2016 ஆம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் அவரே இயக்கவும் செய்கிறார்.
சினிமா
அகாடமி விருது எனப்படும் 95 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றுவருகிறது. இதில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘‘நாட்டு நாட்டு’’ பாடலுக்கு விருது கிடைத்துள்ளது. ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உட்பட பலர் நடித்த திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. சுதந்திரப் போராட்ட வீரர்களான சீதாராம ராஜு, கொமரம் பீம்
அகாடமி விருது எனப்படும் 95 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இப்போது (மார்ச் 13,2023 காலை) நடைபெற்றுவருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் 95 ஆவது அகாடமி விருதுகளை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் சிறந்த ஆவணப்பட குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவண குறும்படம்
முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இதானி உட்பட பலர் நடிக்கும் படம் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், வீரமணி கலை இயக்கம் செய்கிறார். இந்தப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்தது. அதன்பின் அந்நிறுவனத்துடன் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்தது. அக்டோபர் 9 ஆம் தேதியன்று
சிம்புவின் 48 ஆவது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் தேசிங்குபெரியசாமி இயக்குகிறார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப்போவது வேறு இயக்குநர்கள், தயாரிக்கப்போவது வேறு தயாரிப்பு நிறுவனங்கள் என்று பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ராஜ்கமல் நிறுவனத்தில் அவர் நடிப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது எப்படி
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற டான் படத்தை இயக்கியிருந்தவர் சிபிசக்ரவர்த்தி. அது அவருடைய முதல்படம். முதல்படமே சுமார் நூறுகோடிக்கு மேல் வசூல் செய்த படமாக அமைந்ததில் அவருக்குப் பெரும் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியோடு மகிழ்ச்சியாக இரண்டாவதுபடத்திலேயே ரஜினிகாந்த்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அமைத்த திரைக்கதை மற்றும் அவருடைய நடவடிக்கைகள் காரணமாக அந்த
சிம்பு நடித்துள்ள பத்துதல படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படத்துக்கு அடுத்து சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6.30 க்கு வெளியாகியிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி, சிம்புவின் 48 ஆவது படமான அடுத்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அந்நிறுவனம் சார்பாக கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் ஆகியோர்
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது செயலாளராக இருக்கும் மன்னன் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.அவர் போட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தல் நடத்தத் தடை இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆனால், தேர்தல் தாமதமாகிறது. தேர்தல் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் தயா்ரிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி வெளியான படம் சர்தார். இயக்குநர் பி.எஸ்.மிதரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டைவேடங்களில் நடித்திருந்தார்.ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். இந்தப்படத்தின் இணையதள ஒளிபரப்பு உரிமையை ஆஹா நிறுவனம் பெற்றிருந்தது. அதற்காக அந்நிறுவனம் கொடுப்பதாக
புதுஇயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள அயோத்தி படம் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் அப்படத்தின் கதை குறித்த சர்ச்சையும் எழுந்துள்ளது. எழுத்தாளர் மாதவராஜ், 2011 ஆம் ஆண்டு நடந்த ஓர் உண்மை நிகழ்வை அழக்கூடத்திராணியற்றவர்கள் என்ற பெயரில் பதிவு செய்திருந்தார். அந்நிகழ்வை அப்படியே எடுத்துக்கொண்டு அதை என் கதை என்று





















