புதுமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘தேவ்’. இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளார். இவர்களுடன்,ரம்யாகிருஷ்ணன்,பிரகாஷ்ராஜ் ‘ஸ்மைல் சேட்டை’ ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், அம்ருதா, வம்சி ஆகியோரும் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் கார்த்திக்,
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என் ஜி கே படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் புதிய படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்போதைக்கு சூர்யா 37 என்று அழைக்கப்படுகிறது. இந்தப்படத்தில் நாயகியாக சாயிஷாவும் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் மோகன்லால், இந்தி நடிகர் பொம்மன் இரானி, ஆர்யா ஆகியோர் நடிக்கிறார்கள். ஜூன் 23 அன்று இலண்டனில்
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்போதைக்கு சூர்யா 37 என்று அழைக்கப்படுகிறது. இந்தப்படத்தில் நாயகியாக சாயிஷாவும் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் மோகன்லால், இந்தி நடிகர் பொம்மன் இரானி, ஆர்யா ஆகியோர் நடிக்கிறார்கள். ஜூன் 23 அன்று இலண்டனில் தொடங்கியது இப்படத்தின் படப்பிடிப்பு. இப்போது குலுமணாலியில்
மூவிபஃப் நிறுவனம் சார்பில், ஃபர்ஸ்ட் கிளாப் தமிழ் குறும்படப் போட்டி நடந்தது.அதில் வெற்றி பெற்ற படங்களுக்கு விருது வழங்கும் விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில், நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். அவர், மேடையில் பேசத் தொடங்கியதுமே, ரசிகர்கள் என்.ஜி.கே… என்.ஜி.கே என்று குரல் எழுப்பினர். அதனால், இதே மேடையிலதான் சொன்னேன்.
தமிழகத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 23 அன்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ உருவாக்கிட, மாநில அளவில் பரப்புரையைத் தொடங்கி வைக்கும் விதமாக, அதற்கான இலச்சினையை அறிமுகம் செய்து வைத்தார். இந்த ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ பரப்புரையின் விளம்பரத் தூதர்களாக
கேரளாவில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு காரணமாக அம்மக்களின் நிவாரணத்துக்காக நிதி உதவி செய்யுங்கள் என்று கேரள முதல்வர் பினராயிவிஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் பலரும் கேரளாவுக்கு உதவி வருகிறார்கள். இந்நிலையில், திரையுலகப் பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர். கமல்ஹாசன் 25 இலட்ச ரூபாய், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 25 இலட்ச ரூபாய், விஷால் 10 இலட்ச ரூபாய்,
கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அம்மாநிலத்தின் 14 மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர் . கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டு வருகிறது இந்நிலையில் கேரளா முதல்வர் பிணரயி விஜயன் அவர்கள் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கு சூர்யா, கார்த்தி இணைந்து 25 இலட்சம், கமல் 25
ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் வெள்ளத்தில் சிக்கி ஒட்டுமொத்த கேரளாவும் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கேரளாவிருந்து வந்த நடிகை நயன்தாரா நடித்த படம் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகவிருக்கிறது. இந்தப்படத்தின் விளம்பரப் பாடலில் நடிப்பது தொலைக்காட்சிகளில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவது, அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வது என்று பரபரப்பாக இயங்கிக்
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அரசியலிலலும் மூத்த தலைவர் என்பது மட்டுமின்றி கலைத்துறையில் தீவிர ஈடுபாடு காட்டியவர். இந்தியாவின் முதல்குடிமகனான குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி ஆகியோர் அவரைப் பற்றி விசாரித்து பதிவு போடுகிறார்கள். நேரடி எதிரிகளான அதிமுகவைச் சேர்ந்த தமிழக
ஜூலை 13 அன்று வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றி விழா ஜூலை 24 அன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சூர்யா, நடிகர் கார்த்தி, 2டி ராஜ்சேகர் பாண்டியன்,சத்யராஜ், பொன்வண்ணன்,சரவணன்,சூரி,மாரிமுத்து,இளவரசு, ஸ்ரீமன்,மனோஜ் குமார்,நாயகி சயீஷா,பிரியா பவானி ஷங்கர்,அர்த்தனா பினு, பானுப்ரியா,மௌனிகா,ஜீவிதா, இந்துமதி,கலைஇயக்குநர் வீரசமர்,எடிட்டர் ரூபன், இசையமைப்பாளர் டி.இமான்





















