பொன்னியின் செல்வன் நாவல் வெளியாகி 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாட்டுடைமையாக்கப் பட்ட இந்த நாவலைப் திரைப்படமாக்க எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் ஆகியோர் முயன்றார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இறுதியாக படமாக எடுக்க மணிரத்னம் களத்தில் இறங்கியுள்ளார். இந்த நேரத்தில் பொன்னியின் செல்வனை இணையதள தொடராக எடுக்கும்
கார்த்தி, விக்ரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகவிருக்கும் படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவிவர்மன். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு இன்று தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்காக மணிரத்னம் உள்ளிட்ட படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர். அங்கு சுமார் நாற்பத்தைந்து நாட்கள் படப்பிடிப்பு
இந்த டிசம்பர் மாதம் ஏராளமான படங்கள் வெளியாகவிருக்கின்றன. அதேபோல ஐந்து பெரிய படங்கள் இம்மாததில் தொடங்கவிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. டிசம்பர் ஆறாம் தேதி, நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். டிசம்பர் 12 அன்று மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில்
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் வெளியாகி ஓடிக்கொண்டிருகிறது. இதையொட்டி தனியார் தொலைகாட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தார் கெளதம் மேனன். அப்போது, ரஜினியை நீங்கள் இயக்கப் போவதாகச் செய்திகள் வருகின்றனவே? என்று கெளதம் மேனனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்… இதுபற்றி தொடர்ந்து செய்திகள் வருகின்றன. எனவே இதைச் சொல்கிறேன்.
விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆதித்ய வர்மா. சொல்லப்போனால், தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி, இந்தியில் கபீர் சிங் வரிசையில் மூன்றாவது வெர்ஷனாக வெளியாகியிருக்கிறது ஆதித்ய வர்மா. கோவக்கார நாயகனுக்கும் சாந்தமான நாயகிக்கும் இடையிலான பார்த்தவுடன் காதல், மோதல், பிரிவு, மீண்டும் சேர்தல் என்கிற நவயுக தேவதாஸ் கதை தான் இந்த ஆதித்ய வர்மா. மங்களூர்
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தனது 58 ஆவது படத்தில் நடிக்கிறார் விக்ரம். இப்படத்திற்கு தற்காலிகமாக விக்ரம்58 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப்படத்துக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்
நடிகர் விக்ரம் மகன், த்ருவ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ஆதித்ய வர்மா. தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற அர்ஜுன்ரெட்டி படத்தின் தமிழாக்கமான இந்தப் படத்தை கிரிசாயா இயக்கியுள்ளார். பாலிவுட் நடிகை பனிடா சந்து, ப்ரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆதித்ய வர்மா படம் வரும் 8 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதையொட்டி படத்தை விளம்பரப்படுத்தும்
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `துருவ நட்சத்திரம்’. இதில் விக்ரம் நாயகனாகவும், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள என்னை நோக்கிப் பாயும் தோட்டா மற்றும் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை இயக்குகிறார் கெளதம் மேனன். இவற்றில் என்னை நோக்கிப் பாயும் தோட்டா பட வேலைகள் முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் புதிய படமொன்றை
இயக்குநர் மணிரத்னம், கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கவுள்ளார். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், அமிதாப் பச்சன், சத்யராஜ் உட்பட பலர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார், கலை இயக்குநராக தோட்டா தரணி பணியாற்றவுள்ளார்.





















