ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் வேலைகள் வேகமாக நடந்துவருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் தொடங்கும்போதே தீபாவளி வெளியீடு
சினிமா
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் இப்போது, ‘விசுவாசம்’ படத்தில் நடித்து வருகிறார். அதில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முதல் கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடைபெற்றது. அஜித்,நயன்தாரா சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளும், ஒரு சண்டைக் காட்சியும் அங்கு படமாக்கப்பட்டன. அத்துடன் முதல் கட்டப்
எழுத்தாளர் கார்முகிலின் காலா பற்றிய பார்வை…. காலா பார்த்தேன். ரஞ்சித் பெரிய ஆள். பெண் பாத்திரங்கள் அற்புதம். உருவிய சுடிதாரை எடுக்காமல் கட்டையை எடுக்கும் பெண்ணை மறக்க நாளாகும். க்ளைமாக்ஸ் காட்சியில் கருப்பு, சிகப்பு, நீல வண்ணங்களின் எழுச்சி அருமையான கலாப்பூர்வம். எல்லாவற்றையும் தானே செய்து முடிக்கும் ஒரு ஹீரோ படத்தில் இப்படி ஒரு க்ளைமாக்ஸ், இவ்வளவு பாத்திரங்கள்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் சீமராஜா. 24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பாக ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 19 உடன் நிறைவடைந்தது. இறுதிநாள் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் ஆகிய அனைவரையும் ஒருங்கிணைத்து
இயக்குநர் சிவா இயக்கி வரும்‘விசுவாசம்’படப்பிடிப்பில் அஜித் கலந்துகொண்டிருக்கிறார். ஐதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் அதற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கே திட்டமிட்ட நாட்களை கடந்து படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து வருவதால் அஜித்திற்காக போடப்பட்ட அறையை நீட்டிக்க வேண்டிய நிலை எழுந்தது. ஆனால் அந்த அறை பாலிவுட் ஆக்டர் ரன்வீர் சிங்கிற்கு ஏற்கெனவே புக் செய்யப்பட்டதால்
கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் பலமே ஓவியாதான். கடந்த ஆண்டு அவர் பிக் பாஸ் போட்டியின் மூலம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார். வெளிப்படையாகக் கருத்தைக் கூறுவது, உதாசீனப்படுத்தியவர்களை அலட்சியமாகக் கையாண்டது போன்றவை அவருக்கு பலத்த வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ஓவியா ஆர்மி என்று ஒன்றை ரசிகர்கள் ஆரம்பித்ததும், ஓவியாவை ஜூலி எதிர்த்து நடந்ததால் அவர் வெளியே
அயன்,மாற்றான் ஆகிய படங்களைத் தொடர்ந்து சூர்யா, கே.வி.ஆனந்த் இருவரும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்தப் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் இலண்டனில் தொடங்கவிருக்கிறது. ஜூன் 25-ம்
இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஹோசிமின், பரத், ரேணுகா மேனன் நடித்த பிப்ரவரி 14 , சத்யராஜ், சாந்தனு, சனா கான் நடித்த ஆயிரம்விளக்கு ஆகிய படங்களை இயக்கியவர். இவரது அடுத்த திரைப்படத்துக்கான பணிகள் நடந்துவரும் நிலையில், புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். இன்றைய கால கட்டத்தில் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை நட்சத்திரங்கள் ரெஸ்டாரண்ட், கிரிக்கெட், கால் பந்து அணி,
காலா படத்தைத். தொடர்ந்து , அதன் இயக்குநர் பா.இரஞ்சித் விஜய் படத்தை இயக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டது. பா.இரஞ்சித்தை அழைத்து விஜய் பேசியதால் அச்செய்தி பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், அதற்கு முன்னால் எனக்கு ஒரு படம் செய்து கொடுங்கள் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இரஞ்சித்திடம் கேட்டிருக்கிறாராம். ஏற்கெனவே ஞானவேல்ராஜா தயாரிப்பில் மெட்ராஸ் படத்தை இரஞ்சித் இயக்கினார். அப்போதே
சிவகுமார் கல்வி அறக்கட்டளையின்’ 39 ஆம் ஆண்டு நிகழ்வு , சென்னை வடபழனி பிரசாத் லேப்-ல் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசியது…. கல்வி, ஒழுக்கம் இவ்விரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது. அப்படி வாழ்ந்து, உணர்ந்து கற்றுக் கொண்ட விஷயத்தைத் தான் எடுத்துச் சொல்றோம். 50 வயசுக்குப் பிறகு இப்படி இருந்திருக்கணுமோ என்று யோசிக்காமல், அப்படி




















