தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் தற்போதைய தலைவர் முரளி இராமசாமி தலைமையிலான அணி அப்படியே போட்டியிடவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த அணியில் புதிதாக ஒரு பிரபலம்
செய்திகள்
நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைந்தார். நேற்று இரவு சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் இன்று(பிப்ரவரி 19)அதிகாலை அவர் உயிர் பிரிந்தது. இந்தத் தகவலை மயில்சாமியின் மகன் அன்புமயில்சாமி உறுதிப்படுத்தியுள்ளார்.
இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் வெற்றி பெற்றது.அதனால் அவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்தன. அவருடைய தேர்வு நடிகர் மாதவன்.அடுத்த படம் மாதவனுடன் தான் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்தப் படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த
விஜய்சேதுபதி, சூரி, கிஷோர் மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் விடுதலை.வெற்றிமாறன் இயக்கும் இந்தப்படத்துக்கு இசை இளையராஜா. ஆர் எஸ் இன்போடெயிட்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படம் இரண்டுபாகங்களாக வெளிவரவிருக்கின்றன. இவற்றில் முதல்பாகம் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை
கவின், அபர்ணாதாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கணேஷ்கே.பாபு இயக்கத்தில் உருவான படம் டாடா. ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்த இப்படம் பிப்ரவரி 10 அன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. அதேநேரம் படம் வெளியான அன்றே, இயக்குநர் கணேஷ்கேபாபு, அடுத்த படத்தை இயக்க லைகா நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டார். அடுத்த படத்துக்கான கதை என்ன என்பது முடிவு செய்யப்படவில்லை,
பிப்ரவரி 17 ஆம் தேதி தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் வெளியாகவிருக்கிறது. இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையைப் பெற்ற ல்லித்குமார், எல்லாப்பகுதிகளிலும் வியாபாரம் செய்துவிட்டார்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு விநியோகஸ்தர் என்கிற அடிப்படையில் வாத்தி வெளியாகவிருக்கிறது. அதேநாளில், மோகன்ஜி
பிரபல இந்திப்பட இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தான் ‘பதான்’. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘அழையா மழை’ பாடலில் ஷாருக்கான்-தீபிகா படுகோன் ஆகிய இருவரும் அணிந்திருந்த உடையின் நிறங்கள் சர்ச்சையானது. இதில்
தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள வாத்தி படம்தான் அவருடைய அடுத்த வெளியீடு.பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தில் சம்யுக்தா மேனன்,சாய்குமார், தனிக்கெல்லா பரணி, சமுத்திரக்கனி, தொட்ட பள்ளி மது, நரா சீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு,’ நான் கடவுள் ‘ ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி மற்றும் பிரவீனா ஆகியோர் முக்கிய
இயக்குநர் சுந்தர்சி நடிகை குஷ்பு தம்பதியருக்கு அவந்திகா, அனந்திகா ஆகிய இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர்களில் மூத்த மகளான அவந்திகா திரைத்துறைக்கு வருகிறார் என்று சொல்லப்பட்டது. உடனே அவர் கதாநாயகியாக நடிக்கப்போகிறார் என்கிற செய்திகள் வரத்தொடங்கின.அது எப்போது? என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், அவர் தற்போது திரைத்துறைக்கு வந்துவிட்டார். அது வெளியில் யாருக்கும் தெரியவில்லை.
விஜய்சேதுபதி அடுத்து சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தில் சந்தானம் இன்னொரு கதாநாயகன் போல் நடிக்கவிருக்கிறார். சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம்ரவி ஆர்யா உட்பட பலர் நடிப்பில் சங்கமித்ரா என்கிற படம் உருவாகும் என்று சொல்லப்பட்டது. இந்தப்படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்த தேனாண்டாள் நிறுவனம் பொருளாதாரச் சிக்கலில் சிக்கியதால் அது நடக்கவில்லை. இப்போது




















