மகாதேவன் முனிராஜ் ஆகியோர் சிறுவயதிலேயே பிரிந்துவிட்ட சகோதரர்கள். சென்னையில் மகாதேவனும் ஈரோட்டில் முனிராஜும் வசிக்கிறார்கள். ஒருவரையொருவர் அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையை வைத்து அதற்குள் ஏராளமான சமுதாயச் சிக்கல்கள் பற்றிப் பேசியிருக்கும் படம் மகாமுனி. மகாவாகவும்
விமர்சனம்
ஐதர்அலி காலத்துப் பழிவாங்கும் கதை. கோடிகளைக் கொட்டி மாயாஜாலம் காட்டியிருக்கிறார்கள். படம் தொடங்கும் போதே ராய் என்கிற பெரிய தாதா, தன் சாம்ராஜ்யத்தை எப்படி பெரிதாக்கினார் இப்போது என்ன நிலை என்பது உட்பட நீண்ட அறிமுகம் நிறைய பாத்திரங்களை அறிமுகப் படுத்துகிறார்கள். அதுவே போதும் என்றாகிவிடுகிற நேரத்தில்,பிரபாஸ் வருகிறார். அவர் வரும்போதே ஒரு சண்டையுடன் வருகிறார். ஒரு ஆளிடம் ஒரு
மாலை ஆறு மணிக்கு மேல் கண் தெரியாது என்கிற மாலைக்கண் நோய் உள்ள நாயகன் அதை மறைத்து காதலிக்கிறார். கல்யாணம் வரை போகிறார். அப்போது என்னவெல்லாம் நடக்கின்றன என்பதை சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார்கள். நாயகனாக நடித்திருக்கும் வைபவ், கண் தெரியாத நேரங்களில் பொருத்தமாக நடித்திருக்கிறார். கண் தெரியாத நேரத்தில் நடனம் ஆடும்போது கூட பார்வையற்றவர்களின் உடல்மொழியைக்
கிராமப் புறங்களிலிருந்து பல கனவுகளோடு படித்துப்பட்டம் வாங்க வேண்டும் என்று நகரத்துக்கு வந்து கல்லூரியில் சேருகிறார்கள் பல மாணவர்கள். அவர்களின் வாழ்க்கையை தங்கள் சுயநலத்துக்காக வேட்டையாடும் கொடிய மனிதர்களை அடையாளம் காட்டுகிற படம் மயூரன். அஞ்சன், பாலாஜி ராதாகிருஷ்ணன், அமுதவாணன் ஆகியோர் மாணவர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களில் நாயகன் அஞ்சனுக்குப் படத்தில் சேகுவேரா என்று
மருத்துவத்துறையில் நடக்கும் அதிர வைக்கும் அநியாயங்களைச் சொல்கிறது மெய். இருபொருள்படும் தலைப்பிலேயே அதை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.பாஸ்கரன். நிஜத்தில் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் நாயகன் நிக்கிசுந்தரம். படத்திலும் அவர் அமெரிக்காவிலிருந்து தமிழகம் வருகிறார். வந்த இடத்தில் கண்முன் நிகழும் ஒரு கொடுமையைக் கண்டு அதை எதிர்த்துப் போராடுவதுதான் படம். நாயகன்
பக்ரீத் என்கிற பெயரையும் படத்தில் இருக்கும் ஒட்டகத்தையும் பார்த்தால் உங்கள் மனசுக்குள் ஒரு கதை தோன்றுமல்லவா? அதை அப்படியே படமாக்கியிருக்கிறார்கள். விவசாயத்தை நேசிக்கிற விவசாயிக்கு எதிர்பாராத ஒரு தருணத்தில் ஒட்டகம் ஒன்று கிடைக்கிறது. அதை குழந்தை போலப் பாவித்து வளர்க்கிறார். ஒரு கட்டத்தில் அதனால் சில சிக்கல்கள். அவற்றை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் படம். விவசாயம்தான்
கபடி போட்டியின் பெருமைகளைச் சொல்லும் இன்னொரு படம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.. இம்முறை பெண்கள் கபடி. ஓய்வுபெற்ற இராணுவவீரர் பாரதிராஜா. அவருக்குக் கபடி போட்டியில் தீவிர ஈடுபாடு. அதனால் எல்லோருக்கும் கபடி கற்றுக்கொடுக்கிறார். அவரிடம் பயின்ற சசிகுமார் உட்பட பலர் நல்ல நிலையில் இருக்கிறார்கள். இந்நிலையில் கிராமத்துப் பெண்களை ஒருங்கிணைத்து பெண்கள் கபடி குழு அமைத்து
2000 ஆம் ஆண்டின் முதல்நாளில் கோமாவில் விழும் பள்ளி மாணவனுக்கு பதினாறு ஆண்டுகள் கழித்து 2016 ஆம் ஆண்டு நினைவு திரும்புகிறது. பதினாறு ஆண்டுகளில் நாட்டில் நடந்துள்ள மாற்றங்களும் அதனால் அவ்விளைஞன் எதிர்கொள்ளும் சிக்கல்களும்தான் படம். படத்தின் தொடக்கத்தில் பனிரெண்டாம் வகுப்பு மாணவனாக வருகிறார் ஜெயம்ரவி. அதற்காக கடுமையாக உழைத்து உடல் இளைத்திருக்கிறார். ஆனாலும் மாணவன் வேடத்துக்கு
ஷ்ரதா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தாரங் ஆகிய மூன்று இளம்பெண்களும் ஒன்றாக ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார்கள். ஆளுக்கொரு வேலைக்குப் போகிறார்கள். மூவருக்கும் பெரிய இடத்துப் பையன்களால் திடீர் சிக்கல் ஏற்படுகிறது. அவர்கள் இப்பெண்களுக்கு தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி நிறையத் தொல்லைகள் கொடுக்கிறார்கள். அவற்றிலிருந்து அவர்கள் மீண்டார்களா? அப்பெண்களுக்கு அஜீத் உதவுகிறார்.
மணிமேகலைக் காப்பியத்தில், அட்சயபாத்திரம் என்றும் அமுதசுரபி என்றும் அழைக்கப்படும் ஒரு பாத்திரம் இருக்கிறது. அள்ள அள்ளக் குறையாமல் அமுதம் வரும் என்பது அதன் சிறப்பு. அந்தப்பாத்திரம் 2019 ஆம் ஆண்டு ஒருவர் கையில் கிடைத்தால், அவர், ஆற்றுநர்க்கு அளிப்போர், அறவிலை பகர்வோர், ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை. மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி























