சின்னச் சின்ன திருட்டுகளைச் செய்துகொண்டு நண்பனோடு சேர்ந்து ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் தனுஷ் ஒரு கட்டத்தில் சினேகாவை சந்திக்கிறார். அப்போதுதான் தான் யார்? என்பது தெரியவருகிறது. அதன்பின் அவர் வாழ்க்கையில் பல மாற்றங்கள்? அப்படி என்னவெல்லாம் என்பதுதான் படம். பட்டாஸ் என்கிற பெயரில் நண்பன் சதீஷ்
விமர்சனம்
ஓர் அழகான காதல் அருமையான சமுதாயக் கருத்து மனம் வலிக்கும் முடிவு ஆகிய அமசங்களைக் கொண்டு வந்திருக்கும் படம் தொட்டுவிடும்தூரம். நாயகன் விவேக்ராஜ், துடிப்பான கிராமத்து இளைஞன் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். காதல் பாசம் ஆகிய உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவற்றை விட சண்டைக் காட்சிகளில் தேர்ந்த நாயகர்கள் அளவுக்கு சண்டை செய்திருக்கிறார். நாயகி மோனிகா
கனவுகளையே உணவாக உண்டு வாழும் திரைப்பட உதவி இயக்குநர்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் நான் அவளைச் சந்தித்த போது. உதவி இயக்குநரான நாயகன் சந்தோஷ்,உறவினரின் முகவரியைத் தொலைத்துவிட்ட நாயகி சாந்தினியைக் காண்கிறார். அவருக்கு உதவி செய்யப்போக எதிர்பாராத சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சுவையாகச் சொல்லியிருக்கிறது
பிங்பேக், டார்டில்ஸ், காக்கா கடி, ஹேய் அம்மு ஆகிய நான்கு கதைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து காதல் வடிவில் மனிதநேயத்தைப் பறைசாற்றுவதுதான் சில்லுக்கருப்பட்டி. குப்பை பொறுக்கும் சிறுவனின் நேர்மை, கோடீஸ்வர சிறுமியின் கள்ளங்கபடமற்ற அன்பு, ஆமைகளின் இனப்பெருக்கம் குறித்து கவலைப் படும் உயிர்நேயவாதிகளின் சொந்த வாழ்வில் ஏற்படும் மாற்றம், உலகத்தால் கைவிடப்பட்டதாக உணரும் ஒருவனுக்குக்
எதிர்பாரா வகையில் ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலையைச் செய்தது யார்? என்கிற விசாரணையும் அதன் இறுதியில் கிடைக்கும் அதிர்ச்சி தரும் விடையும்தான் இந்தப்படம். காதலாகிக் கசிந்துருகி இணைந்து வாழ்கின்றனர் லிஜேஷும், காயத்ரியும். காதல் என்றால் கூடவே மோதலும் இருக்கும்தானே. அப்படியான சந்தர்ப்பத்தில் ஓர் இரவில் காயத்ரி கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலையைச் செய்தது யார் என்ற
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலுள்ள அரசியல்வாதி சத்யராஜ். சட்டமன்ற உறுப்பினரும் கூட. அம்மா செளகார் ஜானகி, மனைவி சீதா, மகள் ஜோதிகா ஆகியோர் கொண்ட அளவான குடும்பம். ஜோதிகா தன் தம்பி காணாமல் போனதால் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்கிறார். கோவாவில் சுற்றுலா வழிகாட்டியாக இருக்கும் கார்த்திதான் சத்யராஜின் காணாமல் போன மகன் என்று தகவல் வர கோவா சென்று மகனை அழைத்துவருகிறார் சத்யராஜ்.
மாணவர்களின் திறமைகளை அவர்கள் வாங்கும் மதிப்பெண்களை வைத்து எடை போடாதீர்கள் என்கிற கருத்தை வலியுறுத்திச் சொல்கிற படம் தான் ஹீரோ. சின்ன வயதில் சக்திமான் போல் சூப்பர் ஹீரோவாகவேண்டும் என ஆசைப்படுகிற சிவகார்த்திகேயன் வளர்ந்து வாலிபனானதும் தவறான வேலைகள் செய்கிறார். தன்னை நம்பி வருகிற ஒரு பெண்ணுக்கு உதவி செய்யப் போகிற நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளில் அவருடைய அறிவுக்கண் திறக்கிறது.
படத்தின் நாயகி தானாநாயுடு. எழுத்தாளரான அவர், பேய்கள் பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு நாவல் எழுதவிரும்புகிறார். . தோழிகளுடன் சேர்ந்து அதற்கான தேடுதலில் இறங்குகிறார். பல வருடங்களாக பேய் வீடு என்று மக்களால் சொல்லப்பட்டு பூட்டியே கிடக்கும் ஒரு வீட்டைத் தேர்ந்தெடுக்கிறார். அந்த வீட்டின் பிரச்சனையை ஆராயத் துவங்குகிறார். இன்னொரு பக்கம், ஒரு தாய் அவருடைய சிறுவயது மகள் ஆகியோர் தற்கொலை
வடசென்னை இளைஞர்களின் கனவுகளில் ஒன்று, இந்திய கால்பந்து அணியில் இடம் பெற்று விளையாடவேண்டும் என்பது. அதற்காகத் தீவிரமாக முயலும் ஒருவனைப் பற்றிய கதைதான் சாம்பியன். நாயகனாக விஷ்வா எனும் புதுமுகம் நடித்திருக்கிறார். கால்பந்து விளையாடும் காட்சிகளில் பொருத்தமாக இருக்கிறார். அன்பு,காதல், கோபம்,தவிப்பு ஆகியனவற்றை வெளிப்படுத்த வேண்டிய வேடம் அவருக்கு. அவற்றில் இன்னும் பயிற்சி
சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் மூன்று பெண்கள் அடுத்தடுத்து மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்கின்றனர்.ஒரு பெண் மர்மமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்படுகிறார். இவை எதனால் நடக்கிறது? என்பதைக் காவல் அதிகாரிகளான பரத்தும் சுரேஷ்மேனனும் இணைந்து புலனாய்வு செய்வதுதான் கதை. படத்தில் நாயகன் பரத்தின் பெயர் காளிதாஸ். எனவே அந்தப்பெயரை தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.























