மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு பேச்சு வந்தது. இப்போது அது நடைமுறைக்கு வந்திருக்கிறது என்று சொல்லப்பட்டது. சிம்புவிடம் ஒரு கதையை மிஷ்கின் சொல்லியிருக்கிறார். அது அவருக்குப் பிடித்திருக்கிறதாம். அதனால் விரைவில் அவர்கள் இணையும் படம் குறித்த அறிவிப்பு வரும்
செய்திகள்
விஷ்ணுவிஷால் இப்போது காடன், ஜகஜால கில்லாடி, எஃப ஐ ஆர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றைத் தொடர்ந்து சிலுக்குவார்பட்டி சிங்கம் பட இயக்குநர் செல்லா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறாராம். இவர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ராட்சசன் படம் இந்தியில் குரல்மாற்று செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இவருக்கும் தாய்மொழி இந்தி என்பதால்,
நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.இவர் இன்று மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு வயது 34. இவர் பாலிவுட்டில் கை போ சே என்ற படம் மூலம் அறிமுகமானார். கடைசியாக சிச்சோர் படத்தில் நடித்தார்.எம்.எஸ்.தோனி படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இவரது “தில்
தமிழ்த் திரையுலகின் முக்கிய ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பீ.கண்ணன்.இயக்குநர் பீம்சிங்கின் மகன் படத்தொகுப்பாளர் லெனினின் சகோதரர்.50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார். அதில் சுமார் 40 படங்கள் பாரதிராஜாவின் படங்கள். பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’ தொடங்கி ‘பொம்மலாட்டம்’ வரை ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். அவர் உடல்நலக் குறைவால்
துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகிய பின்பு சிம்புவை வைத்து ஒரு படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் மிஷ்கின். அதோடு அருண்விஜய்யை கதாநாயகனாக வைத்து அஞ்சாதே 2 படத்தை எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார். இவை மட்டுமின்றி இன்னொரு படத்திற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறாராம். கதாநாயகியை மையப்படுத்திய அந்தக்கதையில் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும என நினைத்து அவரைச் சந்தித்து
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டனவாம்.இது விஜய்யின் 65 ஆவது படமாகும். விஜய்யும் ஏ.ஆர்.முருகதாசும் மீண்டும் இணைகிறார்கள் என்றதுமே அவர்களுடைய முந்தைய வெற்றிப்படமான துப்பாக்கியின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று பரவலாகச்
திரைப்பட விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி ஆகியோர் முயற்சியில் புதிய படமொன்று தயாரிக்கப்படவிருக்கிறது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வியாபாரத்தின் அடிப்படையில் சம்பளம் என்கிற புதிய திட்டத்தில் இப்படம் தயாராகிறது என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தப்படத்தை இயக்குபவர்
ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் நேரடியாக இணையதளத்தில் வெளியாகியுள்ள முதல் படமாக அமைந்துள்ளது. இப்படம் மே 29 ஆம் தேதி வெளியானது. பெண் குழந்தைகள் பாதுகாப்பை மையப்படுத்தி உருவான
ருத்ரய்யா இயக்கத்தில் ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அவள் அப்படித்தான்’.1978 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படம் இப்போது வரை இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது இந்தப் படத்தைத் திரும்ப எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் பத்ரி. இப்போது, ஸ்ரீப்ரியா கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பது உறுதியாகியுள்ளது. கமல்,ரஜினி
கொரோனா அச்சுறுத்தலால் சுமார் 70 நாட்களுக்குப் பிறகு சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் வெளியாகியுள்ளன. இதனிடையே சின்னத்திரை சங்கத்தின் செயலாளரான குஷ்புவின் பேச்சு ஒன்று வெளியாகி சர்ச்சையாகியுள்ளது. அந்தப் பேச்சில்,





















