ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், எமி உட்பட பலர் நடித்திருக்கும் 2.ஓ படம் நவம்பர் 29 அன்று வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் வியாபாரம் இப்போது வேகமாக நடந்துகொண்டிருக்கிறதாம். இப்படத்தை கேரளாவில் வெளியிட நடிகர் மோகன்லால் விரும்பினாராம். அதனால் மற்ற விநியோகஸ்தர்கள் எவ்வளவு தொகை
இன்று (நவம்பர் 13 ) காலை தனது வீட்டின் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினி. அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த விடைகள்…. பாஜக ஆபத்தான கட்சியா என்பது குறித்து ரஜினிகாந்தின் கருத்து என்ன? நான் இன்னும் அரசியலில் முழுமையாக இறங்கவில்லை அதனால், நான் இப்போது சொல்ல முடியாது. மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். கட்சியைத் தொடங்குவதற்கான வேலைகள்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி,அக்ஷய்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 2 ஓ. இப்படத்தின். புதிய முன்னோட்டம் நவம்பர் 3,2018 அன்று வெளியிடப்பட்டது. வெகுமக்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அப்படத்துக்கு யு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் இரண்டு மணி நேரம் இருபத்துநான்கு நிமிடங்கள் இருக்கிறதாம். தணிக்கைக்குழுவில் படம் பார்த்தவர்கள் படம் நன்றாக வந்திருப்பதாக
விஜய் நடித்திருக்கும் ‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை தூக்கி எறிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது மற்றும் படத்தின் வில்லி பாத்திரத்திற்கு ஜெயலலிதாவின் இயற் பெயரை சூட்டியது ஆகியவை அதிமுகவினரை கோபம் அடையச் செய்துள்ளது. இதனால் அதிமுகவினர் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். திரையரங்குகளில் போராட்டம் நடத்தியவர்கள் பேனர்களை
நீண்ட நாட்களுக்கு பிறகு சின்னத்திரையில் சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் தீபாவளி சிறப்பு பேட்டி சூப்பர்ஸ்டார் 2.O தீபாவளி அன்று மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சி வரவிருக்கிறது. தமிழ்த்திரையுலகில் மிகவும் ஆச்சரியமாகப் பேசப்படுகிறது இந்நிகழ்ச்சி. ரஜினி தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுக்கிறார் அதுவும்
சுமார் 600 கோடி செலவில் தயாராகியிருக்கும் முதல் இந்தியப்படம் 2 ஓ. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘2.0’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார்,ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் ஷங்கர், ரசூல் பூக்குட்டி, ஒளிப்பதிவாளர்
ரஜினி நடிக்கும் 2ஓ, கமல் நடிக்கும் இந்தியன்2 உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்துக கொண்டிருக்கிறது லைகா நிறுவனம். நேரடித் தயாரிப்பு மட்டுமின்றி பிற நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களையும் வாங்கி வெளியிடுகிறது அந்நிறுவனம். இவை எல்லாமே தமிழில்தான். முதன்முறையாக தெலுங்கிலும் கால்பதிக்கவிருக்கிறது லைகா. தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன்கல்யாணை வைத்து பெரும்பொருட்செலவில் ஒரு
தமிழர் திருநாள் வாழ்த்துகள், விஸ்வாசம் திருவிழா என்கிற அடைமொழிகளோடு விஸ்வாசம் படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி வெளியிட்ட ஒரு புகைப்படம் சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. திடீரென இப்படி ஒரு புகைப்படத்தை அவர் வெளியிடக் காரணம் என்ன? விஸ்வாசம் படத்தை 2019 சனவரி மாதம் பொங்கல் நாளில் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்திருந்தது.அதையொட்டி படப்பிடிப்புக்குப் பிறகான படத்தின்
நவம்பர் 29 ஆம் தேதி வெளியீடு என்பதால் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் பின்னணி இசைச் சேர்ப்பு, இன்னொரு பக்கம் விஎஃப்எக்ஸ் வேலைகள் மறுபக்கம் 3டி வேலைகள் ஆகியன சுற்றிச் சுற்றி நடந்துகொண்டிருக்கின்றன. இவை எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இயக்குநர் ஷங்கர்
ரஜினி நடித்த 2ஓ படம் நவம்பர் 29 வெளியீடு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து இப்போது கார்த்திக்சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் இறுதிக்குள் நிறைவடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. அதற்கடுத்து ரஜினி என்ன செய்யப்போகிறார்? அடுத்த படம் யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார்? என்கிற























