இயக்குநர் ஷங்கரிடம் ‘ஐ’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் அருண் பிரசாத். ஜி.வி.பிரகாஷை நாயகனாக வைத்து ‘4ஜி’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். படத்துக்காக தனது பெயரை வெங்கட் பக்கர் என்று மாற்றியிருந்தார். சி.வி.குமார் தயாரிப்பில் வேல்ராஜ் ஒளிப்பதிவு,
செய்திகள்
அமிதாப் பச்சன், ஆயுஷ்மன் குரானா நடிப்பில் ‘பிங்க்’ இயக்குநர் ஷூஜித் சிர்கார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குலாபோ சிதாபோ’ இந்தித் திரைப்படம்,திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையத்தில் வெளியாகிறது. அதேபோல் சூர்யா தயாரித்துள்ள பொன்மகள் வந்தாள்,கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள பெண்குயின் ஆகிய படங்களும் நேரடியாக இணையத்தில் வெளியாகவிருக்கின்றன.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெ.ஜெ.ஃபிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’. இந்தப் படத்தில் இயக்குநர்களும், நடிகர்களுமான பாக்கியராஜ், பார்த்திபன் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் பிரபலங்கள், தங்கள் கைபேசியிலேயே குறும்படங்கள் எடுத்து வருகின்றனர். இயக்குநர் கெளதம்மேனன், சிம்பு, த்ரிஷா ஆகியோரை வைத்து கார்த்திக் டயல் செய்த எண் என்கிற குறும்படத்தை எடுத்திருக்கிறார்.அதன் டீசர் அண்மையில் வெளியானது. நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் ஒரு குறும்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
தமிழகத்தில், திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட விரும்புகிறவர்கள், தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபிலிம் சேம்பர், கில்டு ஆகிய மூன்றில் ஏதாவதொரு அமைப்பில் உறுப்பினராக வேண்டும். இப்போது புதிதாக ஒரு அமைப்பைத் தொடங்கும் முயற்சி நடக்கிறதாம். மேலே சொன்ன மூன்று அமைப்புகளில் ஃபிலிம்சேம்பர் என்பது தென்னிந்தியா முழுமைக்குமானது. அதில் தலைவராக வருகிறவர் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய
மணிரத்னம் இயக்கத்தில் தயாராகும் பொன்னியின்செல்வன் படப்பிடிப்பு கொரொனாவால் தடைபட்டிருக்கிறது. இந்நிலையில், மே 11 ஆம் தேதி முதல் படப்பிடிப்புக்குப் பின்னான வேலைகளைத் தொடங்கலாம் என்று தமிழக அரசு அனுமதியளித்தது. அதையொட்டி பணிகள் தொடங்கும் படக்குழுவினர் தொழிலாளர் சம்மேளனத்தில் கடிதம் கொடுக்கவேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி கூறியிருந்தார். அதன்படி முதல்நாளிலேயே ஷங்கர் இயக்கத்தில்
கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ஏஞ்சல் மு.மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி.இப்படங்களின் படப்பிட்ப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு புதியபடத்தில் நடிக்கவிருக்கிறார் உதயநிதி. கொரோனா கால ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது
தெலுங்குத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் ராணா டகுபதி. தமிழில் அஜீத்துடன் ஆரம்பம் படத்தில் நடித்திருந்தார். பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார். அதனால் தமிழ் இரசிகர்களுக்கும் நல்ல பரிச்சயம் உள்ளவர். அதோடு நடிகை த்ரிஷாவும் அவரும் காதலிக்கிறார்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்டது. அதன்பின் அவர்கள்
ரஜினிகாந்த் நடிக்கும் 168 ஆவது படமான அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை சிறுத்தை,வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் குஷ்பு,மீனா,நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கீர்த்திசுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.இவர்களோடு பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி
மே 11 ஆம் தேதி மாலை, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் என்ற தலைப்பிட்டு ஒரு கடிதம் வெளியானது. அதில்…. அன்புள்ள தயாரிப்பாளர் நண்பர்களே, தற்சமயம் “கொரோனா வைரஸ்” தாக்கத்தால் ஊரடங்கு பாதிப்பினால் நமது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மனரீதியாகவும், தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அனைவரும்





















