Home செய்திகள் Archive by category சினிமா (Page 311)

சினிமா

சினிமா செய்திகள் நடிகர்

விக்னேஷ்சிவன் இப்படி செய்யலாமா? – விஜய் கோபம்

2012 ஆம் ஆண்டு வெளியான சிம்பு நடித்த போடாபோடி, 2015 ஆம் ஆண்டு வெளியான விஜய்சேதுபதியின் நானும் ரவுடிதான், 2018 சனவரியில் வெளியான சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியவர் விக்னேஷ்சிவன். இவர் இயக்குநர் என்பதைவிட நயன்தாராவின் காதலர் என்பதால் அதிகம் அறியப்பட்டவர். இவருக்கு தானா
சினிமா செய்திகள்

கபாலி 18 காலா 5 – கவலை கொள்ள வைக்கும் கர்நாடக கணக்கு

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா திரைப்படம் ஜூன் 7 அன்று வெளியானது. இப்படத்தைக் கர்நாடகாவில் வெளியிட கடும் எதிர்ப்பு நிலவியது. நீண்ட சமரசங்களுக்குப் பின்னர் கடைசி நேரத்தில் கர்நாடகத்தில் படத்தை வெளியிடும் முடிவு எடுக்கப்பட்டது. இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியில் வெளியான படத்துக்கு மக்கள் ஆதரவு இல்லாமல் போய் விட்டது. இந்தப்படம் மொத்தமாக் சுமார் ஐந்துகோடி வரை வசூல்
சினிமா செய்திகள் நடிகை

சர்ச்சை இயக்குநருடன் இணைந்த நயன்தாரா

சர்ச்சைக்குரிய குறும்படங்களான மா, இலட்சுமி ஆகியவற்றின் மூலம் கவனம் பெற்றவர் கே.எம்.சர்ஜுன். இரண்டுமே பாலியல் தொடர்பான குறும்படங்கள் என்பதால், இவை பரவலான கவனத்தையும் கடும் விமர்சனங்களையும் சந்தித்தன. மிகப்பெரிய விவாதத்தையும் சமூக வலைதளங்களில் எழுப்பின. கே.எம்.சர்ஜுன், ‘எச்சரிக்கை: இது மனிதர்கள் வாழும் இடம்’ என்ற முழுநீள படத்தையும் இயக்கியுள்ளார். வரலட்சுமி சரத்குமார்,
சினிமா செய்திகள்

காலா படத்தால் திலீபனுக்கு நடந்த நன்மை

2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான படம் வத்திக்குச்சி. இந்தப்படத்தில் அறிமுகமான நாயகன் திலீபன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் உறவினர். அஞ்சலியோடு இணைந்து நடித்த வத்திகுச்சி திரைப்பட நாயகன் திலீபனுக்கு அப்படம் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏஆர் முருகதாஸ் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு பிறகு திலீபன் நாயகனாக நடிக்கத் தொடங்கிய படம் குத்தூசி.
சினிமா செய்திகள்

வட போச்சே – இயக்குநர் ஷங்கர் ஏமாந்த கதை

டிராஃபிக் ராமசாமி என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் ஜூன் 11 அன்று நடைபெற்றது, பாடல்களை கவிஞர் வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார். விழாவில், இயக்குநர் ஷங்கர் பேசும் போது, இந்த டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும்
சினிமா செய்திகள்

அனுமதியின்றி வெளியிடப்பட்ட விஜய் புகைப்படத்தால் சர்ச்சை

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் கீர்த்திசுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துவருகிறது. படத்தின் பெயரும் முதல் பார்வையும் விஜய் பிறந்த நாளில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் நடித்தபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் புகைப்படத்தில் விஜய் தரையில்
சினிமா செய்திகள் நடிகர்

விளக்கை அணைத்து சூர்யாவை வெளியேற்றிய தியேட்டர்

நடிகர் சூர்யா தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் , படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா , நாயகன் கார்த்தி , 2டி எண்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர பாண்டியன் , இயக்குநர்
சினிமா செய்திகள் நடிகர்

ஜீவாவின் ஜிப்ஸி படத்தில் அமெரிக்கப் பாடகி

ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நாயகனாகவும் புதுமுகம் நடாசாசிங் நாயகியாகவும் நடிக்கும்புதியபடம் ஜிப்ஸி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று நாகப்பட்டினத்தில் தொடங்கியது. பயணத்தை மையமாகக்கொண்டு ராஜூமுருகன் எழுதிய தொடரையே படமாக எடுக்கிறார்கள். நாகப்பட்டினத்தில் முப்பது நாட்கள் நடக்கவிருக்கிறதாம். அதைத் தொடர்ந்து கேரளாவில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம். அம்பேத்குமார்
சினிமா செய்திகள்

முதல்பார்வையிலேயே பரபரப்பை ஏற்படுத்திய ஜிப்ஸி

குக்கூ,’ ‘ஜோக்கர்’ ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்து தேசிய விருது பெற்ற இயக்குநர்ராஜுமுருகன். இவருடைய இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகனாக ஜீவா இணைகிறார். இந்தப்படத்துக்கு, ‘ஜிப்ஸி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்தப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிக்க மாடலிங் மங்கையான நடாஷா சிங் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி போட்டியில்
சினிமா செய்திகள் நடிகர்

தந்தை நினைவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி – கலங்கும் ரசிகர்கள்

சிவகார்த்திகேயனின் தந்தை தாஸ் சிறைத்துறையில் பணியாற்றியவர். பதினைந்தாண்டுகளுக்கு முன்பாக அவர் மறைந்துவிட்டார். அவர் மறைந்து இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் அவரோடு பணியாற்றிய சிறைத்துறை காவலர் செளந்தர்ராஜா என்பவர், அவர் என்னுடைய ஆபீசர், அவரிடம் பணியாற்றியதற்காக பெருமைப்படுகிறேன்.அவருடைய நினைவுகள் மறக்கமுடியாதவை என்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு, என் தந்தை மறைந்து