந்து ஒரு உயிரை
எல்லாப்படங்களிலும் காதல் இருக்கிறது. அவையெல்லாம், காதல் போயின் சாதலா? இன்னொரு காதல் இல்லையா? என்று கடந்து போய்க்கொண்டே இருக்கின்ற காதலாக இருக்கும். இந்தப்படம், காதலில் தொடங்கி காதலில் வாழ்ந்து காதலில் உறைந்த ஓர் காதலனின் கதை. வடநாட்டிலிருந்து கொடைக்கானலுக்கு சர்க்கஸ் நடத்த வருகிறது மெஹந்தி சர்க்கஸ் குழு. அக்குழுவில் இடம்பெற்றுள்ள இளம்பெண்ணைப் பார்த்ததும் கொடைக்கானலில்
அமிதாப்பாச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் உட்பட எல்லா முன்னணி இந்தி நடிகர்களையும் வைத்துப் படம் இயக்கியவர் கே.சி.பொக்காடியா. 1987 முதல் இன்று வரை படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய இயக்கத்தில் தயாராகி இன்று (ஏப்ரல் 12) வெளியாகியிருக்கும் படம் ராக்கி. ஸ்ரீகாந்த் நாயகனாகவும் ஈசான்யா நாயகியாகவும் நடித்திருக்கும் இந்தப்படத்தில் முக்கிய வேடங்களில் நாசர், ஷாயாஜி ஷிண்டே, ஓஏகே
சென்னையிலுள்ள ஒரு குடியிருப்பை மையமாக வைத்து, அங்கு வசிக்கும் பல்வேறு விதமான ஆட்கள். அவர்களுக்குள்ளான உறவு, பிரிவு, கோபம் ஆகிய எல்லாவற்றையும் கலந்து ஒரு மார்வாரி வில்லனை வைத்து அக்மார்க் கமர்ஷியல் கதை சொல்ல நினைத்திருக்கிறார்கள். அங்கு முக்கியமான ஆள் பார்த்திபன் அவருக்கு எதிராகச் செயல்படும் எண்ணம் கொண்டவர் ஜீ.வி.பிரகாஷ். இவர்கள் இருவருக்கும் மோதல். அவற்றில் என்னவெல்லாம்
ஸடெர்லைட் போன்றதொரு நாசகார ஆலையால் நூற்றுக்கணக்கானோர் இறந்து போய் ஏராளமானோர் ஊனமாகின்றனர். அந்த ஆலையிலேயே பணியாற்றிய நாயகனும் அவருடைய நண்பர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கப் போராடுவதுதான் உறியடி 2. நாயகன் விஜயகுமார், தொடக்கத்தில் ஒரு சாதாரண வீட்டுப் பையனாக வந்து போகப்போக பெரும் புரட்சிக்காரராக மாறுகிறார். அவருடைய வேடம் வலிமையானது.அதற்குப் பொருத்தமான நடிப்பை
நல்லா இருந்த ஒரு ஊரும் அதில் இருக்கும் ஓர் அழகான குடும்பமும் மதுவால் எப்படிச் சீரழிகிறது? என்பதை பொட்டிலடித்தாற்போல எடுத்துச் சொல்லும் படம்தான் குடிமகன். விவசாயத்தை அடிப்படைத் தொழிலகக் கொண்ட ஒரு அழகான கிராமத்துக்கு அரசியல்வாதிகளின் பணத்தாசை காரணமாக மதுபானக்கடை வருகிறது. அதை விரட்டப் போராடியும் முடியவில்லை. மாறாக ஊரே குடிக்கு அடிமையாகிறது. முடிவு என்ன என்பதைச் சொல்வதுதான்
கிரிக்கெட், கபடி ஆகிய விளையாட்டுகளை மையமாக வைத்துப் படங்கள் வந்திருக்கின்றன. இப்போது ஹாக்கி விளையாட்டை மையமாகக் கொண்டு வந்திருக்கிறது நட்பே துணை. நீண்டகாலமாக விளையாட்டு மைதானமாக உள்ள ஓரிடத்தை பன்னாட்டு நிறுவனமொன்றிற்குத் தாரை வார்க்க அதிகார வர்க்கங்கள் முயல்கின்றன. அதை எளிய மனிதர்கள் ஒன்று கூடி முறியடிக்கிறார்கள். அது எப்படி? என்பதுதான் கதை. ஜாலியான பையன், காதலுக்காக பெண்























