Home Articles posted by cadmin (Page 99)
சினிமா செய்திகள்

ஜெயம்ரவி நடிக்கும் இரண்டு புதியபடங்கள் – விவரம்

ஜெயம்ரவி நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பிரதர்.இப்படம் இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிரதர் படத்தைத் தொடர்ந்து புது இயக்குநர் அர்ஜுனன் ஜே.ஆர் இயக்கத்தில் ஜீனி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க
சினிமா செய்திகள்

வேட்டையனோடு வெளியாகும் ஜீவா படம் – விவரம்

அறிமுக இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பிளாக்’. இப்படத்தில் ஜீவாவுக்கு இணையராக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் (Potential studios) நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய, சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.
சினிமா செய்திகள்

லப்பர் பந்து வெற்றி – இயக்குநருக்குக் கைமேல் கிடைத்த பலன்

கனா, எப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் இணை இயக்குநர் மற்றும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்துக்கு வசனம் எழுதியவர் தமிழரசன் பச்சமுத்து. இவர் முதன்முறையாக எழுதி இயக்கிய படம் லப்பர் பந்து. ஹரிஷ் கல்யாண்,அட்டகத்தி தினேஷ்,சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அந்தப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல்நாளிலிருந்தே நல்ல
செய்திக் குறிப்புகள்

வெனோம் தி லாஸ்ட் டான்ஸ் – அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

மார்வெலின் மிகச்சிறந்த மற்றும் மிகவும் சிக்கலான கதாபாத்திரங்களில் ஒன்றாக வெனோம் உருவாக்கப்பட்டு உலகெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது,நடிகர் டாம் ஹார்டி ’வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ இறுதிப் படத்திற்காக திரும்புகிறார். எடி மற்றும் வெனோம் இருவரின் உலகங்ளும் வேட்டையாடப்பட்டு இருவரும் பேரழிவு முடிவுக்குத் தள்ளப்படுவதும் அதன்பின் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்வதும்தான்
சினிமா செய்திகள்

மாநாடு இருக்கட்டும் படப்பிடிப்பைத் தொடங்குங்கள் – விஜய் உத்தரவு

விஜய் நடிக்கும் 69 ஆவது படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்க உள்ளதாக செப்டம்பர் 14,2024 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கட் நாராயணா படத்தைத் தயாரிக்கிறார். முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ள நிலையில், இது அவரது கடைசிப் படம் என்று சொல்லப்படுகிறது. இதனால் படத்தின்
செய்திக் குறிப்புகள்

சேது படம்போல் சீரன் படமும் வெற்றிபெறும் – எம்.ராஜேஷ் வாழ்த்து

இயக்குநர் ராஜேஷ் எம் உதவியாளர் துரை கே.முருகன் இயக்கத்தில்,ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”. தன் வாழ்வில் சந்தித்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்,இப்படத்தின் கதை,திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார் ஜேம்ஸ் கார்த்திக்.மேலும் இப்படத்தை தயாரித்து, நாயகனாகவும் நடித்துள்ளார். ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக நடிக்க,இனியா,சோனியா அகர்வால்,ஆடுகளம்
சினிமா செய்திகள்

இனி தயாரிப்பு இல்லை – கமல் 237 படம் கைவிடப்பட்டது?

நடிகர் கமலின் 234 ஆவது படம் மணிரத்னம் இயக்கும் தக்லைஃப்.235 ஆவது படமாக தெலுங்குநடிகர் பிரபாஸின் கல்கி யும், 236 ஆவது படமாக இந்தியன் 3 ஆகியவை இருக்கின்றன. கமலின் ‘237’ ஆவது படம் குறித்த அறிவிப்பு 2024 சனவரி 12 அன்று வெளியானது.அந்த அறிவிப்பில், இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சண்டைப்பயிற்சியாளர்களாக கவனம் பெற்ற அன்பறிவ் சகோதரர்கள்
விமர்சனம்

ஹிட்லர் – திரைப்பட விமர்சனம்

காதல்,சண்டை,கொலை.விசாரணை ஆகிய அம்சங்களைக் கொண்ட கதையை ஓடும் தொடர்வண்டிக்குள் வைத்து வேகமாக்க முயன்றிருக்கும் படம் ஹிட்லர். மதுரையில் இருந்து சென்னை பயணிக்கும் நாயகன் விஜய் ஆண்டனி,தொடர்வண்டி நிலையத்தில் நாயகி ரியாசுமனைக் கண்டதும் காதலிக்கத் தொடங்கிவிடுகிறார்.அதே தொடர்வண்டிக்குள் ஓர் அமைச்சரின் பெரும்தொகையான பணம் கொள்ளை போகிறது.கொலையும் நடக்கிறது.அதை விசாரிக்க காவல்துறையும்
Uncategorized

சட்டம் என் கையில் திரைப்பட விமர்சனம்

முழுமையான கதாநாயகன் ஆக வேண்டுமென்றால் முந்தைய அடையாளத்தை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்து நகைச்சுவை நடிகர் சதீஷ் நடித்திருக்கும் படம் சட்டம் என் கையில். ஓரிரு கொலைகள், காவல்துறை விசாரணை,ஒரே இரவுக்குள் நடக்கும் கதை ஆகிய அம்சங்களைக் கொண்டு ஒரு விறுவிறுப்பான படமாகக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள். படத்தின் தொடக்கத்திலிருந்தே சதீஷின் கதாபாத்திரம் மாறுபட்டதாக
விமர்சனம்

மெய்யழகன் – திரைப்பட விமர்சனம்

பெரும் கசப்புடன் சொந்த ஊரைவிட்டுப் போய் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு திருமணத்துக்காக ஊருக்குத் திரும்ப வரும் ஒருவர், வந்த இடத்தில் ஒருவரைச் சந்திக்கிறார்.அவர் இவருடன் அன்பாகப் பழகுகிறார்.இவருக்குப் பணிவிடை செய்கிறார்.ஏராளமான விசயங்களைப் பேசுகிறார்.அவர் யாரென்றே இவருக்குத் தெரியவில்லை.அவர் யார்? என்கிற கேள்விக்கு விடையாக விரிந்திருப்பதுதான் மெய்யழகன்.