மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையிலுள்ள பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் நேற்று (பிப்ரவரி 4,2019) நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, திரிஷா, படத்தின் இயக்குநர் சி.பிரேம்குமார், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன்,
புது இயக்குநர் ரஜத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் தேவ். பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் தயாரிக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு பிப்ரவரி 4,2019 ஆம் தேதி நடைபெற்றது. இதில் கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி ரகுல்ப்ரீத் சிங், தயாரிப்பாளர் லட்சுமண், இயக்குனர் ரஜத் ரவிசங்கர், கேமராமேன் வேல்ராஜ் , கலை இயக்குனர் ராஜீவன், விநியோஸ்தகர் முரளி, நடிகர் ஆர்.ஜே. விக்னேஷ், நடிகை
தமிழ்நாட்டில் கண்ணுக்குத் தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் கந்துவட்டித் தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை விவரிக்கும் படம் ‘பொது நலன் கருதி’. இந்தப் படத்தில் சந்தோஷ், அருண்ஆதித் ஆகியோர் கதையின் நாயகன்களாக நடிக்க, சுபிக்க்ஷா, அனுசித்தாரா, லிசா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். படத்தின் திருப்புமுனை கதாபாத்திரங்களாக இமான் அண்ணாச்சி, பில்லா பட வில்லன் யோக்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில், இளையராஜா 75 எனும் இசை நிகழ்ச்சியும், பாராட்டு விழாவும் நடைபெற்றது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இந்த விழா பிப்ரவரி 2,3 ஆகிய நாட்களில் இரண்டு நாள் விழாவாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட கமல்ஹாசன் பேசியதாவது… இளையராஜா எனக்கு இன்னொரு அண்ணன். இறந்துபோய்விட்ட என் அண்ணன் (சந்திரஹாசன்),
அஜீத் தற்போது வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அமிதாப்பச்சன் கெளரவ வேடத்தில் நடித்த பிங்க் என்கிற இந்திப்படத்தின் மொழிமாற்றுதான் இந்தப்படம் என்கிறார்கள். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் இந்தப்படம் அஜீத் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சனவரி 10 அன்று
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 2 நாள் பாராட்டு விழா நடந்தது. 2 ஆவது நாள் நிகழ்ச்சியாக நேற்று (பிப்ரவரி 3,2019) இளையராஜாவின் இசைக் கச்சேரி நடந்தது. இதில் முன்னணி பாடகர்-பாடகிகள் பங்கேற்று இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்து பாடல்களைப் பாடினார்கள். ஹங்கேரி
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் பிரம்மாண்டமான ‘இளையராஜா 75’ விழா, பிப்ரவரி 2,2019 அன்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ்த் திரையுலகம் மற்றும் இசைத்துறையிலிருந்து பல பிரபலங்கள் வருகை புரிந்தனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். இயக்குநர்
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்த, வந்தா ராஜாவாதான் வருவேன் படம் நேற்று முன்தினம் வெளியானது. இந்தப் படத்துக்காக டிஜிட்டல் பேனர் வைப்பதற்காக ராணிப்பேட்டையிலுள்ள டிஜிட்டல் பேனர் பிரின்டிங் செய்யும் கடையில் வேலூர் மாவட்ட சிம்பு ரசிகர்மன்ற தலைவர் மச்சிமதன் இருதினங்களுக்கு முன்பு கேட்டுள்ளார். அவர்கள் மறுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த மச்சி மதன் அங்கிருந்தவர்களிடம்
சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் அஜித். இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் மொழிமாற்று இது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் ஆதிக்























