சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே, உதயநிதி நடித்த கெத்து ஆகிய படங்களை இயக்கியவர் திருக்குமரன். அப்படங்களுக்குப் பின் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், ஜெயம்ரவி, விஷால் ஆகியோரை வைத்துப் படம் இயக்குவதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அவை எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் இந்திநடிகர் சல்மான்கானின் உறவினர்
செய்திகள்
விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா உட்பட பலர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் பொன்னியின்செல்வன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் இரண்டு பாகங்களாகத் தயாராகியிருக்கிறது. முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபார வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப்படத்தின் தெலுங்குப்
விஷால் நடிக்கும் 33 ஆவது படம் பற்றிய அறிவிப்பு டிசம்பர் 16,2021 அன்று மாலை ஆறு மணிக்கு வெளியானது. விஷாலின் 33 ஆவது படமான அப்படத்தை ஆதிக்ரவிச்சந்திரன் இயக்குகிறார் என்றும் தயாரிக்கவிருப்பது எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத் என்றும் அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியான சில நாட்களில் அந்தப்படத்துக்கு மார்க் ஆண்டனி என்று பெயர் வைத்ததாக அறிவித்தார்கள். அதன்பின் சில பல
நயன்தாரா நடித்த அறம் படத்தை இயக்கிய கோபிநயினார் அதன்பின், ஐஸ்வர்யாராஜேஷை முதன்மையாக வைத்து ஒரு படத்தைத் தொடங்கினார். 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்தப்படம் பத்துநாட்கள் படப்பிடிப்பு நடந்ததோடு அப்படியே நின்று விட்டது. அந்தப்படத்தை இரமேஷ் என்பவர் தயாரிப்பதாகச் சொல்லப்பட்டது. அவருக்கும் இயக்குநருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகப் படம் நடக்கவில்லை என்று அப்போது
நடிகர் விஜய்யின் 66 ஆவது படம் வாரிசு. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் இப்படத்தைத் தெலுங்குதயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். 66 ஆவது படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே 67 ஆவது படத்தின் வேலைகளும் தொடங்கியிருக்கின்றன. விஜய்யின் 67 ஆவது படத்தை மாஸ்டர் படத்தில் இணைதயாரிப்பாளராக இருந்த லலித்குமார் தயாரிக்கிறார். அப்படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்
இயக்குநர் ஷங்கர் இப்போது, கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 மற்றும் ராம்சரண் நடிக்கும் தெலுங்குப்படம் ஆகியனவற்றை இயக்கிக் கொண்டிருக்கிறார். பாதிக்குமேல் வளர்ந்து நிற்கும் இவ்விரு படங்களின் பணிகளை முடிக்கவே ஓராண்டுக்கு மேல் ஆகிவிடும் என்று சொல்லப்படுகிறது. இவைதவிர, இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் இந்திப் படமொன்றை ஷங்கர் இயக்குகிறார்.இந்தப் படம் தமிழில் விக்ரம் நடிப்பில்
2020-22 ஆம் ஆண்டிற்கான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நவம்பர் 22,2020 அன்று நடைபெற்றது. அப்போது, தயாரிப்பாளர் சங்கத்தில் மொத்தம் 1,303 வாக்குகள் இருந்தன. அவற்றில் 1,050 வாக்குகள் பதிவாகின. அத்தேர்தலில் முரளி இராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன. தேர்தல் முடிவில், முரளி இராமநாராயணன் தலைமையிலான அணி
வினோத்குமார் எனும் புதியவர் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஷால்.இது அவருடைய 32 ஆவது படம். இப்படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். இதற்கடுத்து விஷால் நடிக்கும் படம் மார்க் ஆண்டனி.விஷாலின் 33 ஆவது படமான அப்படத்தை இயக்குவது ஆதிக்ரவிச்சந்திரன். எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத் தயாரிக்கிறார்.
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் தலைவி. அப்படத்தைத் தொடர்ந்து அடுத்து அவர் இயக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு இலண்டனில் தொடங்கியுள்ளது. இந்தப்படத்தில் அருண்விஜய் கதாநாயகனாகவும் எமிஜாக்சன் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.ஒரு குழந்தைக்குத் தாயாக எமிஜாக்சன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் இலண்டனிலேயே
விஜய்சேதுபதி,சூரி,கிஷோர் மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் விடுதலை. இப்படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். எல்ரெட்குமாரின் ஆர்.எஸ் இன்ஃபோடெய்ட்மெண்ட் நிறுவனம் தயாரித்துவருகிறது. ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார்.அவர் இப்படத்திற்கான பாடல்கள் அனைத்தையும் முடித்துக்





















