சனவரி 10,2019 அன்று ரஜினி நடித்த பேட்ட மற்றும் அஜீத் நடித்த விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியாகின. வெளியான நாள் முதல் இவ்விரு படங்களுக்கிடையே எந்தப்படம் அதிக வசூல் செய்தது? என்கிற விவாதங்கள் காரசாரமாக நடந்துவந்தன. பேட்ட 100 கோடி வசூல் செய்யும் என்று அந்தப்படத் தயாரிப்பு நிறுவனம் சொன்னது. உடனே
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கும் பாண்டி முனி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. படப்பிடிப்பில் அகோரி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஜாக்கி ஷெராப். சாதாரண நடிகர்கள் கூட தன்னை மிக உயர்ந்தவர்களாக காட்டிக் கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் மிக உயர்ந்த இடத்தில் மதிக்கக் கூடிய நிலையில் இருக்கும் ஜாக்கி சாதாரண
ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன் 1997 ஆம் ஆண்டு பிரபுதேவா கஜோல், அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடித்த மின்சார கனவு படத்தையும் 2000 ஆம் ஆண்டில், அஜீத்,மம்முட்டி, ஐஸ்வர்யாராய்,தபு உள்ளிட்ட பலர் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தையும் இயக்கினார். அதன்பின் பத்தொன்பது ஆண்டுகள் கழித்து 2019 பிப்ரவரி 1 ஆம் தேதி அவர் இயக்கத்தில் உருவான சர்வம் தாளமயம் படம் வெளியாகவிருக்கிறது.
பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாரித்துள்ள படம் க்ரிஷ்ணம். தினேஷ்பாபு என்பவர் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். அக்ஷய் கிருஷ்ணன் நாயகனாக நடிக்க, நாயகியாக ஐஸ்வர்யா உல்லாஸ் நடித்துள்ளார். கேரளாவில் குருவாயூரப்பன் அருளால் ஒருவர் வாழ்வில் நடந்த உண்மையான அற்புத நிகழ்வை அடிப்படையாக வைத்துத்தான் ‘கிரிஷ்ணம் ‘படம் உருவாகியுள்ளது. அந்த ஒருவர்
அஜீத்தின் 59 மற்றும் 60 ஆவது படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில்…. விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார் நடிக்கும் அடுத்த படத்தை பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் எல் எல் பி என்கிற நிறுவனத்தின் சார்பில் போனி கபூர் தயாரிக்க, வினோத் குமார் இயக்க உள்ளார் என்பது அறிந்ததே. 2019 ஆம் ஆண்டின் கோடை விடுமுறையில் வெளியிட வேண்டும்
விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் செக்கச்சிவந்த வானம். மல்ட்டி ஸ்டார்ஸ் படம் என்பதால் அந்தப்படம் வெற்றி பெற்றதோடு படத்தில் நடித்த அனைவருக்கும் பெயர் வாங்கிக் கொடுத்தது. இதனால் தனது அடுத்த படத்தையும் பல நடிகர்களை வைத்து எடுக்கவிருக்கிறார் மணிரத்னம். இம்முறை அவர்
நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படம் `வந்தா ராஜாவா தான் வருவேன்.’ இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் வெளிவரும் இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான அத்தரிண்டிக்கி தாரிடி படத்தின் மொழிமாற்று. இப்படத்தில் நாயகிகளாக மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் மகத், ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர்
விஜய், சிம்பு, சரத்குமார்,அர்ஜூன் உட்பட பல நாயகர்களின் படங்களை இயக்கியுள்ள இயக்குநர் ஏ.வெங்கடேஷ், தற்போது கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘நேத்ரா’. கனடா வாழ் தமிழர் பரராஜசிங்கம் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் வினய்யும், தமனும் நாயகர்களாக நடிக்கின்றனர். நாயகியாக ‘கடுகு’ படத்தில் நடித்திருக்கும் சுபிஷா
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் ஜித்துஜில்லாடி. ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தின். முதல்பார்வை இம்மாதத்தில் வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் சொல்லியிருந்தார். இன்றுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத். தேதி பற்றிய
நாயகி நிக்கிகல்ராணியைப் பார்த்ததும் காதலில் விழுகிறார் பிரபுதேவா. அவரிடம் காதலைச் சொல்வதிலேயே குழப்பம். அதைத்தாண்டி அவரிடம் காதலை வெளிப்படுத்தி திருமணம் வரை செல்கிறார் பிரபுதேவா. அந்தத் திருமணத்துக்கு முந்தைய நாள் பிரபுதேவா செய்யும் ஒரு தவறால் பெரும் குழப்பம் ஏற்பட்டு திருமணமே நின்றுவிடும் ஆபத்து. அதை எப்படி பிரபுதேவா சமாளிக்கிறார் என்பதுதான் படம். பிரபுதேவாவைப் பற்றி























