இயக்குநர் நடிகர் ராகவா லாரன்ஸ் சார்பில் நேற்றிரவு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு….. தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். அக்ஷய் குமார்,
தேவி படத்தில் தமன்னாவுக்குப் பேய் பிடிக்கும் அதை அவருக்கே தெரியாமல் சரி செய்வார் பிரபுதேவா. தேவி ப்ளஸ்டூ படத்தில் பிரபுதேவாவை ஒன்றுக்கு இரண்டு பேய்கள் பிடிக்கின்றன. அவற்றை பிரபுதேவாவுக்குத் தெரியாமலே விரட்ட தமன்னா எடுக்கும் முயற்சிகள்தாம் படம். பிரபுதேவா அப்பாவித்தனமானவர் ஸ்டைலானவர் முரட்டுத்தனமானவர் ஆகிய மூன்று விதமாகத் தோன்றுகிறார். ஒன்றுகொன்று வித்தியாசம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் இயற்கை விவசாயம் செய்து அதில் நிம்மதி காணும் பட்டதாரி இளைஞர் சூர்யா அரசியலில் நுழைந்து செயற்கையாக முன்னேறுவதுதான் என்.ஜி.கே. சூர்யா இயற்கை விவசாயியாக அறிமுகமாகும்போது அடடே என்று ரசிக்க வைக்கிறார். அதன்பின் அவருடைய பாத்திரப்படைப்பின் காரணமாக அவரை ரசிக்க முடியவில்லை. தன்னுடைய பாணியில் நடிக்க வைக்கிறேன் என்று சூர்யாவின் இயல்பையும் தொலைத்து பல இடங்களில்
இயக்குநர் ஷங்கர் இப்போது கமலை வைத்து இந்தியன் 2 படத்தைத் தொடங்கினார். தொடங்கியதோடு நின்றிருக்கிறது. அது மேற்கொண்டு வளர்வதற்கான சாத்தியக் கூறுகள் குறைந்து கொண்டேயிருக்கின்றன என்கிறார்கள். இந்நிலையில் ஷங்கர் அதிரடியாக அடுத்த படத்தைத் தொடங்கத் திட்டமிடுகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்தியன் 2 வை அப்படியே விட்டுவிட்டு முதல்வன் 2 படத்தைத் தொடங்கத் திட்டமிடுகிறாராம்.
‘மெட்ராஸ் ‘, ‘கபாலி’, ‘வடசென்னை ‘, ‘சண்டைக்கோழி-2 ‘, ‘பரியேறும் பெருமாள் ‘, ஆகிய படங்கள் மூலம் நமக்கு அறிமுகமான ஹரி கிருஷ்ணன் நாயகனாக நடிக்கும் புதிய படம் சிறகு. நடனத்திலும், யோகாவிலும் சிறந்த, அழகிய அக்ஷிதா இப்படத்தின் நாயகியாகிறார். டாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் ஆகியோர் இரு முக்கிய கதாபாத்திரங்களில்
இயக்குநர் சசிகுமார் நடிகரான பின்பு, கிராமத்து நாயகன் என்று பெயர் பெற்றிருக்கிறார். அதைத் தாண்டி அவர் நடித்த சில படங்கள் சரியாகப் போகவில்லை. இப்போது, அவருடைய திரைப்பயணத்தில் சிறப்பான இடத்தைப் பிடிக்கும் படமாக ஒரு புதிய படம் உருவாக இருக்கிறது. நான் அவனில்லை, அஞ்சாதே, பாண்டி, வன்மம், மாப்பிள்ளை, டிக் டிக் டிக் உள்பட பதிமூன்று படங்களைத் தயாரித்த நெமிச்சந்த் ஜெபக் நிறுவனம்
சென்னை-28, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, நீயா-2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெய். தற்போது இவர் லவ் மேட்டர் என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் வைபவி (இருட்டு அறையில் முரட்டுக் குத்து பட கதாநாயகி) அதுல்யா ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இப்பபடத்துக்கு இசை:சித்தார்த், ஒளிப்பதிவு :ஜீவன், தயாரிப்பு&இயக்கம் :எஸ்.ஏ .சந்திரசேகரன் . இப்படத்தின்
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சிவிரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது என்று அறிவித்திருக்கிறார்கள். அதை அறிவித்து விட்டு அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடந்துகொண்டிருக்கிறதாம். அந்தப்பணிகளின்போது முதலிரண்டு பாகங்களின் போது இல்லாத வகையில் புதிய அதிர்ச்சியைச் சந்திக்கிறதாம் தேர்வுக்குழு. முதலிரண்டு பாகங்களின் போது நிகழ்ச்சியில் கலந்து நான்
பிரபுதேவாவிடம் பல படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர் ஏ.சி.முகில்செல்லப்பன். அவருக்காக பிரபுதேவா தேதிகள் கொடுத்து தொடங்கப்பட்ட படம் பொன்மாணிக்கவேல். நேமிசந்த் ஜபக் தயாரிக்கிறார். இப்படத்தில் பிரபுதேவா, முதன்முறையாகக் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். சுரேஷ் மேனன், பிரபு, கு.ஞானசம்பந்தன், மகேந்திரன் ஆகியோர்
உடல்எடை குறைப்பு. சிகிச்சை முடிந்து சென்றுவந்தார் சிம்பு இப்போது, ஹன்சிகா நடிக்கும் ‘மஹா’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். கோவாவில் படப்பிடிப்பு நடந்துவருகிறது படத்தின் தயாரிப்பாளர் மதியழகன்,சிம்பு உடன் பணிபுரியும் மகிழ்ச்சியான அனுபவத்தால் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது, “நாங்கள் திட்டமிட்ட 8 நாட்கள் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக






















