ராசி, நட்சத்திரம், சோதிடம் ஆகியனவற்றில் மூழ்கி இருக்கும் நாயகன் ஹரீஷ்கல்யாணுக்கு திருமணம் தாமதமாகிறது. பார்க்கும் பெண்களிடமெல்லாம் ராசி ,நட்சத்திரம் கேட்பதால் பலரும் தெறித்து ஓடுகின்றனர். உடன்வேலை செய்யும் பெண் இவரை உருகி உருகி காதலித்தாலும் ராசிப் பொருத்தம் இல்லை என நிராகரிக்கிறார்.
விமர்சனம்
கால்பந்து விளையாட்டும் அதில் நடக்கும் அரசியலையும் மையப்படுத்திய கதை கொண்ட படம் ஜடா. நாயகன் கதிர், யோகிபாபு உள்ளிட்டோர் அடங்கிய கால்பந்து அணி, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வென்று இந்திய அணியில் இடம்பிடிக்கும் நோக்கத்துடன் பயிற்சி எடுக்கின்றனர். இந்நிலையில்,திடீரென, செவன்ஸ் எனப்படும் விதிமுறைகளக் கடைபிடிக்காத விளையாட்டில் கலந்து கொண்டாக வேண்டும் என நாயகன் கதிர்
இரும்புக்கடையில் குண்டு வெடித்து நான்கு பேர் பலி என்கிற செய்தியை மிகச் சாதாரணமாகக் கடது போவோம் நாம். இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படம் பார்த்தால் அதன் பின்னணி புரியும். உலகப்போரின் போது பயன்படுத்த வைத்திருந்த வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வதற்காக 2000 கோடியை அரசங்கத்திடம் வாங்கும் ஒரு நிறுவனம், சொன்னபடி அவற்றைச் செயலிழக்கச் செய்யாமல் கடலில் போட்டுவிடுகிறது. அப்படிப்
ஆபத்தில் இருக்கும் காதலியைத் தேடிச் செல்லும் காதலனின் மீது பாய்கிறது அசுர தோட்டாக்கள்… பிரச்னைகளைத் தாண்டி காதலியை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை. கெளதம் – தனுஷ் காம்போவில் ‘எனைநோக்கி பாயும்தோட்டா’ எப்படி இருக்கிறது? நாயகன் தனுஷின் மீது தோட்டா பாயும்போது கதை துவங்குகிறது. காக்க காக்க ஸ்டைடில் கதைச் சொல்ல துவங்குகிறார் நாயகன். வாரணம் ஆயிரத்தில் மேக்னாவை
தமிழகத்தின் தென்பகுதியில் சில இடங்களில், வயது முதிர்ந்தவர்களைக் கருணைக்கொலை செய்துவிடும் வழக்கம் இருந்திருக்கிறது. தலைக்கூத்தல் என்று சொல்லப்படும் அந்நிகழ்வு எல்லோருக்கும் தெரிந்தே நடக்கும். அதைச் செய்துவைக்கவே ஆட்களும் இருந்திருக்கிறார்கள். இந்நிகழ்வை மையமாகக் கொண்ட படம்தான் இது. மூன்று மகன்கள், இரண்டு மகள்களைக் கொண்ட முதியவர், மனைவியை இழந்தவர், எண்பது வயது ஆனவர்
ஆக்ஷன் படங்கள் நாயகர்களுக்கு மட்டும்தான் என்பதை உடைத்தெறிந்த ஹாலிவுட் படம்தான் சார்லிஸ் ஏஞ்சல்ஸ். நாயகிகள் செய்யும் ஆக்ஷன் அதகளமான சார்லிஸ் ஏஞ்சல்ஸ் ரசிகர்களை ஈர்த்ததா? சார்லிஸ் ஏஞ்சல்ஸ் என்பது ஸ்பை த்ரில்லர் திரைப்படம். 1970களில் டிவி தொடராக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர், ஹாலிவுட்டில் திரைப்படமாக 2000த்தில் முதல் பாகம் வெளியானது. பிறகு, 2003ல் இரண்டாம் பாகம்
விஷால், இராணுவ அதிகாரி, அவருடைய அப்பா பழ.கருப்பையா தமிழக முதல்வர். அண்ணன் ராம்கி துணைமுதல்வர். ராம்கியின் நண்பரும் பெரும் தொழிலதிபருமான வின்செண்ட் அசோகன், தமிழக அரசுத்திட்டம் ஒன்றைச் செயல்படுத்தும் ஒப்பந்தம் பெற்று அதற்காக 4000 கோடி ரூபாய் வங்கிக்கடன் வாங்கிக் கொண்டு வெளிநாட்டுக்கு ஓடிவிடுகிறார். அதைத் தொடர்ந்து இந்தியக்கட்சியுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் நடக்கும்
சென்னை மாநகரத்தில் நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருக்கும் கதாநாயகி பூஜாஸ்ரீ, தன்னைப் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளை ஏதாவதொரு காரணம் சொல்லி தவிர்த்து வருகிறார். அதற்குக் காரணம் ஒரு கிராமத்து இளைஞனான நாயகன் வசி. அவர் மீதான அதீத காதல் காரணமாகவே நாயகி திருமணத்தைத் தவிர்க்கிறார். இந்தக்காதல் கதையோடு விளை நிலங்களைக் கையகப்படுத்தி நாசகாரத் தொழிற்சாலைகள் அமைப்பதை எதிர்த்துப்
பிரதமர் முதல்வர் போன்ற பிரமுகர்கள் ஓரிடத்துக்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் வருவதற்குப் பல மணி நேரங்கள் முன்பாக சாலையோரம் சீரான இடைவெளியில் காவலர்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து உள்ளுக்குள் பரிகசித்துச் சென்றிருப்போம். மிக மிக அவசரம் படம் நம் எண்ணத்தை முற்றிலும் மாற்றிவிடுகிறது. தனக்குக் கீழே பணிபுரியும் ஒரு பெண் காவலர் மீது உயரதிகாரிக்குக் கோபம். அதனால் அந்தப் பெண்
ஒரு அமைச்சரையே நேருக்கு நேராக மிரட்டும் அளவு சென்னையில் பிரபல தாதாவாக இருக்கிறார் விஜய். அவர், திடீரென இந்திய அளவிலான போட்டியில் பங்கு கொள்ளும் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராகிறார். ஏன்? எப்படி? அதன்பின் என்ன நடக்கிறது? என்கிற கேள்விகளுக்கான விடைகள்தாம் படம். தாதா, கால்பந்து வீரர் என்கிற இரு பாத்திரங்கள் மட்டுமின்றி அப்பா மகன் என்று இருவேடங்களில்























