திருச்சி அருகே உள்ள கே.கள்ளிக்குடி என்ற கிராமத்தில் பிறந்து,அங்கேயே காவேரி கல்லூரியில் பி.எசி.மைக்ரோபயாலஜி படித்த பின், சென்னையில் வேலை கிடைத்துவிட்டதாகப் பொய்சொல்லிவிட்டு சென்னை வந்தவர், கலகலப்பான பேச்சுக்காகவே தீரன் மற்றும் எம்.கே தொலைக்காட்சி உட்பட சில இடங்களில் தொகுப்பாளராகப் பணிபுரிந்தவர்,
செய்திகள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் படம் தயாராகியுள்ளது.இந்தப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 24 ஏஎம் ஸ்டியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள அயலான் படம் படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகளில் இருக்கிறது. அப்படத்தில் நிறைய கணினி வரைகலைக் காட்சிகள் இருப்பதால் அதன் வேலைகள் முடிவடையப் பல மாதங்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது.
சனவரி 11,2020 அன்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணையும் அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘வாடிவாசல்’ என்பதை அறிவித்தார். அதன்பின், சூர்யாவின் பிறந்தநாளையொட்டி சூலை 23 அன்று வாடிவாசல் படத்தின் முதல்பார்வையை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில் இன்று (ஜூலை 16) ‘வாடிவாசல்’ படத்தின் தலைப்பு வடிவமைப்பை
ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படம் எனிமி.இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசையமைக்கிறார். வினோத் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2020 அக்டோபர் 16 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இடைவெளி விட்டுவிட்டு நடந்த அப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 12 ஆம் தேதி நிறைவுற்றதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் ‘செம்பருத்தி’.தொடக்கத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது இந்த்த்தொடர். இத்தொடரில் கார்த்திக் ராஜ், ஷபானா, பிரியா ராமன் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். கடந்த ஆண்டு திடீரென ‘செம்பருத்தி’ தொடரிலிருந்து கார்த்திக் ராஜ் நீக்கப்படுவதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதன் பிறகு
2018 ஆம் ஆண்டு நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்கிற உயர்தர மகிழுந்தை இறக்குமதி செய்தார்.இந்த மகிழுந்துக்கு நுழைவு வரி விதிக்கப்பட்டது. அதற்குத் தடை கோரி நடிகர் விஜய் தர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஜய்க்கு ரூ. 1 இலட்சம் அபராதம் விதித்தது
தனுஷ் இப்ப்போது கார்த்திக் நரேன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து சேகர்கம்முலா இயக்கும் தெலுங்குப்படம் அதனைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நானேவருவேன் ஆகிய படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது. இவ்விரு படங்களின்
எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் சலனப்படம் (மோஷன் போஸ்டர்) இன்று (11.07.2021) மாலை வெளியானது. இதையொட்டி படக்குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. இரசிகர்களின் நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது, நடிகர் அஜித் குமாரின் இரசிகர்கள் இப்போது உற்சாகத்தில் திளைக்கலாம். நடிகர் அஜித்தின் “வலிமை” படத்தைப் பற்றிய தகவலுக்காக
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், கார்த்தி, விக்ரம்,ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், கலை இயக்குநராக தோட்டாதரணி ஆகியோர் பணிபுரிந்து
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா,இசையமைப்பாளராக யுவன்ஷங்கர்ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒரு துரத்தலுடன் (சேஸிங்) கூடிய சண்டைக்காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது என்று சொல்கிறார்கள். இந்நிலையில்,





















