செய்திக் குறிப்புகள்

விஜய் போல் விஜய்சேதுபதி – விடிவி கணேஷ் புகழ்ச்சி

விஜய்சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆரம்பம் முதலே இரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில்,விஜய்சேதுபதியுடன் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ள நிலையில்,முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை தபு மற்றும் கன்னட நட்சத்திரம் துனியா விஜய் நடித்துள்ளனர்.மேலும் பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் ஆகியோர் Puri Connects நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த திரைப்படம், JB Motion Pictures நிறுவனத்துடன் இணைந்து உருவாகியுள்ளது.

“ஸ்லம் டாக்” திரைப்படம் தமிழ்,தெலுங்கு,கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை நகரில் ஜூன் 8 அன்று நடைபெற்றது.

நிகழ்வில்,இயக்குநர் பூரி ஜெகன்நாத்,தயாரிப்பாளர் சார்மி கௌர்,நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஜேபி.நாராயண்ராவ் கொண்ட்ரோலா பேசியதாவது……

ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்.இந்தநிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
இது தயாரிப்பாளராக எனது முதல் திரைப்படம். இயக்குநர் பூரி ஜெகன்நாத் சார் மற்றும் சார்மி மேடம் ஆகியோருடன் இணைந்து இந்தபடத்தை தயாரித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.மேலும், மக்கள்செல்வன் விஜய்சேதுபதி போன்ற சிறந்த நடிகருடன் எனது முதல் திரைப்படத்தை தொடங்கியிருப்பது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.
கதாநாயகி சம்யுக்தா,தபு மேடம்,துனியா விஜய் சார் உள்ளிட்ட அனைத்து நடிகர்,நடிகைகளுக்கும் எனது நன்றிகள்.விஷ்வா,விடிவி கணேஷ்,பிரம்மாஜி மற்றும் இந்தபடத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்தை இரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் மிகப்பெரிய பொறுப்பு ஊடகங்கள் மற்றும் பத்திரிகை நண்பர்களின் கைகளில் உள்ளது.எங்களது படைப்பை மக்களிடம் கொண்டு செல்ல நீங்கள் வழங்கும் ஆதரவுக்கு முன்கூட்டியே நன்றி தெரிவிக்கிறேன். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் என் நன்றிகள். நன்றி என்றார்.

தயாரிப்பாளர் சார்மி கௌர் பேசியதாவது….

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ஊடக நண்பர்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.அதேஇடம்,அதேமுகங்கள்,அதே புன்னகைகள்.2002-ஆம் ஆண்டு ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் முதன்முதலாக சென்னை வந்த நாட்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன.அப்போது ஊடக நண்பர்களை சந்தித்தேன்.அதன்பிறகு பல படங்களில் நடித்தேன்.உங்கள் அனைவரிடமிருந்தும் நிறைய அன்பைப் பெற்றேன்.இன்றும் உங்களை சந்தித்து பேசும்போது,அந்த பாசமும்,நெருக்கமும் இன்னும் மாறாமல் இருப்பதை உணர்கிறேன்.
‘ஸ்லம் டாக்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் சென்னை வந்துள்ளேன்.ஆனால் இந்தமுறை நடிகையாக அல்ல, தயாரிப்பாளராக.எங்கள் Puri Connects நிறுவனத்தின் சார்பில் பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளோம். ஆனால் நேரடி தமிழ்திரைப்படமாக இது எங்களின் முதல் முயற்சி.அதனால் இந்தப்படம் எனக்கு மிகவும் சிறப்பானது.
‘ஸ்லம் டாக்’ ஒரு ஆக்சன் மற்றும் உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ளது.இதில் நீங்கள் மிகவும் இயல்பான,நிஜத்தன்மை கொண்ட ஆக்சன் காட்சிகளையும்,மனிதர்களின் வாழ்க்கையோடு நெருக்கமாக இணைந்த உணர்வுகளையும் காண்பீர்கள். பூரி ஜெகன்நாத் சாரின் திரைக்கதை சொல்லும் விதமும், விஜய்சேதுபதி சாரின் நடிப்பும் இணைந்து இந்தப் படத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளன.
விஜய் சேதுபதி சார் முதலில் ஒரு சிறந்த நடிகர்.அதேநேரத்தில் மிகப்பெரிய நட்சத்திரமும் கூட.ஒரு திரைப்படத்திற்கு நடிப்பு திறமையும், வணிக ரீதியான மதிப்பும் ஒருசேர தேவைப்படும்போது,அந்த இரண்டையும் சமநிலைப்படுத்தும் நடிகர் அவர்.இந்தப்படத்தில் இணைந்ததற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு,இந்தி,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிகளில் சிறந்த முறையில் இந்தப்படத்தை வெளியிடுவோம் என்று உறுதியளிக்கிறேன்.
தபு மேடத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தக்கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்திலிருந்தே அவரைத்தான் நினைத்திருந்தோம்.கதையை கேட்டவுடனேயே அவர் சம்மதித்தார்.தனது கதாபாத்திரம் மட்டுமல்லாமல்,முழுக்கதையையும் பாராட்டி எங்களுக்கு நம்பிக்கையளித்தார்.இன்றுவரை எங்களுக்கு உறுதுணையாக இருந்துவருகிறார்.
துனியா விஜய் சார் இந்தப்படத்தின் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.கதையை கேட்டவுடனேயே உடனடியாக ஒப்புக்கொண்டார். தனது படப்பிடிப்பு தேதிகளையும் எங்களுக்காக மாற்றி அமைத்துக் கொடுத்தார்.அவருடைய ஒத்துழைப்பிற்கும், அன்பிற்கும் எப்போதும் நன்றிக்கடன்பட்டிருப்போம்.
சம்யுக்தாவை முதன்முதலில் சந்தித்த தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது.கதாபாத்திரத்திற்கு மிகவும் இயல்பான தோற்றமும்,நடிப்புத் திறமையும் கொண்ட நடிகை தேவைப்பட்டது.சம்யுக்தா அந்த கதாபாத்திரத்தை மிக அழகாக உயிர்ப்பித்தார்.அவருடைய இயல்பான நடிப்பும்,எளிமையான தோற்றமும் இரசிகர்களை நிச்சயம் கவரும்.
விடிவி கணேஷ் சார் பற்றி சொல்ல வேண்டுமென்றால், சமூகவலைதளங்களில் அவருடைய வீடியோக்களை பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும்.இந்தக்கதாபாத்திரத்திற்கு அவரைத்தான் தேர்வு செய்யவேண்டும் என்று நினைத்தோம்.படத்தில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் இரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.
இந்தப்படத்தில் பிரம்மாஜியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அவருடைய பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.
எங்கள் நிறுவனத்தின் சிஇஓ விஷுரெட்டிக்கு சிறப்பு நன்றி.படப்பிடிப்புதளத்தில் இயக்குநருக்கு எந்தவிதமான அழுத்தமும் வராமல் பார்த்துக்கொண்டவர் அவர். தயாரிப்பு,மார்க்கெட்டிங்,விற்பனை,விளம்பரம் என அனைத்துதுறைகளையும் ஒரேநேரத்தில் கவனித்து இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்க உதவியுள்ளார். அவருடைய உழைப்பிற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது.
இந்தப்படத்தை ஆதரித்த ஜேபி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் முழுபடக்குழுவிற்கும் என் நன்றிகள்.‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ இரசிகர்களை பெரிதும் கவரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.இந்தப்படத்தின் மூலம் உங்களை பெருமைப்படுத்துவோம் என்றார்.

இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் பேசியதாவது..,

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.முதலில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் சாருக்கு என் மனமார்ந்த நன்றி.இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியவர் அவர்தான்.அவர் ஒரு மிகப்பெரிய லெஜெண்ட்.ஆரம்பத்தில் அவருடன் பணியாற்றுவது எனக்கு சற்று பயமாகவும்,பதட்டமாகவும் இருந்தது. ஆனால் அவருடன் இணைந்து பணியாற்றியபோது அது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக மாறியது.இந்த வாய்ப்பிற்காக அவருக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல் சார்மி மேடத்திற்கும் நன்றி.அவர் அனைவரையும் மிகவும் அன்பாகவும்,எளிமையாகவும் கவனித்துக் கொண்டார்.விஜய்சேதுபதி சாருக்கும், சுமிதா மேடத்திற்கும் என் நன்றிகள்.
இந்தபடத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.ஒவ்வொரு பாடலும் வித்தியாசமான அனுபவத்தை தரக்கூடிய வகையில் உருவாகியுள்ளது. இரசிகர்களுக்கு இது ஒரு இனிய ஆச்சரியமாக இருக்கும்.பாடல்கள் மட்டுமின்றி,பின்னணி இசையிலும் நிறைய புதுமைகளை கொண்டுவர முயற்சித்துள்ளோம். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்றார்.

நடிகர் விடிவி கணேஷ் பேசியதாவது….

இந்தபடத்தில் நடிக்கும் வாய்ப்பு திடீரென வந்தது. ஒரு நாள் பூரி ஜெகன்நாத் சார் அழைத்தார்.உடனே எனக்கு நினைவுக்கு வந்தது ‘போக்கிரி’.இன்றைய தமிழக முதலமைச்சர் நடித்த அந்த பிரம்மாண்ட வெற்றிப் படத்தின் ஒரிஜினலை இயக்கியவர் அவர்தான்.அதோடு பல மாஸ் ஹிட் படங்களை கொடுத்த மிகப்பெரிய இயக்குநர்.என் மேனேஜரும் அவரைப்பற்றி நிறைய சொல்லியிருந்தார்.அதனால் அவரை சந்திக்கும்போது ஒருவிதமான எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் நேரில் சந்தித்தபோது,அவ்வளவு பெரிய வெற்றிகளைப் பெற்ற இயக்குநர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல்,மிகவும் எளிமையான,மென்மையான மனிதராக அவரை பார்த்தேன்.அவருடன் அமர்ந்து பேசியதும், ஒன்றாக உணவருந்தியதும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
இந்தப்படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அந்த கதாபாத்திரம் பற்றிய விவரங்களை இப்போது சொல்லமுடியாது.ஆனால் அதை நடித்தபோதே மிகவும் இரசித்தேன்.பூரி சார் நடிகர்களுக்கு முழுசுதந்திரம் கொடுத்து வேலைவாங்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
தபு மேடம் இரசிகன் நான்அவருடைய அன்பையும் அவர் குழுவினரின் அன்பை நான் மறக்கமுடியாது.குறிப்பாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தபோது,தினமும் எங்களுக்கு அவர் அனுப்பிய உணவுகள் மிகவும் பிரமாண்டமாக இருக்கும்.மட்டன்,சிக்கன்,புலாவ் என பலவகையான உணவுகளை நிறைய அளவில் அனுப்புவார் அவர் கூட நடித்த அனுபவம் மறக்கமுடியாதது.அந்த அன்பும்,உபசரிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. படப்பிடிப்பு அனுபவத்தை இன்னும் இனிமையாக்கிய விஷயங்களில் இதுவும் ஒன்று.
படப்பிடிப்பின் முதல்நாளிலேயே விஜய்சேதுபதி சாரின் அர்ப்பணிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.தெலுங்கு டயலாக்குகளை எழுதி வைத்து மனப்பாடம் செய்வார். கேரவனில் உட்கார்ந்து ஓய்வெடுப்பதை விட, வெளியிலேயே அமர்ந்து தொடர்ந்து தனது வேலையில் முழுகவனத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அந்த அர்ப்பணிப்பைப் பார்த்தபோது,நான் முன்பு பணியாற்றிய இன்றைய தமிழக முதலமைச்சரின் உழைப்பும், அர்ப்பணிப்பும் நினைவுக்கு வந்தது.அதேஅளவிலான ஈடுபாட்டையும்,உழைப்பையும் விஜய்சேதுபதி சாரிடமும் பார்த்தேன்.
அதனால்தான் இன்று அவர் இந்திய அளவில் ஒரு வெற்றிகரமான நடிகராக திகழ்கிறார்.இந்த உயரத்தை அடைவதற்கு திறமை மட்டுமல்ல,கடின உழைப்பும், பொறுமையும் அவசியம்.சரியான நேரம் வரும்வரை காத்திருந்து தொடர்ந்து உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.
இந்தப்படம் வெளியான பிறகு,குறிப்பாக தெலுங்கு இரசிகர்களும் அவருடைய நடிப்பை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்.தமிழ்,தெலுங்கு என எந்தமொழியாக இருந்தாலும் அவர் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார்.அவருடைய திறமையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பூரி சார் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
நடிகர்கள் அனைவரிடமிருந்தும் சிறந்த நடிப்பை வாங்கிக் கொள்ளும் திறமை பூரி சாருக்கு இருக்கிறது.அதேநேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் ஒழுக்கமாகவும்,நேர்த்தியாகவும் செயல்படுவார். கலைஞர்களை சரியான நேரத்தில் அழைத்து, திட்டமிட்டபடி பணிகளை முடித்துவிடுவார்.அந்த தொழில்முறை அணுகுமுறையே அவரை இந்த உயரத்தில் நிலைநிறுத்தியுள்ளது.
இந்தப்படத்தில் நான் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும்,மிகவும் மகிழ்ச்சியுடன் நடித்தேன். படக்குழுவில் இருந்த உதவிஇயக்குநர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர்.இந்தப்படத்திற்காக மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. டீசரிலேயே அதன் தரம் தெரிகிறது.
‘ஸ்லம் டாக்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.இந்தப்படத்திற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுகள் அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகை சம்யுக்தா பேசியதாவது..,

பூரி ஜெகன்நாத் சாருடன் பணியாற்றியது ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது.ஒரு காட்சியை மிகவும் எளிமையாகவும்,அதேநேரத்தில் ஸ்டைலாகவும் இயக்கக்கூடியவர் அவர்.இயக்கம் என்பது ஒரு கலை. அதை அவர் மிகவும் இயல்பாக கையாள்கிறார்.சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்து,கலைஞர்களிடம் இருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொணரும் திறமை அவருக்கு இருக்கிறது.
இந்தபடத்தில் விஜய்சேதுபதி சாருடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.அவரின் ரசிகை நான்,இரசிகர்கள் திரையில் ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே பார்க்கிறார்கள்.ஆனால் ஒரு இணைநடிகையாக,ஒரு நடிகர் கதாபாத்திரமாக மாறும் அந்த அற்புதமான பயணத்தை நேரில் பார்த்திருக்கிறேன். விஜய்சேதுபதி சார் அந்த மாற்றத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறார்.அவருடன் பணியாற்றியது எனக்கு மறக்கமுடியாத அனுபவம்.அவர் மிகவும் அன்பானவர், எளிமையானவர்.
இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் பற்றி சொல்ல வேண்டுமென்றால்,அவர் உருவாக்கியுள்ள பாடல்கள் அனைத்தும் அற்புதமாக இருக்கின்றன.இதுவரை நான் கேட்ட பாடல்களே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.முழு ஆல்பத்தையும் இரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்.
எங்கள் தயாரிப்பாளர்களுக்கு சார்மி மேடமுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.அவர்கள் இந்தபடத்தில் பணத்தை மட்டும் முதலீடு செய்யவில்லை;தங்களது நேரம், உணர்வுகள் மற்றும் முழுஅர்ப்பணிப்பையும் முதலீடு செய்துள்ளனர்.குறிப்பாக சார்மி மேம்,படத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் நேரடியாக ஈடுபட்டு பணியாற்றியுள்ளார்.படப்பிடிப்புதளத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதில் அவர் எப்போதும் அக்கறை கொண்டிருந்தார்.அவரது விருந்தோம்பலும்,அன்பான அணுகுமுறையும் அனைவரையும் கவர்ந்தது.
ஜேபி சாருக்கும்,முழு தயாரிப்புக் குழுவிற்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தபடம் உரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்.நானும் இப்போதுதான் டீசரை பார்த்தேன். முழுபடத்தையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
மேலும் பூரி ஜெகன்நாத் சாருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்தபிறகு அவருடன் புகைப்படம் எடுக்க மக்கள் காத்திருப்பார்கள்.அவரது பெயரையே கொண்டாடும் இரசிகர்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு இயக்குநராக அவர் உருவாக்கியிருக்கும் அந்த பிராண்ட் மதிப்பே அவருடைய வெற்றிக்கு சான்று. முழு படத்தையும் திரையில் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்.அனைவருக்கும் நன்றி என்றார்.

இயக்குநர் பூரி ஜெகன்நாத் பேசியதாவது..,

தமிழ் ஊடக நண்பர்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ திரைப்படம் எனது முதல் நேரடி தமிழ்திரைப்படம். இந்த வாய்ப்பை அளித்த விஜய்சேதுபதி சாருக்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
ஒரு இயக்குநராக,விஜய்சேதுபதி போன்ற திறமையான நடிகர் என் மீது நம்பிக்கை வைத்து இந்தபடத்தில் இணைந்தது எனக்கு மிகவும் பெருமையான விஷயம். அவரைப்பற்றி என்னை மிகவும் கவர்ந்தது அவரது எளிமை.எப்போதும் மிகவும் இயல்பாகவும்,எளிமையான மனிதராகவும் இருக்கிறார்.படப்பிடிப்பு தளத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் ஒரு புதுமுகநடிகரைப் போலவே உற்சாகத்துடன் வருவார்.அவரது நடிப்பில் ஒரு துளி கர்வத்தைக்கூட பார்க்கமுடியாது.அந்த குணங்கள் என்னை மிகவும் ஈர்த்தன.இந்தபடத்தில் இரசிகர்கள் இதுவரை பார்த்திராத ஒரு வித்தியாசமான,சக்திவாய்ந்த விஜய்சேதுபதியை காண்பார்கள்.
சம்யுக்தாவுடன் முதல்முறையாக பணியாற்றினேன். அவர் மிகவும் உற்சாகமானவர்.இந்தபடத்தில் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் உரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் விடிவி கணேஷ் சார் எப்போதும் படப்பிடிப்பு தளத்தை உற்சாகமாக வைத்திருப்பார்.அவர் இருக்கும் இடத்தில் அனைவரின் முகத்திலும் சிரிப்பு இருக்கும். மிகவும் பாஸிடிவான மனிதர்.
கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான துனியா விஜய் இந்தபடத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அவருடைய பங்களிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. அதேபோல் ஜரீனா வஹாப் அம்மாவாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.சில காட்சிகளில் அவருடைய நடிப்பைப் பார்த்தபோது என் கண்களில் கண்ணீர் வந்தது.
பிரம்மாஜி,ரோஹன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு முழுநியாயம் செய்துள்ளனர்.இந்தபடத்தின் நடிகர் தேர்வுக்கான பெருமை முழுவதும் சார்மி கௌருக்கே சேரும். இந்த படத்திற்காக மிகச்சிறந்த நடிகர் பட்டாளத்தை அவர் ஒருங்கிணைத்துள்ளார்.
தயாரிப்பாளர்களான ஜேபி நாராயண ராவ் மற்றும் மகேந்திர ராவ் ஆகியோருக்கு எனது நன்றிகள். அவர்கள் திரைப்படத் துறையில் புதியவர்களாக இருந்தாலும்,இந்தபடத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளனர்.மேலும்,இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் அற்புதமான பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கியுள்ளார்.பாடல்கள் மட்டுமல்ல,பின்னணி இசையும் இரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.
‘ஸ்லம் டாக்’ திரைப்படத்தின் கதை இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பல பிச்சைக்காரர்களைக் கடந்து செல்கிறோம். ஆனால் அவர்களின் பின்னால் இருக்கும் வாழ்க்கை,உணர்வுகள் மற்றும் கதைகளை நாம் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டோம்.அந்த மனிதர்களின் உலகத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையாக இந்தபடம் உருவாகியுள்ளது.
இது ஒரு ஆக்ஷன் திரைப்படம் மட்டுமல்ல;வலுவான உணர்வுகளையும் கொண்ட திரைப்படம்.குறிப்பாக இன்றைய இளைஞர்கள் மற்றும் குடும்ப இரசிகர்களுக்காக இந்தபடத்தை உருவாக்கியுள்ளோம். அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்க்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி என்றார்.

நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது..,

இங்கு வந்திருக்கும் ஊடக நண்பர்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.இந்தபடக்குழுவில் உள்ள அனைவரும் படத்தைப்பற்றியும்,தங்களது அனுபவங்களைப் பற்றியும் மிகவும் அழகாக பகிர்ந்து கொண்டார்கள்.அதை கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
முதலில் துனியாவிஜய் சாரைப் பற்றி சொல்லவேண்டும். அவர் இந்தபடத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்றபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.அவரை நான் நீண்டகாலமாக கவனித்து வருகிறேன். கன்னடத்தில் அவர் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம். ஆனால் படப்பிடிப்புதளத்தில் பார்த்தபோது,மிகவும் ஒழுக்கமான,அர்ப்பணிப்பான நடிகராக இருந்தார். இயக்குநர் சொல்வதை முழுமையாகக் கேட்டு,அந்த கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக தயார் செய்து கொள்வார்.அவர் ஒரு சிறந்த மனிதர்,அற்புதமான நடிகர்.அவருடன் பணியாற்றியது எனக்கு பெருமையாக இருக்கிறது.
விடிவி கணேஷ் சாருக்கு என் நன்றிகள்.அவரைப்பற்றி எனக்கு இருந்த எண்ணம் வேறு,ஆனால் அவருடன் இணைந்து நடித்தபிறகு அவருடைய நடிப்பு திறமையை இன்னும் நெருக்கமாக புரிந்துகொள்ள முடிந்தது.ஒரு காட்சியை எப்படி இன்னும் சிறப்பாக மாற்றலாம் என்பதில் எப்போதும் ஆர்வமாக இருப்பார்.படப்பிடிப்புதளத்திலும்,திரையிலும் அனைவரையும் மகிழ்விக்கக் கூடிய ஒரு அற்புதமான கலைஞர்.அவர் இருக்கும் இடத்தில் எப்போதும் உற்சாகம் இருக்கும்.
சம்யுக்தாவுக்கு நன்றி.மிகவும் திறமையான மற்றும் புத்திசாலித்தனமான நடிகை.ஒரு கதாபாத்திரத்தை விரைவாகப் புரிந்துகொண்டு,அதை மிக இயல்பாக வெளிப்படுத்தும் திறமை அவருக்கு இருக்கிறது. படத்திற்காக அவர் எடுத்த முயற்சியும்,அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது.இன்று இந்தமேடையில் அவர் பேசியவிதமும் மிகவும் அழகாக இருந்தது.
இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வரின் இசை இந்தபடத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.நான் தற்போது டீசர் இசையை மட்டுமே கேட்டிருக்கிறேன். அது மிகவும் சிறப்பாக இருந்தது.படத்தின் முழு இசை இரசிகர்களை வெகுவாக கவரும் என்று நம்புகிறேன்.
முதலில் சார்மி மேடத்திற்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.படப்பிடிப்புதளத்தில் எவ்வளவு பெரிய சவால்கள் இருந்தாலும்,அதை மிகுந்த அமைதியுடனும் உறுதியுடனும் கையாண்டார்.ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல்,முழுபடத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக செயல்பட்டார்.இயக்குநருக்கு என்ன தேவை,அதை எப்படி சிறப்பாக செய்து முடிக்கவேண்டும் என்பதில் மட்டுமே அவர் கவனம் செலுத்துவார். இன்று நீங்கள் திரையில் பார்க்கப்போகும் இந்தப்படத்தின் தரத்தில் அவருடைய பங்கு மிகப்பெரியது.அவருடைய மன உறுதியையும்,அர்ப்பணிப்பையும் நான் மிகவும் மதிக்கிறேன்.
பூரி ஜெகன்நாத் சார் ஒரு வரலாறு.அவருடைய சினிமா பயணமும்,வாழ்க்கை அனுபவங்களும் மிகவும் ஊக்கமளிப்பவை.பல ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார்.ஒரு கதையை முடித்தவுடன் அடுத்தகதையைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுவார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு காலத்திலும் அவர் பல கதைகளை என்னிடம் பகிர்ந்திருக்கிறார்.ஒவ்வொரு கதையும் தனித்துவமாகவும்,சுவாரஸ்யமாகவும் இருந்தது.
ஒரு காட்சியை உருவாக்குவதிலும்,அதை திரையில் வெளிப்படுத்துவதிலும் அவருக்கு இருக்கும் தெளிவு அபாரமானது.அவருக்கு என்ன வேண்டும்,ஒரு ஃபிரேமில் என்ன இருக்கவேண்டும்,எந்தஅளவுக்கு இருக்கவேண்டும் என்பதில் மிகுந்த தெளிவு இருக்கும்.அப்படிப்பட்ட இயக்குநருடன் பணியாற்றும்போது ஒரு நடிகராக நமக்கு மிகுந்த நம்பிக்கையும்,பாதுகாப்பான உணர்வும் கிடைக்கும்.‘நீங்கள் பாதுகாப்பான கைகளில் இருக்கிறீர்கள்’ என்ற நம்பிக்கையை அவர் எப்போதும் கொடுப்பார்.
படம் மிகவும் வலுவான கதையுடன் உருவாகியுள்ளது. ஆக்சன்,உணர்வுகள்,மனிதஉறவுகள் என அனைத்தும் இதில் இருக்கின்றன.பூரி ஜெகன்நாத் சாரின் சிறந்த படங்களில் ஒன்றாக ‘ஸ்லம் டாக்’ இருக்கும் என்று நான் நம்புகிறேன்.இந்தப்படத்தில் அவருடைய ஈடுபாடும், நம்பிக்கையும்,உழைப்பும் மிகத்தெளிவாக தெரிகிறது.
இந்தப்படத்தில் நடித்த அனுபவத்தை நான் மிகவும் இரசித்தேன்.இயக்குநர் மற்றும் நடிகர் இடையே உருவாகும் அந்த நம்பிக்கையும்,புரிதலும் இந்தப்படத்தில் மிகவும் அழகாக அமைந்தது.பூரி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதையும்,அன்பும் இருக்கிறது.அவருடன் பணியாற்றியது மறக்கமுடியாத அனுபவம்.
‘ஸ்லம் டாக்’ திரைப்படம் அனைத்து மொழி இரசிகர்களையும் கவரும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்தபடத்திற்காக உழைத்த இயக்குநர் பூரி ஜெகன்நாத் சார்,தயாரிப்பாளர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts