பிரபல இந்தி நடிகர் அமீர்கான் நடிப்பில் லால் சிங் சதா என்கிற படம் தயாராகியிருக்கிறது. இது விருது பெற்ற டாம் ஹாங்க்ஸ் திரைப்படமான பாரஸ்ட் கம்பின் அதிகாரப்பூர்வ இந்தி மொழிமாற்று ஆகும். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இப்படத்தில் கரீனா கபூர் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அமீர்கான் முதலில்
செய்திகள்
சூர்யா 40 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சத்யராஜ் நடிக்கிறார். சூர்யா – சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இப்படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளராக இமான் பணிபுரிகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு
லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வந்த இந்தியன்்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இயக்குநர் ஷங்கர் பிற
கொரோனா முதல் அலை பரவத் தொடங்கியது முதலே திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் வெளியீட்டுக்கு தயாராக இருந்த படங்கள் அனைத்தும் முடங்கின. இதனால் திரைத்துறைக்கு பெரும் நட்டம் ஏற்பட்டது. இந்நிலையில், பல படங்கள் நேரடியாக இணையதளத்தில் வெளியானது. திரையரங்குத் தொழிலுக்கு முற்றிலும் எதிரானது என்றாலும் பொதுமுடக்கத்தால் பல்ர் இணையதளங்களை நாடினார்கள். இப்போது,கேரளாவில் மலையாளத்
2019 ஆம் ஆண்டும் பிப்ரவரி 12 ஆம் தேதி மாநிலங்களவையில் ஒளிப்பதிவு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் 2021-இல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்தத் திருத்தச் சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். மேலும் திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்பட உள்ளன.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா,இசையமைப்பாளராக யுவன்ஷங்கர்ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒரு துரத்தலுடன் (சேஸிங்) கூடிய சண்டைக்காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டியிருக்கிறதாம். இதற்காக வெளிநாடு செல்லத்
சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் அண்ணாத்த. இந்தப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்ட இந்தப் படம், கொரோனா காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது கொரோனா இரண்டாவது
நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் நயன்தாரா.இவற்றில், நெற்றிக்கண் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது.காத்துவாக்குலரெண்டுகாதல் படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ளவேண்டியிருக்கிறதாம். இவற்றிற்கடுத்து அவர் எந்தப்படத்தில் நடிக்கிறார் என்பது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.
ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 என்கிற பெயரில் ஒரு சட்டத்தை இயற்ற மோடி அரசு முன்வந்திருக்கிறது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால், ஒரு திரைப்படம் வெளியான பின்பு அதுபற்றி யாராவது சிலர் புகார் கொடுத்தால் அதனடிப்படையில் அப்படத்தைத் தடை செய்யவும் அப்படம் எடுத்தவர்களைக் கைது செய்யவும் முடியும். சனநாயகத்தின் குரல்வளையை அப்பட்டமாக நெறிக்கும் இச்சட்டம் குறித்து மக்கள் கருத்தைக்
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன்’ திரைப்படம், 1996 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இந்தத் திரைப்படத்தின் 2 ஆம் பாக, இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. கம்ல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்கம் அமைத்து படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்று வந்த போது, படப்பிடிப்புத்





















