Home செய்திகள் Archive by category சினிமா (Page 306)

சினிமா

சினிமா செய்திகள் நடிகர்

சீமராஜா படத்தின் கதை பற்றி புதுநடிகர் சொன்னது என்ன?

திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக வேண்டும் என்பதற்காக வாய்ப்புத்தேடி எத்தனையோ பேர் நுழைந்தாலும் அத்தனை பேருக்கும் வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. அப்படியே கிடைத்தாலும் ரசிகர்களின் மனதில் பதிவது என்பது கூட ஒருவகையில் அதிர்ஷ்டம் தான்.. அப்படி ‘தர்மதுரை ‘ படத்தில் விஜய்சேதுபதியின்
சினிமா செய்திகள்

பொய்களைத் தடுக்க இயக்குநர் பாலா எடுத்த முடிவு

நாச்சியார் படத்துக்குப் பிறகு இயக்குநர் பாலா, நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் “வர்மா” படத்தை இயக்குகிறார். தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன்ரெட்டி படத்தின் தமிழ் மாற்று தான் இப்படம். படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே இப்படத்தின் நாயகி யார் என்பது பலரின் எதிர்ப்பார்ப்பு.இப்போது “வர்மா” படத்தின் கதாநாயகியாக மேகா எனும் புதுமுகம் நடிப்பதாக
சினிமா செய்திகள் நடிகர்

நட்புக்காக இறங்கிவந்த ரஜினி – கர்நாடக ஆச்சரியம்

பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் சுமலதா தம்பதியினரின் மகன் அபிஷேக் கெளடா கன்னடப் படமொன்றில் நாயகனாக அறிமுகம் ஆகிறார். கன்னடத்தில் மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்த நாக்சேகர் இயக்கும் புதியபடத்தில்தான் அபிஷேக் கதாநாயகனாகியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது. அதனால் அவருக்கு பிரபலமான நண்பர்கள் அதிகம்.ரஜினிகாந்தும் அவருடைய நண்பர்கள் பட்டியலில்
சினிமா செய்திகள்

நல்ல படம் நல்ல தேதி உற்சாகத்தில் மிஸ்டர் சந்திரமெளலி படக்குழு

திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் அவருடைய அப்பா கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் மிஸ்டர் சந்திரமெளலி. ரெஜினா நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் வரலட்சுமிசரத்குமார், இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கோ.தனஞ்செயன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப்படம் ஜூலை ஆறாம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்போதெல்லாம் படத்தை எடுப்பதை
சினிமா செய்திகள்

அசுரவதம் புரிந்த சசிகுமார் அடிவயிறு கலங்கும் விநியோகஸ்தர்கள்

சசிகுமார் கதாநாயகனாக நடித்த அசுரவதம் ஜூன் 29 அன்று வெளியானது. இப்படம் வெளியான நாளிலேயே அதற்கான வரவேற்பு குறைவாகவே இருந்தது என்று திரையரங்கு உரிமையாளர்கள் சொல்கின்றனர். வழக்கமாய் சசிகுமார் படத்துக்கு இருக்கும் வரவேற்பு கூட இந்தப்படத்துக்கு இல்லை என்று சொல்லும் விநியோகஸ்தர்கள், அதனால் மிகப்பெரும் நட்டத்தைச் சந்தித்து இருப்பதாகச் சொல்கின்றனர். இப்படத்தின் கோவை விநியோக உரிமையை
சினிமா செய்திகள் நடிகர்

ரஜினியின் அமைதிக்கு என்ன காரணம்? – மக்கள் கேள்வி

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கோச்சடையான் படத்தை அவரது மகள் செளந்தர்யா இயக்கினார். கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் வெளியான இந்த படத்தின் வெளியீட்டுக்கு, ஆட் பீரோ விளம்பர நிறுவனம் லதா ரஜினிகாந்த் இயக்குநராக உள்ள மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு கடன் அளித்திருந்தது. இந்தக் கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும்
சினிமா செய்திகள்

ஷங்கர்- ரஜினியின் 2 ஓ பட ரிலீஸ் தேதி நாளை அறிவிப்பு – லைகா அதிரடி

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2 ஓ திரைப்படம் இவ்வாண்டு சனவரியில் வெளியாகும் என்றும் அதன்பின் ஏப்ரலில் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது. படத்தின் தொழில்நுட்பப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பட வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள். அதற்குப் பதிலாக காலா வெளியானது. 2018 ஆகஸ்ட் அல்லது இவ்வாண்டு இறுதிக்குள் படம் வெளியாகிவிடும் என்று சொன்னார்கள். ஆனால் சில நாட்களாகப் படத்தின்
சினிமா செய்திகள் நடிகை

ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் ஓவியா

2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான படம் களவாணி. இயக்குநர் சற்குணத்தின் முதல்படம். விமல், ஓவியா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்த படம். எட்டாண்டுகளுக்குப் பிறகு இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை சற்குணம் இயக்குகிறார். அதே விமல் ஓவியா ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல்பார்வையை ஜூன் 30 அன்று மாலை ட்விட்டரில் வெளியிட்டார் நடிகர் மாதவன். அது வெளியான சில
சினிமா செய்திகள் நடிகர்

அறம் இயக்குநரை சித்தார்த் கழற்றி விட்டது எதனால்?

கோபிநயினார் இயக்கத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் அறம். அந்தப்படம் வெற்றி பெற்றதோடு அதுபற்றிய பரவலான விவாதங்களையும் உருவாக்கியது. அதிகாரவர்க்கத்தைக் கேள்விக்குள்ளாக்கிய படம் என்பதால் அதற்கு அவ்வளவு வரவேற்பு. இக்காலத்தில் ஒரு படம் வெற்றி பெற்றால் அப்படத்தின் இயக்குநரை பெரிய கதாநாயகர்கள் தொடங்கி பல்வேறு தயாரிப்பாளர்கள் சுற்றி வளைப்பார்கள்.
சினிமா செய்திகள் நடிகர்

இரண்டு நாயகிகளுடன் இணையும் சுந்தர் சி

இயக்கம் நடிப்பு ஆகிய இரண்டு குதிரைகளிலும் பயணம் செய்துகொண்டிருக்கிறார் சுந்தர்.சி. கலகலப்பு 2 படத்தை இயக்கிய பிறகு பெரிய பொருட்செலவில் பிரமாண்ட படம் ஒன்றை அவர் இயக்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படம் கைவிடப்பட்டுவிட்டது என்கிறார்கள். ஆனால் மனிதர் அசரவில்லை. தொட்டிஜெயா முகவரி உள்ளிட்ட சில படங்களை இயக்கிய துரை இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். சுந்தர் சி க்கு