கபடி போட்டியின் பெருமைகளைச் சொல்லும் இன்னொரு படம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.. இம்முறை பெண்கள் கபடி. ஓய்வுபெற்ற இராணுவவீரர் பாரதிராஜா. அவருக்குக் கபடி போட்டியில் தீவிர ஈடுபாடு. அதனால் எல்லோருக்கும் கபடி கற்றுக்கொடுக்கிறார். அவரிடம் பயின்ற சசிகுமார் உட்பட பலர் நல்ல நிலையில்
விமர்சனம்
2000 ஆம் ஆண்டின் முதல்நாளில் கோமாவில் விழும் பள்ளி மாணவனுக்கு பதினாறு ஆண்டுகள் கழித்து 2016 ஆம் ஆண்டு நினைவு திரும்புகிறது. பதினாறு ஆண்டுகளில் நாட்டில் நடந்துள்ள மாற்றங்களும் அதனால் அவ்விளைஞன் எதிர்கொள்ளும் சிக்கல்களும்தான் படம். படத்தின் தொடக்கத்தில் பனிரெண்டாம் வகுப்பு மாணவனாக வருகிறார் ஜெயம்ரவி. அதற்காக கடுமையாக உழைத்து உடல் இளைத்திருக்கிறார். ஆனாலும் மாணவன் வேடத்துக்கு
ஷ்ரதா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தாரங் ஆகிய மூன்று இளம்பெண்களும் ஒன்றாக ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார்கள். ஆளுக்கொரு வேலைக்குப் போகிறார்கள். மூவருக்கும் பெரிய இடத்துப் பையன்களால் திடீர் சிக்கல் ஏற்படுகிறது. அவர்கள் இப்பெண்களுக்கு தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி நிறையத் தொல்லைகள் கொடுக்கிறார்கள். அவற்றிலிருந்து அவர்கள் மீண்டார்களா? அப்பெண்களுக்கு அஜீத் உதவுகிறார்.
மணிமேகலைக் காப்பியத்தில், அட்சயபாத்திரம் என்றும் அமுதசுரபி என்றும் அழைக்கப்படும் ஒரு பாத்திரம் இருக்கிறது. அள்ள அள்ளக் குறையாமல் அமுதம் வரும் என்பது அதன் சிறப்பு. அந்தப்பாத்திரம் 2019 ஆம் ஆண்டு ஒருவர் கையில் கிடைத்தால், அவர், ஆற்றுநர்க்கு அளிப்போர், அறவிலை பகர்வோர், ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை. மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி
தொரட்டி என்பது ஆடுகளுக்கு தழை (உணவு) ஒடிக்கப் பயன்படும் கூர் அருவாவின் பெயர். அப்பெயரில், ஊர் ஊராகச் சென்று ஆட்டுக்கிடை போட்டு வாழும் மக்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டு உருவாகியிருக்கிறது இப்படம். நாயகனாக நடித்திருக்கும் ஷமன் மித்ருவின் பாத்திரம், நாயகன் என்பதற்கான இலக்கணங்களை உடைத்து எதார்த்த இளைஞனைப் பிரதிபலிக்கிறது. அவ்வேடத்துக்கு பொருத்தமாக நடித்திருக்கிறார். நின்று
செந்நாய்க் கூட்டம் இருப்பதால் ஒரு காட்டில் உள்ள மரங்களை வெட்ட முடியாத நிலை. ஒருவர் அந்தக் காட்டின் மரங்களை வெட்டும் உரிமையைத் துணிந்து பெறுகிறார். அவருடைய துணிவுக்குக் காரணம், துப்பாக்கி ஏந்திய வேட்டைக்காரர்களைப் பாதுகாப்புப் பணிக்கு நியமித்தது தான். ஆனால் அவர்கள் வேட்டைக்காரர்களே இல்லை, திருடர்கள் அதுமட்டுமின்றி அவர்களுக்கு துப்பாக்கி சுடவே தெரியாது. அவர்களை நம்பி
பனிரெண்டு வயதுடைய சிறுவன் கொளஞ்சிக்கு, அப்பாவும் அவருடைய கட்டுப்பாடுகளும் வேம்பாகக் கசக்கிறது. அதனால் பல சிக்கல்கள் உருவாகின்றன. இச்சிக்கலை உளவியல் ரீதியாக அணுகித் தீர்வு சொல்கிற படம்தான் கொளஞ்சி. கொளஞ்சியாக நடித்திருக்கும் கிருபாகரன், வேடத்துக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார். அடிவாங்கியாக நடிக்கும் சிறுவன் பேசுபவை அனைத்தும் சிரிப்புவெடி. சிந்திக்கவும் வேண்டியவை.. படம்
நாயகி தாரா அலிசா பெர்ரி, அய்யங்காராத்துப் பெண் அவரைக் காதலிக்க ஏராளமானோர் போட்டி போடுகிறார்கள். அவருக்கோ யாருக்கும் பயப்படாத ஒரு ரவுடியைக் காதலித்துக் கல்யாணம் செய்யவேண்டும் என்று ஆசை. அந்த ரவுடியும் அய்யங்காராக இருக்கவேண்டும் என்பது ஒரே நிபந்தனை. அப்படிப்பட்ட நாயகி ஒரு சந்தர்ப்பத்தில்,புரட்டாசி மாதம் பெருமாளைக் கும்பிட நெற்றியில் நாமமிட்ட நாயகன் சந்தானத்தைப் பார்த்து
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிராங்க் ஷோ நடத்தும் குழுவில் அமலாபால் இருக்கிறார். அந்நிகழ்ச்சியில் அவர்கள் செய்யும் அடாவடிகள் மற்றும் அதன் விளைவுகள்தாம் படம். தமிழகத்தின் தென்கோடியில் நடந்த தோள்சீலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மார்பை மறைக்கும் உரிமைக்காக மார்புகளை அறுத்தெறிந்த பெண்ணின் அறிமுகத்தோடு படம் தொடங்குகிறது. அப்படிப் போராடிப் பெற்ற உரிமை இது. அதை அலட்சியம்
காவல்துறை அதிகாரியாக இருந்து பின் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறவராக மாறுகிறார் விக்ரம். பெரிய திருட்டு ஒன்றைச் செய்யப் போகுமிடத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிற அளவுக்குச் சிக்கல். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கேயும் அவரைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அங்கிருக்கும் ஆண் செவிலியரான அபிஹாசன் அவரைக் காப்பாற்றுகிறார். அதன்விளைவு அபி ஹாசனின் நிறைமாதக் கர்ப்பிணி மனைவி





















