மதச்சார்பற்ற நாடு என்று அரசியல் சாசனத்தில் சொல்லிக் கொண்டு அதற்கு நேரெதிராக எல்லாவற்றையும் மத அடிப்படையில் அணுகும் ஆபத்தான போக்கில் இந்தியா இருக்கும் நிலையில் மனிதம் தாண்டிப் புனிதம் இல்லை என்பதை ஓங்கிச் சொல்ல வந்திருக்கிறது ஜிப்ஸி. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்து அப்பாவுக்கும் இஸ்லாமிய
விமர்சனம்
இறைச்சிக் கழிவுகள் மற்றும் மருத்துவக்கழிவுகளால் ஒரு கிராமமே கடும் நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகிறது. அதிலிருந்து அம்மக்களைப் பாதுகாக்க வேண்டிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகளே அந்த அநியாயத்துக்குத் துணை போகிறார்கள். இதனால் அக்கிராமத்திலுள்ளோர் அதற்கெதிராகப் போராடுகிறார்கள். அவர்கள் வென்றார்களா? இல்லையா? என்பதைத்தான் இந்தப்படம் சொல்கிறது. அறிமுக நாயகன் சிவநிஷாந்த், மேற்குத்
மனைவியையும் மைத்துனியையும் ஆணவக் கொலை செய்த வழக்கில் கைதாகிறார் நாயகன் ரிச்சர்ட். அவர் பிணையில் வெளியில் வந்த பின்பு அவருடைய நடவடிக்கைகள் அக்கொலைகளில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்துகிறது. என்ன மர்மம்? என்பதைச் சொல்வதுதான் படம். ரிச்சர்ட் பல ஆண்டுகள் நடித்துக் கொண்டிருந்தாலும் இந்தப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரும். சிலம்ப ஆசிரியர் வேடத்துக்கு மிகப்பொருத்தமான
போதைப்பொருள் கடத்தல் கூட்டத்தைக் கண்டுபிடித்துக் களையெடுக்கும் காவல் அதிகாரி என்கிற ஒற்றைவரிக்கதையை உருவாக்கத்தில் வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக்நரேன். போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரி வேடத்தில் வருகிற அருண்விஜய், அதற்குக் கொஞ்சம் கூடுதலாகவே உழைத்திருக்கிறார். அவருடைய தோற்றமே இவர் எதையும் செய்துவிடுவார் என்று சொல்லிவிடுகிறது.இரண்டாவது தோற்றத்தை
அன்பான கணவன் மனைவி ஓர் அழகான குழந்தை, நல்ல வேலை சொந்தவீடு என்று மகிழ்ச்சியாக வாழும் நடுத்தர குடும்பத்துக்குள் ஒருநாள் பெரும்புயல் வீசுகிறது. அது அக்குடும்பத்திலுள்ள அழகான குழந்தையைக் காவு கேட்கிறது. அந்த சாதாரண குடும்பம் அவ்வளவு பெரும்புயலை எப்படி எதிர்கொள்கிறது? என்பதைப் படபடப்புடன் சொல்லியிருக்கும் படம்தான் காட்ஃபாதர். நடுத்தர குடும்பத்தலைவன் வேடத்துக்கு மிகச் சரியாக
இரண்டு பெரிய ரவுடிகளுக்கிடையே நடக்கும் அதிகாரப் போட்டியில் தவறுதலாகச் சிக்கிக் கொள்ளும் ஒரு விநோத நோயாளியின் கதைதான் நான் சிரித்தால். சோகம்,துக்கம்,பயம் ஆகியன வந்தால் அடக்கமுடியாமல் சிரிக்கும் விநோத நோய் கொண்டவர் ஹிப்ஹாப்தமிழா ஆதி. இதன் காரணமாக அவர் சந்திக்கும் சிக்கல்கள்தாம் திரைக்கதை. ஹிப்ஹாப்தமிழா ஆதி வழக்கம் போலவே துறுதுறுப்புடன் ஓடுகிறார் ஆடுகிறார் பாடுகிறார்.
பள்ளிப்பருவத்திலிருந்து ஒன்றாக விருக்கும் நண்பர்கள் அர்ஜூன் (அசோக் செல்வன்) அனு (ரித்திகா சிங்) மணி (சாரா). ஆண் பெண் பேதமின்றிப் பழகும் அவர்கள் சேர்ந்து மதுக்குடிக்கும் அளவு நெருக்கம். ஒருநாள் ரித்திகாசிங், என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? என்று அசோக் செல்வனிடம் கேட்கிறார். அதை ஒப்புக்கொண்டபோது என்னவெல்லாம் நடக்கிறது? என்பதை மட்டும் சொல்லி நிறுத்திவிடாமல்
மும்பையில் சின்னச் சின்ன தப்புகளைச் செய்துகொண்டிருக்கும் சந்தானம், பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு ஒரு பெண்ணைக் கடத்தும் வேலையை ஒப்புக்கொள்கிறார். சொன்னபடி கடத்தினாரா? கடத்தும்போது என்னவெல்லாம் நடந்தது என்பதைச் சிரிப்புடன் சொல்வதுதான் டகால்டி. சந்தானம் படத்துக்குப்படம் மெருகேறுகிறார். மிக எளிதாக வேடத்துக்கேற்ற நடிப்பைக் கொடுக்கிறார். நகைச்சுவை, நடிப்பு ஆகியனவற்றைத் தாண்டி
கோயம்புத்தூரில் அடுத்தடுத்து 14 இளம்பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களுடைய தலையை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு உடலை பொது வெளியில் காட்சிப்படுத்துகிறார் கொலைகாரர்.அந்தக் கொலைகாரரைக் கண்டுபிடிக்க முடியாமல் வருடக்கணக்கில் காவல்துறை திணறிக் கொண்டிருக்க கண் பார்வை தெரியாத கதாநாயகன் உதயநிதி ஏழு நாட்களுக்குள் கண்டுபிடிக்கிறார். அவர் யார்? ஏன் அப்படிச் செய்கிறார்? அவரை கண்
குற்றப்புலனாய்வு காவல் அதிகாரியாகப் பணியாற்றும் சேரன், ஒரு வழக்கில் அதிரடி நடவடிக்கை எடுத்ததால் சொந்த மகளுக்கே சிக்கல் ஏற்படுகிறது. அதனால் ஒரே இரவுக்குள் பலமுனைத் தாக்குதல்களை எதிர்கொள்கிறார். அவற்றைச் சமாளித்து மீண்டாரா? என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கும் படம் ராஜாவுக்கு செக். படத்தில் தனிக்காட்டுராஜாவாகப் புகுந்து விளையாடியிருக்கிறார் சேரன். குற்றப்புலனாய்வு























