அட்டகத்தி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். புதுமுக நடிகர்களை வைத்து இயக்கிய அப்படம் வெற்றி பெற்றதால், கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படமும் நல்ல கவனத்தைப் பெற்றதால் ரஜினியை வைத்து கபாலி, காலா ஆகிய இரண்டு படங்களை இயக்கிவிட்டார் பா.ரஞ்சித். அடுத்து
ஜூன் 7 ஆம் தேதி பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படம் வெளியானது. ஜூன் 7 ஆம் தேதிக்கு அடுத்த திரைப்பட வெளியீட்டுத் தேதியான ஜூன் 14 அன்று, விஜய்மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கோலிசோடா 2 படம் வெளியாகவிருக்கிறது. ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் படம் வெளியானால் அடுத்த வாரம் வேறு படங்கள் வெளியாகாது என்கிற காலம் மலையேறிவிட்டது. எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் ஒரு வாரம்
மும்பையில் தமிழர்கள் பெருமளவு வசிக்கும் தாராவி பகுதியை தூய்மை இந்தியா திட்டம் என்ற பெயரில் அபகரித்து தம் அதிகாரத்தை நிலைநிறுத்த நினைக்கும் அதிகார வர்க்கத்துக்கும், நிலத்தை வாழ்வாகக் கருதும் உழைக்கும் வர்க்கத்துக்குமான போராட்டம் தான் காலா. உழைக்கும் மக்களுக்குத் தலைவராக விளங்கும் ரஜினியின் பெயர் காலா என்கிற கரிகாலன் என்பதால் படத்தின் பெயர் காலா. சூப்பர்ஸ்டார் என்கிற
பல்வேறு சிக்கல்களுடன் நாளை திரைக்கு வரவிருக்கிறது காலா திரைப்படம். பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ரஜினியின் மனைவியாக ஈஸ்வரிராவ் நடித்திருக்கிறார். படத்தில் வில்லனாக நானா படேகர் நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் படத்துக்குப் பெரும் பலமாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்படம் வெளியாகும் அனைத்துத் திரையரங்குகளிலும், கவுதம் மேனன் இயக்கத்தில்
காலா படம் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதற்காக உலகம் முழுக்க காலா படம் அனுப்பப்பட்டிருக்கிறது. அங்கிருந்து வரும் தகவல்கள் ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கின்றன. தமிழகத்தின் திருநெல்வேலியிலிருந்து மும்பை செல்லும் ஒரு தமிழர் அங்குள்ள மக்களுக்காகப் போராடுவதுதான் காலா படத்தின் மையக்கதை என்று சொல்லப்பட்டிருக்கிறது. ரஜினி அந்த வேடத்தில் நடித்திருப்பதால் படத்துக்கு
நாளை (ஜூன் 7,2018) ரஜினி நடித்த காலா படம் வெளியாகவிருக்கிறது. கர்நாடகாவில் இப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக சென்னை போயஸ் கார்டனில் இன்று காலை 8.30 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த்.அப்போது அவர் கூறியதாவது… காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறியது சுப்ரீம் கோர்ட் ஆர்டர். இதை நான் கூறியதில் என்ன தப்பு இருக்கு என்று
ரஜினி நடித்திருக்கும் காலா படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ் தயாரித்திருக்கிறார். மருமகனின் தயாரிப்பில் ரஜினி நடிக்கிறார் என்றதுமே, இது மகளுக்கான சீதனம் என்று எல்லோரும் பேசத் தொடங்கினார்கள். ஆனால், உண்மை அப்படி இல்லையாம். இந்தப்படத்தில் நடிக்க எனக்கு இவ்வளவு சம்பளம் என்று ரஜினி கேட்டு வாங்கிக் கொண்டதாகச் சொல்கிறார்கள். படத்தில் நடிக்க ஐம்பது கோடி சம்பளம் பேசியிருக்கிறாராம்
நார்வே நாட்டில் ரஜினி நடித்த காலா படத்தைத் திரையிடப் போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு…. எமது அன்பான நோர்வே வாழ் தமிழர்கள், நடிகர் .ரஜனிகாந்த் ரசிகர்கள், மற்றும் அவருடைய நலன் விரும்பிகள் அனைவருக்கும், வணக்கம்! எமது தாயகத்தில் இருந்து ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து ஐந்து தசாப்தங்கள் கடந்து விட்டது.
காலா பட விவகாரம் தொடர்பாக ரஜினிக்கு ஆதரவாக நடிகர் விஷால் பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது…. ரஜினி சார் நடிச்த காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடக் கூடாது தடை செய்ய வேண்டும் என சில அமைப்புகள் கூறுகிறார்கள். கர்நாடகா பிலிம் சேம்பர் அவர்களிடம் பேசியுள்ளோம்.இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடந்தது நாளை காலை முடிவு எடுக்கப்படும் என கூறியிருக்கிறார்கள். சினிமா வேறு அரசியல்
காலா படத்தின் வியாபாரம் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. தமிழகத்தில், சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, திருச்சி, மதுரை,திருநெல்வேலி,கோவை, சேலம் ஆகிய விநியோக மையங்கள் உள்ளன. இவற்றில் சென்னையை சத்யம் திரையரங்குக்காரர்களுக்கும், மதுரையை பிரபல விநியோகஸ்தர் அன்புச்செழியனுக்கும், கோவையை திருப்பூர் சுப்பிரமணிக்கும், செங்கல்பட்டை அருள்பதிக்கும், சேலத்தை 7ஜி






















