நவம்பர் 29 ஆம் தேதி வெளியீடு என்பதால் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் பின்னணி இசைச் சேர்ப்பு, இன்னொரு பக்கம் விஎஃப்எக்ஸ் வேலைகள் மறுபக்கம் 3டி வேலைகள் ஆகியன சுற்றிச் சுற்றி நடந்துகொண்டிருக்கின்றன. இவை
ரஜினி நடித்த 2ஓ படம் நவம்பர் 29 வெளியீடு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து இப்போது கார்த்திக்சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் இறுதிக்குள் நிறைவடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. அதற்கடுத்து ரஜினி என்ன செய்யப்போகிறார்? அடுத்த படம் யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார்? என்கிற
கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் பேட்ட படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். திரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. மதுரையிலும் படப்பிடிப்பு நடக்க இருந்தது. ஆனால் சில
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கு பேட்ட என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப்படத்தின் பெயர் இன்று ( செப்டம்பர் 7) மாலை ஆறு மணிக்கு வெளியிடப்பட்டது. அப்போதிருந்து அதுபற்றி பலரும் கருத்து சொல்லி வருகின்றனர். ரஜினியின் முந்தைய படங்களான கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித் இப்படத்தின் பெயர் பற்றிக்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தயாராகி வருகிறது ‘2.0’. இந்தப் படத்தில், எமி ஜாக்சன் மற்றும் அக்ஷய் குமார் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம், வருகிற நவம்பர் 29-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘2.0’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு
நடிகர் விஷால் தன்னுடைய பிறந்தநாளான இன்று தனது ரசிகர்களைச் சந்தித்து அவர்கள் முன் கலைவாணர் அரங்கத்தில் வைத்து தன்னுடைய ரசிகர் நற்பணி இயக்கத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றி அதன் கொடியை அறிமுகம் செய்து உரையாற்றினார். அவருடைய பேச்சு…. வந்திருக்கும் அத்தனை பேருக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை இந்த மேடை மட்டும்தான். உங்களில் ஒருத்தனான நான் இன்று உங்களால் மேடை
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். இதன் இரண்டாம் பாகமாக 2 ஓ உருவாகி வருகிறது. படத்தில் நாயகியாக ஏமி ஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய் குமாரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து, கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. ரூ.450 கோடி செலவில் உருவாகும் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு மூன்று முறை
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இமயமலைப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. சென்னை, மதுரை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டு உள்ளனர். இதில் சிம்ரன் கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி, பாபிசிம்ஹாவும் நடிக்கின்றனர். விஜய்சேதுபதி வில்லன் வேடம் ஏற்றிருப்பதாகத்
கேரளாவில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு காரணமாக அம்மக்களின் நிவாரணத்துக்காக நிதி உதவி செய்யுங்கள் என்று கேரள முதல்வர் பினராயிவிஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் பலரும் கேரளாவுக்கு உதவி வருகிறார்கள். இந்நிலையில், திரையுலகப் பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர். கமல்ஹாசன் 25 இலட்ச ரூபாய், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 25 இலட்ச ரூபாய், விஷால் 10 இலட்ச ரூபாய்,
கேரளாவில் கடந்த 10 நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. 14க்கும் மேற்பட்ட மாவட்டங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். சுமார் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து, அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு 4 லட்ச ரூபாயும், வீடு இழந்தவர்களுக்கு 8




















