பல்கலை வித்தகர் டி.ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன்,சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 2016 ஆம் ஆண்டு அந்தப் படம் வெளியானது. அதன்பிறகு வேறெந்த படத்துக்கும் இசையமைக்காத குறளரசன், தற்போது ஆல்பம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சினிமா
பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல், தாதாக்கள், அதிரடி என்று விறுவிறுப்பாக திரைக்கதையை உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 ஆம் தேதி மும்பையில் தொடங்க உள்ளது. ஒரு
2011 ஆம் ஆண்டு கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கிய சிவா, அதைத் தொடர்ந்து அஜீத்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் அண்மையில் வெளியான விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கினார். தொடர்ந்து நான்கு படங்கள் சிவா இயக்கத்திலேயே நடித்த அஜீத், இப்போது சதுரங்கவேட்டை வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். இயக்குநர் சிவா அடுத்து என்ன செய்யப்போகிறார்? அடுத்து சிவா இயக்கத்தில் சூர்யா
சிவகார்த்திகேயன் நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல். எம்.ராஜேஷ் எழுதி இயக்கியுள்ள இந்தப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏபரல் மாதம் தொடங்கிய பிறகும் அப்படம் வெளியீடு குறித்தும் பாடல்கள் வெளியீடு குறித்தும் எந்தத் தகவலும் வரவில்லை. அதேசமயம், அப்படத்தில் இடம்பெறவேண்டிய ஒரு பாடல் காட்சி இன்னும் படமாக்கப்படவில்லை என்று
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என் ஜி கே, மே 31 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சூர்யா இப்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களில் நிறைவடையவிருக்கிறது. அதைத்தொடர்ந்து அவர் இறுதிச்சுற்று இயக்குநர் சுதா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்கடுத்து சிறுத்தை சிவா, ஹரி ஆகியோர் இயக்கங்களில் சூர்யா
விஸ்வாசம் படத்துக்குப் பிறகு அஜீத் நடிக்கும் படம் நேர்கொண்டபார்வை. இந்தியில் அமிதாப்பச்சன்-டாப்சி நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தைத்தான் எடுக்கிறார்கள். இந்தப் படத்தை சதுரங்க வேட்டை புகழ் வினோத் இயக்குகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் அஜித்துடன் வித்யாபாலன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின்
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் காப்பான் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. இன்னும் ஒரு பாடல்காட்சி மட்டும் படமாக்கப்படவேண்டியிருப்பதாகச் சொல்லப்பட்டது. அது சூர்யா சாயிஷா ஆகிய இருவரும் நடிக்கும் காதல்பாடல். ஹாரிஸ்ஜெயராஜ் இசையில் கபிலன் எழுதியுள்ள அந்தப் பாடல்பதிவு மிக அண்மையில் நடைபெற்றது. அந்தப்பாடலை,அழகிய தமிழ்மகன் படத்தில் இடம்பெற்ற
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – அட்லீ கூட்டணி இணைந்துள்ளது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதில், விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.வில்லனாக இந்தி நடிகர் ஜாக்கிஷெராஃப் நடிக்கிறார். இவர்களோடு கதிர், விவேக், யோகி பாபு,
இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்றை காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. மறைந்த இயக்குநர் மகேந்திரனின் உடலுக்கு நேரில் அஞ்சலில் செலுத்தினார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் மத்தியில் கமல் பேசியதாவது: மகேந்திரனுடன் வெகுநாள் நட்பு எனக்குண்டு. படங்கள்
‘முள்ளும் மலரும்’, உதிரிப்பூக்கள்,’ஜானி’ உள்ளிட்ட மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. ரஜினிகாந்த் அளித்த பல பேட்டிகளில், ‘எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் மகேந்திரன்’ என்று கூறியிருக்கிறார். மறைந்த மகேந்திரனின்























