விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் அந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு. அடுத்து சென்னையிலேயே சுமார் நாற்பது நாட்கள் படப்பிடிப்பு
செய்திகள்
விஜய்சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் துக்ளக் தர்பார். டெல்லி பிரசாத் தீனதயாளன் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தை, லலித்குமார் தயாரித்துள்ளார். இப்படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகிறது என்று சொல்லப்படுகிறது. இத்தகவலை தயாரிப்புத்தரப்பு மறுத்துவருகிறது. ஆனாலும் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவே சொல்கிறார்கள்.
தமிழகத்தில் பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது திரைத்துறையில் திமுக வினர் தலையீடு அதிகமாக இருந்ததாகக் குற்றச்சாட்டு இருந்தது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் , சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் ஆதிக்கம் இருக்கும் என்கிற அச்சம் திரைத்துறையினர் மத்தியில் இருக்கிறது அல்லது உருவாக்கப்படுகிறது. இது தொடர்பாக திரையுலகில் பல்லாண்டு
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்காக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்டு மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகிய மூன்று அமைப்புகள் ஏற்கெனவே இருக்கின்றன. இந்நிலையில், கடந்த ஆண்டு பாரதிராஜா தலைமையில் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்கிற அமைப்பும் டி.இராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்கிற அமைப்பும் உருவாகின. இவற்றில்
‘ராஜா ராணி’, ‘கத்தி’, ‘தெறி’,‘மாரி’, ‘நட்பே துணை’ பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் செல்லதுரை. ‘மாரி’ படத்தில் இவர் பேசும் ‘அப்படியா விஷயம்’ என்ற வசனம் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம். இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 29) மாலை சென்னை பெரியார் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.அவருக்கு வயது 84. அவருடைய இறுதிச் சடங்கு இன்று
கனா கண்டேன், அயன், கோ, மாற்றான், காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கே.வி.ஆனந்த். குமார் வெங்கடேசன் ஆனந்த் என்ற இயற்பெயரை கொண்டவர். பத்திரிகை புகைப்படக்காரராக இருந்த இவர் 90களில் ஒளிப்பதிவாளராக தனது திரைப்பயணத்தை துவக்கினார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்து கோபுர வாசலிலே, மீரா, தேவர் மகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பணியாற்றினார். பின்னர் 1994ஆம் ஆண்டு
2020 சனவரியில் வெளியான ரஜினி நடித்த தர்பார் படத்தை இயக்கியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின்,விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து அவர் என்ன செய்யப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.பல நாட்கள் பல்வேறு
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா 2014ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவுவதாக அறிவித்தார். தனது பெயரை அப்துல் ஹாலிக் என்றும் மாற்றிக் கொண்டார். அண்மையில், குரானிருந்து சூழ்ச்சியாளர்களிடமிருந்து இறைவன் காப்பாற்றுவான் எனும் பொருள் தரும் வரிகளை தனது சமூக வலைதளப் பக்கங்களில் யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்திருந்தார். இதற்கு ஒரு ரசிகர், ‘உங்கள் இசைக்காகத்தான் நான் உங்களைப்
எஸ்டிசி சினிமாஸ் பகித் உஸ்மான் என்பவருடன் பிரபல விநியோகஸதர், தயாரிப்பாளர் மற்றும் முக்கிமான நிதியாளர் என்கிற பெருமைகளைக் கொண்ட மதுரை அன்பு இணைந்திருக்கிறார். இருவரும் இணைந்து ஏஎஃப்ஓ எண்டர்டெயிண்ட்மெண்ட் என்கிற புதிய நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிறுவனம் மூலம் அனைத்து மொழித் திரைப்படங்களும் விநியோகம் செய்யப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். மதுரை அன்புவின்
கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல், பிற படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினரும் கலந்து பேசித் தீர்வு காண அறிவுறுத்தியது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி





















