சிம்புவின் 48 ஆவது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் தேசிங்குபெரியசாமி இயக்குகிறார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப்போவது வேறு இயக்குநர்கள், தயாரிக்கப்போவது வேறு தயாரிப்பு நிறுவனங்கள் என்று பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்த நேரத்தில்
சினிமா
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற டான் படத்தை இயக்கியிருந்தவர் சிபிசக்ரவர்த்தி. அது அவருடைய முதல்படம். முதல்படமே சுமார் நூறுகோடிக்கு மேல் வசூல் செய்த படமாக அமைந்ததில் அவருக்குப் பெரும் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியோடு மகிழ்ச்சியாக இரண்டாவதுபடத்திலேயே ரஜினிகாந்த்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அமைத்த திரைக்கதை மற்றும் அவருடைய நடவடிக்கைகள் காரணமாக அந்த
சிம்பு நடித்துள்ள பத்துதல படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படத்துக்கு அடுத்து சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6.30 க்கு வெளியாகியிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி, சிம்புவின் 48 ஆவது படமான அடுத்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அந்நிறுவனம் சார்பாக கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் ஆகியோர்
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது செயலாளராக இருக்கும் மன்னன் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.அவர் போட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தல் நடத்தத் தடை இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆனால், தேர்தல் தாமதமாகிறது. தேர்தல் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் தயா்ரிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி வெளியான படம் சர்தார். இயக்குநர் பி.எஸ்.மிதரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டைவேடங்களில் நடித்திருந்தார்.ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். இந்தப்படத்தின் இணையதள ஒளிபரப்பு உரிமையை ஆஹா நிறுவனம் பெற்றிருந்தது. அதற்காக அந்நிறுவனம் கொடுப்பதாக
புதுஇயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள அயோத்தி படம் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் அப்படத்தின் கதை குறித்த சர்ச்சையும் எழுந்துள்ளது. எழுத்தாளர் மாதவராஜ், 2011 ஆம் ஆண்டு நடந்த ஓர் உண்மை நிகழ்வை அழக்கூடத்திராணியற்றவர்கள் என்ற பெயரில் பதிவு செய்திருந்தார். அந்நிகழ்வை அப்படியே எடுத்துக்கொண்டு அதை என் கதை என்று
அயோத்தி படக்கதை குறித்த சர்ச்சை நீள்கிறது. இது தொடர்பாக எழுத்தாளர் மாதவராஜின் அடுத்த பதிவு….. அயோத்தி படம் நேற்று பார்த்து விட்டேன். தீராத பக்கங்களில் – 2011ல் எழுதியதுதான் மூலக்கதை. அப்படியே இருக்கிறது. திரைக்கதையில் மாற்றம் செய்திருக்கிறார்கள். பெயர்களில் மாற்றங்கள் இருக்கின்றன. பீகாரில் இருந்து வந்தவர்களாக குறிப்பிட்டு இருந்தேன். அதை அயோத்தியாக மாற்றி
ஸ்கிரீன்சீன் மீடியா எண்டர்டெயிண்ட்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் திரைப்படம் ‘அகிலன்’. இந்தப்படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்தப்படத்தில் தந்தை மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் ஜெயம்ரவி.இவற்றில் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி கதாபாத்திரம்.
புதுஇயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் ச்சிகுமார் நாயகனாக நடித்து வெளியான அயோத்தி படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது. இதைத்தொடர்ந்து எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், இந்தக்கதை அவர் எழுதியதென்றும் திரைப்படத்துக்கென்றே எழுதியதாகவும் சொல்லியிருக்கிறார். இந்நிலையில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் மருமகனும் எழுத்தாளர் மற்றும் தொழிற்சங்கவாதியுமான மாதவராஜ், இந்தப்படத்தின் கதை
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப்படத்தைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியிருந்தார். அதன்படி ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தைத் தொடர்ந்து




















