நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாகடர் திரைப்படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று பிப்ரவரி 3,2021 அன்று காலை 11 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அதன் வெளீயீட்டைத் தள்ளிப்போட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மே மாதம் ரம்ஜான் பண்டிகையையொட்டி படத்தை
செய்திகள்
அண்மையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் சூரரைப் போற்று படத்தைத் திரையிடமாட்டோம் என்று முடிவெடுத்தார்கள். அந்தப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாகிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் இப்படம் குறித்து இப்போது கூட்டம் போட்டு முடிவெடுக்கக் காரணம் என்ன? சனவரி மாதத்தில் சூரரைப் போற்று தமிழ்த் திரைப்படம் ஆஸ்கர் விருதுப் போட்டிக்குப் போகவிருக்கிறது என்று சொன்னார்கள்.
2018 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வெளியான இந்திப்படம் அந்தாதூன். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் வென்றது. இந்தப் படத்தின்
2019 நவம்பர் 15 ஆம் தேதி வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற மலையாளப் படம் ‘ஹெலன்’.அறிமுக இயக்குநர் மாத்துக்குட்டி சேவியர் இயக்கியிருந்த அந்தப்படத்தில் ஹெலனாக, ‘கும்பளங்கி நைட்ஸ்’ நாயகி அன்னா பென் நடித்திருந்தார். அப்பா வேடத்தில் லால் நடித்திருந்தார். அந்தப்படத்தை அன்பிற்கினியாள் என்கிற அழகிய தமிழ்ப்பெயரோடு தமிழில் எடுத்திருக்கிறார்கள்.கோகுல் இயக்கத்தில் அருண்பாண்டியன்
எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, விவேக், இயக்குநர் மோகன்ராஜா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இசக்கிதுரை என்பவர் தயாரித்துள்ளார். இந்தப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இதுதொடர்பாக படத்தின் இயக்குநர் வெங்கட கிருஷ்ண
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ரெஜினா நந்திதா உட்பட பலர் நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ள இந்தப்படம் சில காரணங்களால் வெளியிடத் தாமதமானது. இப்போது அந்தப்படத்தை ராக்போர்ட் எண்டர்டெயிண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படம் மார்ச் 5 ஆம் தேதி வெளியாகிறது என்று அறிவித்து அதற்கான வேலைகளில்
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கிஷோர்,நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் புதியபடம் உருவாகி வருகிறது. ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது.இப்படத்தை வெற்றிமாறனே தயாரித்து, இயக்கி வருகிறார். இப்படத்துக்கு இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார். இதற்கான பாடல்கள் அனைத்தையும் முடித்துக்
அண்மையில் வெளியான வேட்டைநாய் படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் சுபிக்ஷா. ராணி எனும் அவருடைய வேடத்துக்கு நல்ல வரவேற்பு.அதனால் மகிழ்ச்சியில் இருக்கும் அவரிடம் ஒரு பேட்டி… 1. இந்தப்படத்தை ஒப்புக்கொண்டது எப்படி? படத்துக்குப் படம் என்னுடைய வேடம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். இந்தப்படத்தின் இயக்குநர் கதை சொன்னதும் எனக்குப் பிடித்திருந்தது. பள்ளி
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரவிவர்மன்
கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். அப்படம் பல காரணங்களால் தடைபட்டிருக்கிறது. இந்நிலையில், ஷங்கர் இயக்கவிருக்கும் புதியபடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியானது. அதில், இயக்குநர் ஷங்கர் – தெலுங்கு நடிகர் ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணைந்துள்ள புதிய படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும்




















