விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் செக்கச்சிவந்த வானம்.
மல்ட்டி ஸ்டார்ஸ் படம் என்பதால் அந்தப்படம் வெற்றி பெற்றதோடு படத்தில் நடித்த அனைவருக்கும் பெயர் வாங்கிக் கொடுத்தது.
இதனால் தனது அடுத்த படத்தையும் பல நடிகர்களை வைத்து எடுக்கவிருக்கிறார் மணிரத்னம்.
இம்முறை அவர் ‘பொன்னியின் செல்வன்’ கதையைக் கையில் எடுத்து இருக்கிறார்.
இந்தப்படத்தில் விக்ரம், சிம்பு ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்கிறார்கள். அவர்களோடு ஜெயம் ரவி அல்லது விஜய் தேவரகொண்டா ஆகியோரில் யாராவது ஒருவரை நடிக்க வைக்கத் திட்டமிட்டு வருகிறார் என்று சொல்லப்பட்டது.
மணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஜெயம்ரவி நடிப்பது உறுதியாகிவிட்டது என்று சொல்லப்பட்டது.
ஆனால் இது மாறிவிட்டதாம். இப்போது அந்த வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.
வந்தியத்தேவன் வேடத்தில் விக்ரம் நடிக்க அவருடைய தம்பியாக விஜய்சேதுபதி நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.
இருவரும் நடிப்பில் வல்லவர்கள் என்பதால் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்.