திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் இறுதிநிகழ்வுகள் நேற்று (ஆகஸ்ட் 8) நடந்தன. அதிகாலை முதல் மாலை நான்கு மணி வரை பொதுமக்கள் மற்றும் அரசியல்தலைவர்கள் இறுதிவணக்கம் செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கில் கலைஞர் உடல் வைக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடி, ராகுல்காந்தி உட்பட இந்திய தமிழக அரசியல்தலைவர்கள்
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அரசியலிலலும் மூத்த தலைவர் என்பது மட்டுமின்றி கலைத்துறையில் தீவிர ஈடுபாடு காட்டியவர். இந்தியாவின் முதல்குடிமகனான குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி ஆகியோர் அவரைப் பற்றி விசாரித்து பதிவு போடுகிறார்கள். நேரடி எதிரிகளான அதிமுகவைச் சேர்ந்த தமிழக
பள்ளிப் படிப்பின் போதே நாடகங்களில் நடிக்க ஆர்வம் காட்டிய செந்தில், கல்லூரியிலும் நாடகத்தை விடாமல் தொடர்ந்தார். ஆண்டுவிழாக்களில் மட்டுமின்றி அடிக்கடி நாடகங்கள் எழுதி அரங்கேற்றுவதில் முனைப்பாக இருந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் அன்றாட வாழ்க்கையின் பின்னால் ஓடவேண்டிய கட்டாயம். பெண்டா மீடியா உள்ளிட்ட முன்னணி அனிமேஷன் நிறுவனங்களில் பணியாற்றுகிறார். அப்போது கமலின்
ஒரு நடிகராக ரஜினி எல்லாவித வேடங்களையும் செய்திருக்கிறார். சண்டை, நடனம் என்று எல்லாவற்றையும் சரியாகவே செய்திருக்கிறார். ஆனால், காலா படத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது அவர் பயந்த நிகழ்வும் நடந்திருக்கிறது. படத்தில், ரஜினியின் திருமணநாள் கொண்டாட்டம் நடக்கும். அப்போது, வாடி என் தங்கச்சிலை என்கிற பாடல் இடம்பெற்றது. திருமணநாளையொட்டி நடக்கும் கொண்டாட்டம் என்பதால், ரஜினி
ரஜினிகாந்த் நடித்து 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கோச்சடையான்’ திரைப்படம் தொடர்பான சிக்கல் இன்னும் தொடர்கிறது. கோச்சடையான் படம் தயாரிப்பு தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த ‘ஆட் பீரோ’ நிறுவனத்துக்கும், லதா ரஜினிகாந்தை இயக்குநராகவும், அவருடைய மகள் சவுந்தர்யாவை தலைவராகவும் கொண்டு இயங்கும் ‘மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட
2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியானது ‘சண்டக்கோழி’ படம். இப்போது ‘சண்டக்கோழி 2’ உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தை ஃபிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் விஷால் தயாரித்து நடிக்கிறார். இதில் கீர்த்தி சுரேஷ்,
ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மருமகன் தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான படம் காலா.ஜூன் மாதம் 7-ம் தேதி திரைக்கு வந்தது. இந்தப்படத்துக்குத் தொடக்கம் முதலே வரவேற்பு குறைவாக இருந்ததென்று சொல்லப்பட்டது. வரவேற்பு மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் காலா படம் நட்டத்தை தந்திருப்பதாகவும், சுமார் 40 முதல் 50 கோடி வரை நட்டம் ஏற்பட்டு உள்ளது என்றும் சொல்லப்பட்டது. இதனால்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கோச்சடையான் படத்தை அவரது மகள் செளந்தர்யா இயக்கினார். கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் வெளியான இந்த படத்தின் வெளியீட்டுக்கு, ஆட் பீரோ விளம்பர நிறுவனம் லதா ரஜினிகாந்த் இயக்குநராக உள்ள மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு கடன் அளித்திருந்தது. இந்தக் கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2 ஓ திரைப்படம் இவ்வாண்டு சனவரியில் வெளியாகும் என்றும் அதன்பின் ஏப்ரலில் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது. படத்தின் தொழில்நுட்பப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பட வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள். அதற்குப் பதிலாக காலா வெளியானது. 2018 ஆகஸ்ட் அல்லது இவ்வாண்டு இறுதிக்குள் படம் வெளியாகிவிடும் என்று சொன்னார்கள். ஆனால் சில நாட்களாகப் படத்தின்




















