ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த கோமாளி திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இவர் தற்போது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி, அதில் நாயகனாகவும் நடித்துள்ளார்.அந்தப் படத்திற்கு லவ் டுடே என தலைப்பு வைத்துள்ளனர். அந்தப்படத்தில் நாயகியாக இவானா நடித்திருக்கிறார்.
செய்திகள்
கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. இந்தப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் படம் பத்துதல. அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன. அப்படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிக்கும் படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. அதற்குக் காரணம்
மகிழ்திருமேனி இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் உருவாகியிருக்கும் கலகத்தலைவன் படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. இப்போது மாரிசெல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் உதயநிதி. அவர் தீவிர அரசியலிலும் இருந்துவருவதால் மாமன்னன் படம்தான் அவர் நடிக்கும் கடைசிப்படம் என்று சொல்லப்பட்டது. ஆனால், நெஞ்சுக்குநீதி வெற்றிவிழாவில் பேசும்போது, மாமன்னன் படம்தான்
குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்திப்பாண்டி ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது கார்த்தி, ஷங்கர் மகள் அதிதி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ள விருமன் படத்தை இயக்கியுள்ளார் முத்தையா. ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான இந்தப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்துக்கு அடுத்து ஆர்யாவை கதாநாயகனாக
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் விஜய். தெலுங்குதயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கும் இந்தப்படம் விஜய்யின் 66 ஆவது படம். 66 ஆவது படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே 67 ஆவது படத்தின் வேலைகளும் தொடங்கியிருக்கிறது. விஜய்யின் 67 ஆவது படத்தை மாஸ்டர் படத்தில் இணைதயாரிப்பாளராக இருந்த லலித்குமார் தயாரிக்கிறார். அப்படத்தை மாஸ்டர்
ரஜினிகாந்த்தின் 169 ஆவது படம் ஜெயிலர். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தை நெல்சன் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. அதற்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இப்படத்தில் ரஜினி நடிக்கிறார் நெல்சன் இயக்குகிறார் அனிருத் இசையமைக்கிறார் ஆகியனவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். மற்ற எதையும் அவர்கள் அறிவிக்கவில்லை. ஆனால்,
ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகும் படம் இந்தியன் 2. இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளைக் கடந்து இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த சென்னை எழிலகம் அருகே உள்ளே பொதுப்பணித்துறை அலுவலகப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பைப் பத்துநாட்கள் நடத்த அனுமதி கேட்டார்களாம். ஆனால்,அரசாங்க அலுவலகங்கள் அங்கே
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம்.இப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதையடுத்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன், தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் வாத்தி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். இவற்றில், வாத்தி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகச்
2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப்படம் மூலம் தயாரிப்பு நிறுவனமாக தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமான நிறுவனம் ஒய்நாட்ஸ்டுடியோஸ். அதன்பின், இறுதிச்சுற்று, விக்ரம்வேதா அண்மையில் வெளியாகி தேசியவிருது பெற்ற மண்டேலா உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளது அந்நிறுவனம். அந்நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பவர் சசிகாந்த். முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவாஜியின்
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ ஆகிய படங்களுக்குப் பிறகு அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கிவருகிறார். சஸ்பென்ஸ்,





















